கடந்த ஓரிரு மாதங்களாக..கலைஞர்பால் அன்பு கொண்டவர்களும்..என்னைப்போன்ற கழக ஆதரவாளர்களும்..அவரை பற்றி
சிறு குறைகளையும்...நமது அதிருப்தியையும் தெரிவித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
ஆமாம்..அவர் என்னதான் செய்திருக்க வேண்டும்..
1.தமிழக எம்.பி.க்கள் ராஜிநாமா செய்திருக்க வேண்டும்
2.கலைஞர் ராஜினாமா செய்திருக்க வேண்டும்
இந்த இரண்டு ஆப்ஷன்ஸ் தான் செய்திருக்க முடியும்..
முதலில் சொன்ன எம்.பி.க்கள் ராஜிநாமா...செய்திருந்தால் என்னவாகி இருக்கும்...சற்று யோசிப்போம்..
நாடாளுமன்ற தேர்தல் சற்று முன்னரே வந்திருக்கும்...காங்கிரஸுடன்..கூட்டணி இல்லாமல் போயிருக்கும்.இச் சந்தர்ப்பத்திற்காகவே காத்துக்கோண்டிருந்த அம்மா..காங்கிரஸ்,பா.ம.க.,உடன் கூட்டு சேர்ந்திருப்பார்.தி.மு.க., தனித்து விடப்பட்டிருக்கும்.தி.மு.க., எம்.பி.,க்கள் இல்லாத நாடாளுமன்றம் அமைந்திருக்கக்கூடும்.
நாம் எதிர்ப்பார்ப்பு..இதுதானா..கட்டாயம் இல்லை..ஆகவே ராஜிநாமா என்ற விஷயம் உதவாது.
அடுத்து..கலைஞர் ராஜிநாமா...இதைச் செய்திருந்தால்..ஏற்கனவே..மைனாரிட்டி அரசு என சொல்லிக் கொண்டிருப்பவர்..மற்றவர்களுடன் சேர்ந்து..ஆட்சியை கவிழ்த்திருப்பார்.இப்படி நடந்ததற்கான முன்னுதாரணமும் உள்ளது.
கலைஞர் ஆட்சியில் இருந்தால் தான்..எதாவது பேச முடிகிறது..இல்லாவிட்டால்..என்ன ஆகும்.என வை.கோ.,வைத்தான் கேட்க வேண்டும்..
ஆகவே..இப்படிப்பட்ட சூழலில்..கலைஞர் என்ன செய்திருக்க முடியும்?
உண்மையாகவே.. கலைஞரின் நடவடிக்கைகள் சற்று அதிருப்தியைத் தந்தாலும்...சற்று யோசித்தால்..இதைத்தவிர அவருக்கு வேறு வழியில்லை.
ஆகவேதான்..இலங்கை தமிழர் விஷயத்தில்..மைய அரசுக்கு அதிகாரம்..இருந்தாலும்..அது தமிழ் இனம் பற்றி கவலைப்படாததால்...காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதிகளில்..அந்த வேட்பாளர்களை தோல்வி அடையச் செய்யுங்கள் என..கூக்குரல் கொடுக்க முடிந்தது.
ஆகவே..நண்பர்களே..கலைஞரை குறை சொல்வதை விட்டுவிடுங்கள்..