Showing posts with label தமிழகம் -அரசியல் -தேர்தல். Show all posts
Showing posts with label தமிழகம் -அரசியல் -தேர்தல். Show all posts

Tuesday, March 22, 2011

தி.மு.க., வெற்றி உறுதி



கூட்டணி அமையும் விதத்தையும்..கட்சிகள் சென்ற தேர்தலில் வாங்கிய ஒட்டு விகிதத்தையும் வைத்து..யாருக்கு எவ்வளவு விழுக்காடு வாக்குகள் கிடைக்கும் என தீர்மானித்து வெற்றியை அனுமானிப்பது ஒரு வகை..இது ஒரு வகையில் சரியில்லை எனலாம்.

உதாரணமாக 119 இடங்களில் மட்டுமே போட்டியிடும் தி.மு.க., விற்கு விழும் வாக்குகளை விட 160 தொகுதிகளில் விழும் அ.தி.மு.க., வின் வாக்குகள் அதிகமே இருக்கும்..உடன் அ.தி.மு.க., ஆதரவு பெருகுகிறது என்று சொல்லுவது சற்று அபத்தம்.அதுபோல காங்கிரஸ் போட்டியிடும் தொகுதியில் அதற்கு விழும் தி.மு.க., வாக்ககளை கணக்கில் கொள்ளாமல் காங்கிரஸிற்கு ஆதரவு பெருகுகிறது என்பதும் அபத்தம்.

ஆனால் நடைமுறையில் சர்வே இப்படித்தான் பத்திரிகைகள் எடுக்கின்றன.அவர்கள் வாதம் மற்ற தொகுதியில் போட்டியிடும் அந்தக் கூட்டணிக் கட்சியின் ஓட்டுகளும் அதே சதவிகிதத்தில் உள்ளன ..என்பதே.

அதே முறையில் இந்த முறை சர்வே சொல்வது என்ன..

தி.மு.க., பா.ம.க., வி.சி.கே., காங்கிரஸ் இவை வாங்கும் வாக்குகளின் சதவிகிதம்..அ.தி.மு.க.,தே.மு.தி.க., இரு கம்யூனிஸ்ட்கள் வாக்கும் வாக்குகளை விட அதிகம்..இருக்கும்

ஆகவே இன்றைய நிலையில் தி.மு.க., அணிக்கு வெல்லும் வாய்ப்பு அதிகம்.

ம.தி.மு.க., அ.தி.மு.க., அணியில் இருந்திருந்தால்..இரண்டு கூட்டணிகளுக்கும் சம பலம் இருக்கும்..யார் வெல்வார்கள் என கணிப்பதும் சற்று கடினம்.

மதி.மு.க., பா.ம.க., போலவோ, வி.சி.கே.,போலவோ ஒரு சில மாவட்டங்களில் வலிமை பெற்றதல்ல.வை.கோ.வின் ஆதரவாளர்கள் தமிழம் முழுதும்..அனைத்துத் தொகுதிகளிலும் உள்ளனர்.

ம.தி.மு.க., தேர்தலை புறக்கணிப்பதாய் கூறினாலும்..அந்தக் கட்சியின் தொண்டர்கள் வாக்களிக்காமல் இருக்கப் போவதில்லை.

அவர்கள் வை.கோ.,வை உண்மையில் நேசிப்பவர்கள்.

அதனால்..தன் தலைவனுக்கு ஜெ யால் ஏற்பட்ட அவமானத்தை அவர்கள் மறக்க மாட்டார்கள்..ஆகவே அவர்கள் வாக்குகள் ஜெ க்கு எதிர் அணிக்கே விழும்..

அப்போது தி.மு.க., விற்கு வாக்குகள் விழுக்காடு அதிகமாகி வெல்லக் கூடிய தொகுதிகள் அதிகமாகும்.

தி.மு.க., வெற்றி கூட்டணியாய் இம்முறை திகழ கணிசமாய் வை.கோ., ஆதரவாளர்கள் வாக்குகள் இருக்கும் என உறுதியாய் கூறலாம்

இன்றைய நிலையில்..தி.மு.க., மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என உறுதியாய் கூறலாம்.

Wednesday, March 16, 2011

ஜெ ஏன் இந்த முடிவெடுத்தார்..





வை.கோ.வுடன் தொகுதி பங்கீடு முடியவில்லை.

மற்ற கூட்டணிக் கட்சிகளுடன் உடன்பாடு ஏற்பட்டாலும் தொகுதிகள் ஒதுக்கப் படவில்லை.

இந்த நிலையில் ஜெ ஏன் அவசரப் பட்டு 160 தொகுதிக்கான வேட்பாளர்களை அறிவித்தார்.

என் அரசியல் நண்பர்..அ.தி.மு.க., வைச் சேர்ந்தவர் அவருடன் உரையாடுகையில் அவர் தந்த தகவலை அப்படியே தருகிறேன்.

ஜெ ..தி.மு.க., வால் காங்கிரஸ்,பா.ம.க., வி.சி.க.,விற்கு ஒதுக்கப் பட்ட தொகுதிகளைப் பார்த்ததும் இம் முடிவெடுத்தார் என்கிறார்.

காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியுள்ள பல தொகுதிகளில் ..அ.தி.மு.க., வெற்றி பெறும் வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது.ஆகவே ம.தி.மு.க., வின் 4 சதவிகித ஓட்டுவங்கி தனக்கு ஆதரவாய் இல்லையெனினும் பரவாயில்லை என முடிவெடுத்தார்.ஆனால்..இது கம்யூனிஸ்ட்கள், தே.மு.திக., வையும் அதிருப்திக்கு உள்ளாக்கும் என நினைக்கவில்லை.

ஆனாலும்..இனி எதற்கும் அம்மா தயார் 'என்றார்.

இது எவ்வளவு தூரம் உண்மையாய் இருக்கக் கூடும் என தெரியவில்லை.

ஆனால்..ஒன்று மட்டும் புரிகிறது..

அம்மாவின் அகங்காரம் இன்னும் குறையவில்லை..என்று.

Sunday, March 6, 2011

பிரச்சனைக்கு தொகுதிகள் காரணமல்ல..காங்கிரஸ்



இந் நிலையில் திமுக மத்திய அமைச்சரவையிலிருந்து வெளியேறுவதற்கு தொகுதிகள் ஒதுக்கீடுப் பிரச்சனை காரணமல்ல என்று அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான திக்விஜய் சிங் கூறியுள்ளார்.

காங்கிரஸ் 63 இடங்களைக் கேட்பதாகவும், கேட்கும் தொகுதிகள் தரப்பட வேண்டும் என்றும் கோருவதாகவும் திமுக குற்றம்சாட்டியுள்ளது. ஆனால், பிரச்சனை அதுவல்ல என்று டெல்லி பத்திரிக்கையாளர்களிடம் காங்கிரஸ் தரப்பு மறுத்து வருகிறது.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தனது குடும்பத்தினரை சிபிஐ விசாரிக்கக் கூடாது என்ற திமுக தலைமையின் கோரிக்கையைப் பிரதமர் அலுவலகம் நிராகரித்து விட்டதும், இது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் பேச முடியாத வகையில், ராகுல் காந்தி தரப்பு முட்டுக் கட்டை போட்டதும் தான் திமுகவின் கோபத்துக்குக் காரணம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

நீதிமன்ற நெருக்கடியால் அடுத்த சில நாட்களில் கனிமொழி மட்டுமன்றி கலைஞர் தொலைக்காட்சியின் முதலீட்டாளர் என்ற வகையில் முதல்வரின் மனைவி தயாளு அம்மாளையும் சிபிஐ கேள்வி கேட்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருப்பதால் தான் திமுக இந்த முடிவுக்கு வந்துள்ளது. தொகுதிப் பங்கீட்டில் பிரச்சனையை உருவாக்கி அதை ஒரு காரணத்தை வைத்து கூட்டணியிலிருந்து வெளியேறி விட்டால், பின்னர் தங்களை சிபிஐ விசாரணை செய்தால், கூட்டணியிலிருந்து விலகியதால் காங்கிரஸ் தங்களை பழி வாங்குவதாகக் கூறிக் கொண்டு அனுதாபம் தேடிக் கொள்ளலாம் என திமுக நினைக்கிறது என்கிறார்கள் டெல்லி காங்கிரஸ் வட்டாரத்தில்.

இதனால் தான் திமுகவுடன் காங்கிரஸ் தரப்பு பேச்சு நடத்தாமல் உள்ளது. வெறும் தொகுதிப் பங்கீடு பிரச்சனை என்றால் உடனே பேசித் தீர்வு கண்டிருக்க முடியும். இங்கு பிரச்சனை தொகுதிகள் அல்ல.. ஸ்பெக்ட்ரம் விசாரணை தான் என்கிறார்கள்.