Showing posts with label நகைச்சவை. Show all posts
Showing posts with label நகைச்சவை. Show all posts

Tuesday, October 21, 2008

வாய் விட்டு சிரியுங்க...

1.யாதும் ஊரே..யாவரும் கேளிர் என்ற கொள்கை உடையவர் எங்க தலைவர்..ஓட்டலுக்குப் போனாலும்..காசி ஹல்வாவும்,கல்கத்தா ரசகுல்லாவும்,மங்களூர் போண்டாவும்..மும்பை மீல்ஸூம் தான் சாப்பிடுவார்.

2.தலைவர் இடைத்தேர்தலுக்கு ஏன் பெண் வேட்பாளரை அறிவிச்சிருக்கார்
'இடை'த்தேர்தல்னா அதுலே பெண்கள்தானே வெற்றி பெற முடியும்.

3.அதோ போறாரே அவர் நம்மை 'சௌக்யமா'ன்னு விசாரிக்கமாட்டார்
ஏன்?
அவர் டாக்டர் ஆச்சே

4.கவர்ச்சி நடிகை காந்தா நிர்வாண நிதி திரட்டறாங்களாம்
ஐயோ..அது நிர்வாணநிதி இல்லை..நிவாரண நிதி

5.கோவியானந்தா- நீங்க துறவியானதற்கு காரணம்?
ராதானந்தா-மனைவி..குழந்தைகள் தான் காரணம்..ஆமாம் நீங்க?
கோவியானந்தா-மனைவி குழந்தைகள் இல்லாததுதான் காரணம்

6.மகன்-(தந்தையிடம்)அப்பா நீ எந்த ஊர்ல பிறந்தே
தந்தை-திருநெல்வேலியில்
மகன்- அம்மா
தந்தை-மும்பையில்
மகன்- நான்
தந்தை-சென்னயில்
மக்ன்- என்ன ஆச்சர்யம்..எங்கெங்கோ பிறந்த நாம எப்படி ஒன்னா திருச்சிலே சேர்ந்திருக்கோம்

Wednesday, October 15, 2008

வாய் விட்டு சிரியுங்க

கணவன்- டாக்டர் என்னை கிச்சன் பக்கமே போகக்கூடாதுன்னு சொல்லிட்டார்
மனைவி-அவர் சொன்னது கிச்சன் பக்கம் இல்லை..சிக்கன் பக்கம்

2.நாட்டு வைத்தியரை காதலிச்சது தப்பாப்போச்சு
ஏன்
எப்ப கல்யாணத்தை பத்த்தி பேசினாலும்..ஒரு மண்டலம் போகட்டும்னு சொல்றார்.

3.அந்த டாக்டர் கிட்ட ஆபரேஷனுக்குப் போனா..நோயாளி குடும்பத்துக்கு ஒரு சௌகரியம்
என்ன?
அமரர் ஊர்திக்கு தனியா சார்ஜ் எதுவும் கிடையாது

4.எதிர்க்கட்சித் தலைவர் என் மேல் சுமத்தும் ஊழலுக்கு பதில் சொல்லும் ஆணவம் என்னிடம் இருக்கிறது
தலைவரே..அது ஆணவம் இல்ல..ஆவணம்

5.அப்பா..நதி நீர் பேச்சு வார்த்தைன்னா என்ன?
தண்ணீருக்காக குழாயடியில் இரண்டு பேர் அடிச்சுக்கிட்டா..அது குழாயடி சண்டை..அதுவே இரண்டு மாநிலம் அடிச்சுக்கிட்டா நதி நீர் பேச்சு வார்த்தை.

6.டாக்டர் நீங்க சொன்ன மாதிரி ஒரு மாசமா..நாள்தோறும் விளையாடியும் எடைகுறையிலே
என்ன விளையாடினீங்க?
சீட்டாட்டம்தான்.