Showing posts with label நகைச்சுவை - விவாதம். Show all posts
Showing posts with label நகைச்சுவை - விவாதம். Show all posts

Monday, March 1, 2010

கேபிள் படத்திற்கு கதை விவாதம்..

(இது நகைச்சுவைக்காகவே எழுதப்பட்டது..யார் மனத்தையும் புண்படுத்த அல்ல)

படம் இரண்டு மணி நேரத்திற்குள் முடிக்க வேண்டும் என முன்னமயே சொல்லிவிட்டதால் உ.த., விவாதத்தில் முதலில் வெளிநடப்பு செய்கிறார்.

கேபிள்- என் கோரிக்கையை ஏற்று..இவ் விவாதத்தில் பங்கு பெற வந்ததற்கு நன்றி.முதல்ல நான் என்ன சொல்ல வரேன்னா..நம்ம விருகம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு ஒட்டி..வலப்பக்கம் திரும்பினா..'அய்யனார் ஒட்டல்னு ஒன்னு இருக்கு..அங்கே சாதம்..சும்மா அஜீத் கணக்கா..அதாங்க தும்பப் பூ கணக்கா இருக்கும்..கூடவே ஆட்டுக்கால் குழம்பு கொடுப்பாங்க..சாத்தில அதைக் கொட்டி..ஒரு பாத்திக் கட்டி அடிச்சோம்னா அடடா..என்ன ருசி தெரியுமா..

அதிஷா- (மனதிற்குள்) சம்பளம் வாங்கியதும் இராக் ஓட்டல் போறதை விட்டு..அய்யனாராம்..ஓட்டலாம்..

அப்துல்லா_ கேபிள்..நாம கதை விவாதத்திற்கு வந்திருக்கோம்..

கேபிள்- ஆமாம்..ஆமாம்..கதைக்கு பேர் கூட செலக்ட் பண்ணிட்டேன்..லெமன் ட்ரீயும்..இரண்டு ஷாட் டக்கீலாவும்...

தண்டோரா-சேச்சே..அந்த தலைப்பை வச்சா..ஏதோ மலையாள டப்பிங் படம்னு நினைச்சுப்பாங்க..தவிர..தமிழ் தலைப்பா இருந்தா..அரசாங்க வரி விலக்கும் கிடைக்கும்..

நர்சிம்- தமிழ் தலைப்புன்னா..'கம்பர்' ன்னு வைச்சுடலாம்.படத்தில கம்ப ராமாயணத்தில..சீதை குளிக்கிறமாதிரி சீன்ல..கம்பர் சொல்ற பாட்டையே போட்டுடலாம். குறுந்தொகையில பல்லி கத்தற மாதிரி ஒரு பாட்டு இருக்கு அதையும் போட்டுடலாம்.

பைத்தியக்காரன்-ஒரு காட்சியில் நம்ம கதாநாயகனுக்கு வெளிறிய அமைதியினுடே முகத்தில் துக்கத்தின் புன்னகை ஒளிருகிறது.வாழ்க்கையை அவன் நேசிப்பதாகச் சொல்வதாய் தெரிகிறது..இப்படியே காட்சிகள் அமைத்துக் கொண்டு போகலாம்


ஜ்யோவ்ராம்-சிவராமன் சொல்றது நல்லா இருக்கு..அதைக்காட்டிட்டு..எங்கிட்ட சிவாஜி..எம்.ஜி.ஆர்., சண்டை..ஸ்ரீதேவி..அப்படி..இப்படின்னு ஒரு பாட்டு இருக்கு..அதை குத்துப் பாட்டா போட்டுடலாம்..

தண்டோரா-(மெதுவாக) எவ்வளவு நாளானாலும் 'குத்து' மறக்கமாட்டார் போல இருக்கே..

நர்சிம்- என்ன..அப்துல்லா அண்ணன் ஒன்னும் பேசல

அப்துல்லா- நான் பேச என்ன இருக்கு..என் வீட்டிலேயே கம்பெனியை வைச்சுக்கலாம்..யார் வேணும்னா வந்து தங்கிக்கலாம்..எல்லாருக்கும் கேடரிங் என் செலவு.

கேபிள்- இதுக்கு என்ன கைமாறு செய்யப் போறோமோ..

தண்டோரா- நம்ம ஒடம்பை செருப்பா தைச்சு அண்ணனுக்கு போட்டுடலாம்

கேபிள்-(தனக்குள்) அடடா..காலைலயே ஆரம்பிச்சுட்டார் போல இருக்கே

அப்துல்லா-கைமாறு அப்படி இப்படின்னு பெரிய பெரிய வார்த்தையெல்லாம் வேண்டாம்..எனக்கு படத்தில இரண்டு பாட்டு பாட சந்தர்ப்பம் கொடுங்க போதும்

(அப்போதுதான் கார்க்கி உள்ளே நுழைகிறார்)

கார்க்கி- சாரி..இந்த பப்லு வால கொஞ்சம் லேட்டாயிடுச்சு..மேலும் நான் வரும்போ சிக்னல்ல ஒரு இளம் பொண்ணு வண்டியை நிறுத்தி எங்கிட்டே..'நீங்க கார்க்கி தானே'ன்னு கேட்டுட்டு..ஒரேயடியா பாராட்ட ஆரம்பிச்சுட்டாங்க..

நர்சிம்- அடடா..தன் புராணத்தை ஆரம்பிச்சுட்டாரே..விட்டா அவ்வளவுதான்..தற்புகழ்ச்சிக்கு இலக்கியத்துலே..

கார்க்கி-(அவரை சட்டைசெய்யாமல்)கேபிள்..கதை விவாதம் முடிஞ்சுதா..வேணும்னா பரிசல் கதை ஒன்னு சொல்லியிருக்கார்...

கேபிள்- வேண்டாம்..எல்லாம் நான் தீர்மானிச்சுட்டேன்..பணம் மட்டும்தான் இப்போ பிரச்னை..

அதிஷா- அப்படி எல்லாமே நீங்க தீர்மானம் பண்ணிட்டா எப்படி..இன்னும் லக்கி வேற வரலே..

கார்க்கி- அதானே..அப்ப நாங்க எதுக்கு..நாங்க என்ன ஸ்கூல் பசங்களா..லாலிபாப் கொடுத்துடுவீங்க போல இருக்கே

(திடீரென சப்தம் அதிகமாகிறது..ஒவ்வொருவர் கத்துகின்றனர்)

தண்டோரா- என்ன நடக்குது இங்க..

(உள்ளே நுழைகிறார்..வடகரை வேலன்..அங்கு சத்தம் நிலவுவதைப் பார்த்து)

வேலன்- எங்க வந்தாலும்..இந்த சண்டையை தீர்த்துவைக்கறதே நம்ம வேலையாய்ப் போச்சு..(சமாதான முயற்சியில் இறங்க)

(எதைப் பற்றியும் கவைப்படாமல் எல்லாவற்றையும் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார் ஆதி)