அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுவிட்டது.
ம.தி.மு.க.விற்கு இடமில்லை..
இதற்கு மேல் வைகோ இறங்கி வந்து...கொடுத்த தொகுதிகளை ஒப்புக் கொள்வார் என்று தோன்றவில்லை.அப்படியே ஒப்புக் கொண்டாலும் அது அவரது தன்மானத்திற்கு இழுக்கு.
ஆக..இந்நிலையில் வை.கோ., செய்ய வேண்டியது என்ன..
தமிழனின் முதல் எதிரி காங்கிரஸ்..காங்கிரஸ் எங்கெல்லாம் போட்டியிடுகிறதோ..அங்கெல்லாம் அதைத் தோற்கடிக்க வேண்டும்.
வை.கோ.,வின் முயற்சி அதுவாய் இருக்கட்டும்.
காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து..அங்கு தன் கட்சி வேட்பாளர்களை நிறுத்தட்டும்..வெற்றி முக்கியமல்ல..காங்கிரஸ் தோல்வி முக்கியம்..அதைத் தன்னால் ஓரளவு செய்ய முடியும் என நிரூபிக்கட்டும்.
அப்படி போட்டியிடும் தொகுதியில்..வாங்கும் ஒவ்வொரு ஓட்டும்..விலை மதிப்பற்றது.
வை.கோ., சீமான்..ஆகியோர் இனி இதைத்தான் செய்ய வேண்டும்.
தேவைப்பட்டால்..கருத்து ஒருமித்த சில சிறு கட்சிகளுடன் வை.கோ., கூட்டு சேர்வதில் தவறில்லை.