Showing posts with label நகைச்சுவை சிந்தனைகள். Show all posts
Showing posts with label நகைச்சுவை சிந்தனைகள். Show all posts

Friday, April 24, 2009

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல்..(24-4-09)

பேராசிரியர் ஆல்பர்ட் ஈன்ஸ்டீனிடம் 'வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி' ன்னு கேட்ட போது..அவர் கொடுத்த கணித சூத்திரம் A=X+Y+Z

A என்பது வாழ்க்கையில் வெற்றி
X என்பது கடின உழைப்பு
Y என்பது ஆரோக்யமான விளையாட்டு
Z என்பது என்ன தெரியுமா...
அதிகம் பேசாமல் வாயை மூடிக் கொண்டிருப்பது.

2.கால் தடுமாறினால் சமாளித்துக் கொண்டு விடலாம்.ஆனால் நாக்கு தவறினால் மீளவே முடியாது.

3.உடல் பருமனாய் இருப்பவர் இதயம் எவ்வளவு கஷ்டப்படுகிறது தெரியுமா? அநாவசியமாக அவர்கள் உடலில் இருக்கும் ஒவ்வொரு பவுண்ட் சதைக்கும் ..அவர்கள் இதயம் 3 மைல் நீளமுள்ள இரத்தக் குழாய்களுக்கு இரத்தத்தை பாய்ச்ச வேண்டியிருக்கிறது. அதனால்தானோ என்னவோ பருமனாக உள்ளவர்களுக்கு அதிகமாக இதய நோய் வருகிறது.

4.நாம் சாதாரணமாக பேசும் வேகம் நிமிடத்திற்கு 125 வார்த்தைகள்.ஆனால் நாம் நினைக்கும் வேகம் நிமிடத்திற்கு 500 வார்த்தைகள்.அதாவது...நாம் பேசுவதைவிட நான்கு மடங்கு சிந்திக்கிறோம்.'வள வள' என பேசி நம்மை போரடிக்கும் நபர்...சிந்திக்கும் வேகத்தில் பேசவும் முடிந்தால்...நினைக்கவே பயமாய் இல்லை...

5.நாளும் பிரியாணி
நங்கைக்கு மூக்கூத்தி
சாராயத்திற்கு பணம்
ஏழை எதிர்ப்பார்க்கிறான்
மே 13வரை வரவை!!

6.தலைவா...புதுசா ஒரு லட்சம் பேரை சேர்த்துட்டோம்..வாக்காளர் பட்டியல்லே...ஆனா நீங்க 3 1/2 லட்சம் வித்தியாசத்திலே ஜெயிப்பேன்னு சொன்னீங்களே எப்படி...
அன்னிக்கு ஊருக்கு வரப்போகும் விருந்தாளிகளை வைச்சுதான்.

Thursday, March 26, 2009

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல்..(27-3-09)

1.மெதுவாக நடப்பவனை ஆமை வேகத்தில் நடக்கிறான் என்கிறோம்..நத்தை வேகத்தில் நடக்கிறான் என்கிறோம்..உண்மையில் நத்தையின் வேகம் மணிக்கு 5.4 மீட்டர் தூரம். ஆமையின் வேகம் 7.2
மீட்டர் தூரம்..ஆமையுடன் போட்டிப் போட்ட முயலின் வேகம் மணிக்கு 65 கிலோ மீட்டர்.

2.பசு, பெடை, மந்தி ...இந்த சொற்களுக்குள் ஒரு ஒற்றுமை உள்ளது...அது என்ன..சரியான விடை கண்டுபிடியுங்கள் பார்ப்போம்.

3.111/
(1+1+1) = 37
222 /(2+2+2) = 37
333/ (3+3+3) = 37
444/ (4+4+4) = 37
555/ (5+5+5) = 37
666/ (6+6+6) =37
777 /(7+7+7) = 37
888/ (8+8+8) = 37
999 /(9+9+9) = 37

4.வாழ்க்கையில் முன்னேற நம்பிக்கையும் வைராக்கியமும் வேண்டும்.எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறிய 'ஹில்லாரி'...வெற்றி அடையும் முன் பலதடவை சென்று எவரெஸ்டில் ஏறப்பார்த்தார்.ஒவ்வொருமுறையும் தோல்விதான்.பின் ஒரு நாள் அந்த மலையைப்பார்த்து சொன்னார் 'நீ பலமுறை என்னை தோல்வியடையச் செய்தாய்.ஆனால் நான் திரும்பி வருவேன்.நிச்சயம் உன்னை நான் தோல்வியடையச் செய்வேன்.ஏனெனில் இஹற்கு மேல் நீ வளர மாட்டாய்..நான் பல விதங்களில் வளர்ந்து மீண்டும் வருவேன்...என்றாராம்.

5. ஒரு சிறு தீப்பொறி பெரும் காட்டை அழித்து விடும்
ஒரு பெரிய மரத்தின் நிழலில் ஒரு சிறிய செடி வளர முடியாது
பெரிய பாறைன்னு நினைச்சா சிற்பி சிலை செதுக்க முடியாது.

6.ஒரு கவிதை..

பாட்டிக்கு மண்குடம்
அம்மாவுக்கு பித்தளைப் பானை
எனக்கோ பிளாஸ்டிக் குடம்
மகளுக்கு வாய்த்திருக்கிறது
வாட்டர் பாக்கெட்

- அ.வெண்ணிலா

7.ஒரு ஜோக்...

அரசியல்வாதி பையன்- அப்பா என்னை 8 ஆவதில் போட்டால்தான் பள்ளிக்குப் போவேன்
அரசியல்வாதி- நீ 7 ஆவது தானே படிக்கிற
அ.பை- அதனால் என்ன...நீ கூடத்தான்..போனதரம் உன் கூட்டணில 6 சீட் வாங்கினா..இப்போ 7க்கு பதிலா 8 கேட்கல..