Showing posts with label தமிழ் நாடக மெடை- UAA-TVR. Show all posts
Showing posts with label தமிழ் நாடக மெடை- UAA-TVR. Show all posts

Tuesday, March 6, 2018

தமிழ் நாடக மேடையும் யூஏஏவும் - 1

1 - தமிழ் நாடக மேடையும் யூஏஏவும்

-------------------------------------------------------------

                           (சங்கரதாஸ் சுவாமிகள்)
சங்ககாலம் முதல், தமிழ் நாடகங்கள் வேறு, வேறு நிலையில் வளர்ச்சியினைக் கண்டு வந்தன.
பல மன்னர்கள் ஆதரவில் நடிப்புக் கலை வளர்ந்தது.கலைஞர்கள் வளர்ந்தனர்.நாடமேடைக்கான அளவுகள், நடிகர்கள் நடிக்கும் போது மேடையில் இருக்க வேண்டிய நிலை.பேசப்படும் வசனங்கள், பேச வேண்டிய முறை என ஒவ்வொன்றான வரையறுக்கப் பட்டன.
19ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து, இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதிவரை, பல நாடகக் குழுக்கள் செயல்பட்டு வந்தன.கிட்டத்தட்ட அனைத்துமே குருகுல வாசம் எனலாம்.அனைவருமே தொழில் முறை நடிகர்கள் ஆவார்கள்
சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்த முதலியார், கன்னையா, பாலாமணி, கந்தசாமி முதலியார்,நவாப் ராஜமாணிக்கம்,டி.கே.ஷண்முகம் ஆகியோர் குறிப்பிடப்பட வேண்டியவ்ர்கள் ஆவர்

இந்த நாடகக் குழுக்கள் தவிர்த்து, மேலும் என்.எஸ் கே., கே ஆர் ராமசாமி , சஹஸ்ரநாமம் போன்றவரும் நாடகங்கள் நடத்தினர்.
சுதந்திரத்திற்கு முன், தேசிய உணர்வை மக்கள் மத்தியில், நாடகங்கள் மூலம் இவர்கள் பரப்பினர்
ஆனால், சென்ற நூற்றாண்டின் இரண்டாம் பாதி,, அதாவது 1950க்குப் பின்னர் "தமிழ் நாடக மேடையின்"பொற்காலம் தோன்றியது எனலாம்
பல நாடகக் குழுக்கள் தோன்றின.பல சபாக்கள் தோன்றின.இந்த சபாக்கள், அங்கத்தினர்களைச் சேர்த்து.அவர்களிடம் இருந்து சந்தா வசூலித்து, அவர்களுக்கு மாதந்தோறும் நாடகங்கள் நடத்தி , இந்த நாடகக் குழுக்களுக்கு நாடகம் நடத்த சந்தர்ப்பம் அளித்தனர்.
                                      ( கன்னையா)
திடீரென பல நாடகக் குழுக்கள் எப்படித் தோன்றின.அவ்வளவு தொழில் முறை நடிகர்களா? என்றால்..
இல்லை..பெரும்பாலானோர் அமெச்சூர்கள்.
அதிகாரிகளாகவும், வங்கி ஊழியர்களும்,தொழிலாளர்களும் என நடிப்பில் ஆர்வம் கொண்டவர்கள் இவர்கள்.
ஆனால்...அமெச்சூர் குழுக்கள் தோன்ற, முதன் முதல் வித்திட்டவர் யார்? என சற்று எண்ணிப்பார்த்தால்...

                   (நவாப் ராஜமானிக்கம்)
அந்த மாபெரும் நாடக ஆர்வலர் ஒய் ஜி பார்த்தசாரதி என சொல்லலாம்.
மத்திய அரசில், முக்கியமான துறை ஒன்றில் அதிகாரியாய் பணிபுரிந்த இவர், தில்லியிலிருந்து மாற்றலாகி சென்னை வந்தார்.
1952ல் தன் நண்பர் பத்மநாபன் என்று அழைக்கப் பட்ட பட்டு என்ற நண்பரை தன்னுடன் இணைத்துக் கொண்டு "யுனைடெட் அமெச்சூர் ஆர்டிஸ்ட்ஸ்" என்ற பெயரில் நாடகக் குழுவைத் தொடங்கினார்.
                          (டி.கே.ஷண்முகம்)
இனி வரும் அத்தியாயங்களில், அக்குழுவின் வளர்ச்சியும், ஆலமரமாய் மாறிய அக்குழுவிலிருந்து விழுதுகளாய் நிலத்தில் வேரூன்றிய குழுக்கள் பற்றியும் பார்ப்போம்