Showing posts with label தமிழ்மணம் விருது. Show all posts
Showing posts with label தமிழ்மணம் விருது. Show all posts

Saturday, January 2, 2010

இடைத்தேர்தலும் தமிழ்மண வாக்கெடுப்பும்


தமிழ்மணத்தில் சிறந்த 2009 பதிவுகளுக்கான தேர்வு நடந்துக் கொண்டிருக்கிறது.மொத்தம் 16 பிரிவுகளில் ஒவ்வொரு பிரிவிலும் பதிவர்களால் தெர்ந்தெடுக்கப்பட்ட முதல் பத்து பதிவுகள் இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் தற்போது உள்ளது.

செய்திகள் பிரிவில் எனது இந்த இடுகையும் உள்ளது.முதலில் பத்திற்குள் ஒன்றாக இதைத் தேர்ந்தமைக்கு பதிவர்களுக்கு நன்றி.

இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் அனைவரும்..அதாவது பதிவர்..பதிவர் அல்லாதார் அனைவரும் வாக்களிக்கலாம்.ஆனால் அதற்குமுன் பயனர் பெயரை தமிழ்மணத்தில் ரிஜிஸ்டர் செய்துக் கொள்ள வேண்டும்.

எப்படி செய்தாலும்..எல்லாவற்றிலும் லூப்ஹோல் உண்டு.அதை நன்கு அறிந்து..அதை முறைகேடாக பயன்படுத்துவதில் வல்லவர் நாம்.இப்போதும்..நமக்கு நண்பர் வட்டம் பெரிதென்றால் அவர்களை தமிழ்மணத்தில் பயனர் என இணைத்து அவர்கள் வாக்குகளை நமக்குப் போடச் செய்யலாம்.அதனால் சிறந்த இடுகைகள் சிறந்தவையாக தேர்வு ஆகாமல் போகலாம்.இந்த கோணத்தில் ஆராய்ந்து தமிழ்மண நிர்வாகம் வேறு முறையில் தேர்வு நடத்தலாம்.

அதாவது..ஒவ்வொரு பிரிவிலும் உள்ள பதிவர்கள் தேர்ந்தெடுத்த சிறந்த இடுகைகள் எது..என தமிழ்மண நிர்வாகமே ஒரு குழு அமைத்து தேர்ந்தெடுக்கலாம்.அந்த நீதிபதிகள் தீர்ப்பே இறுதியானது.அதை விடுத்து..இப்போது அறிவித்துள்ள முறையில் தேர்ந்தெடுக்க வேண்டுமெனில்..இடைத்தேர்தல்களில் எப்படி பணபலம் வெற்றி பெறுகிறதோ..அப்படி..இத்தேர்விலும் நண்பர் பலமே வெற்றிபெறும்.

தமிழ்மணம் இந்தக் கோணத்தில் யோசிக்குமா?

Friday, February 27, 2009

தமிழ்மணம் விருது எனக்கு ஏன் கிடைக்கவில்லை...

தமிழ்மணம் விருதுகள் 2008 போட்டி நடந்ததையே..கிட்டத்தட்ட அனைவரும் மறந்து விட்ட நிலையில்...முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

வெற்றி பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

வெற்றி பெறாதவவர்கள்..குறைந்தது தங்கள் பதிவு டாப் 10க்குள் வந்ததா என்று பார்த்து..சர்வேசன் போல் சந்தோஷப்படலாம்.,அதுவும் இல்லாதவர்களுக்கு better luck next time.

இப்போ தலைப்பு வருகிறேன்...

என் பதிவும் டாப் டென்னில் வந்திருந்தாலும்...எனக்கு ஏன் விருது கிடைக்கவில்லை..என மண்டையை குடைந்துக்கொண்டதில்...அதற்கான காரணம் புரிந்தது.

போட்டியில் ..நான் கலந்துக்கொண்ட பிரிவில்..நிறைய பதிவர்கள்..பதிவுகளும் இருந்தன.அப்படியில்லாமல்..இரண்டே பேர் கலந்துக் கொண்டிருந்தால் எனக்கு அந்த பிரிவில் விருது கிடைத்திருக்கும்.

குலப்ஜாமூன் விளம்பரத்தில் குட்டிப்பையன் கலந்துக்கொண்ட ஒட்டப்பந்தயம் போல.