Showing posts with label தமிழ் - சுஜாதா. Show all posts
Showing posts with label தமிழ் - சுஜாதா. Show all posts

Monday, March 1, 2010

கொஞ்சி விளையாடும் தமிழ் - 14

எல்லா மொழிகளிலும்..சில வார்த்தைகள் இடம் வலம் படித்தாலும்..வலம் இடம் படித்தாலும் அதையேச் சொல்லும்..

உதாரணத்திற்கு தமிழில் சில உறவுகள்..தாத்தா, மாமா, பாப்பா போன்றவற்றை சொல்லலாம்.

ஆங்கிலத்தில் malayalam, idappadi போன்றவற்றை சொல்லலாம்.

சுஜாதா அவர்கள் தனது கற்றதும் பெற்றதும் தொகுப்பில் இது பற்றி கூறுகிறார்.

Redivider இந்த வார்த்தையை இடம் வலமாகவும்..வலம் இடமாகவும் ஒரே மாதிரி படிக்க முடியும்.இவற்ரை 'பாலிண்ட்ரோம்' (Palindrome) என்பார்கள்.

வாக்கியத்திற்கு 'Murder for a jar of red rum' என்பது எளிய உதாரணம்.

ஆங்கிலத்தில் பாலிண்ட்ரோம்களை போட்டி போட்டுக் கொண்டு செய்கிறார்கள்.உலகின் மிக நீளமான பாலிண்ட்ரோம் 19000 எழுத்துகளுக்கு மேற்பட்டதாம்.

தமிழில்

மோரு போருமோ

விகடகவி

தேருவருதே

போன்ற சிறு உதாரணங்கள் மட்டுமே இருப்பதாக எண்ண வேண்டாம். 'மாலைமாற்று' என்கிற பாவகையே உள்ளது.இதில் தேர்ந்தவர் திருஞான சம்பந்தர்.'மாலை மாற்றாக' பதினோரு குறளைச் செய்யுள்களாக பாடியுள்ளார்.

யாமாமா நீயாமா மாயாழீ காமா
காணாகா காணா காமா காழீயா
மாமாயா நீ மாமாயா

அற்ப மனிதர்களால் ஒன்றும் பண்ண முடியாது.மகாசக்தி வாய்ந்த இறைவா உன்னால் தான் முடியும் என்பதே இதன் பொருளாகும்.