
தமிழ்மணத்தில் சிறந்த 2009 பதிவுகளுக்கான தேர்வு நடந்துக் கொண்டிருக்கிறது.மொத்தம் 16 பிரிவுகளில் ஒவ்வொரு பிரிவிலும் பதிவர்களால் தெர்ந்தெடுக்கப்பட்ட முதல் பத்து பதிவுகள் இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் தற்போது உள்ளது.
செய்திகள் பிரிவில் எனது இந்த இடுகையும் உள்ளது.முதலில் பத்திற்குள் ஒன்றாக இதைத் தேர்ந்தமைக்கு பதிவர்களுக்கு நன்றி.
இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் அனைவரும்..அதாவது பதிவர்..பதிவர் அல்லாதார் அனைவரும் வாக்களிக்கலாம்.ஆனால் அதற்குமுன் பயனர் பெயரை தமிழ்மணத்தில் ரிஜிஸ்டர் செய்துக் கொள்ள வேண்டும்.
எப்படி செய்தாலும்..எல்லாவற்றிலும் லூப்ஹோல் உண்டு.அதை நன்கு அறிந்து..அதை முறைகேடாக பயன்படுத்துவதில் வல்லவர் நாம்.இப்போதும்..நமக்கு நண்பர் வட்டம் பெரிதென்றால் அவர்களை தமிழ்மணத்தில் பயனர் என இணைத்து அவர்கள் வாக்குகளை நமக்குப் போடச் செய்யலாம்.அதனால் சிறந்த இடுகைகள் சிறந்தவையாக தேர்வு ஆகாமல் போகலாம்.இந்த கோணத்தில் ஆராய்ந்து தமிழ்மண நிர்வாகம் வேறு முறையில் தேர்வு நடத்தலாம்.
அதாவது..ஒவ்வொரு பிரிவிலும் உள்ள பதிவர்கள் தேர்ந்தெடுத்த சிறந்த இடுகைகள் எது..என தமிழ்மண நிர்வாகமே ஒரு குழு அமைத்து தேர்ந்தெடுக்கலாம்.அந்த நீதிபதிகள் தீர்ப்பே இறுதியானது.அதை விடுத்து..இப்போது அறிவித்துள்ள முறையில் தேர்ந்தெடுக்க வேண்டுமெனில்..இடைத்தேர்தல்களில் எப்படி பணபலம் வெற்றி பெறுகிறதோ..அப்படி..இத்தேர்விலும் நண்பர் பலமே வெற்றிபெறும்.
தமிழ்மணம் இந்தக் கோணத்தில் யோசிக்குமா?