Showing posts with label நகைச்சுவை - நிகழ்வு. Show all posts
Showing posts with label நகைச்சுவை - நிகழ்வு. Show all posts

Wednesday, April 21, 2010

அனுமதி மறுத்த அண்ணாசாமி

அதி புத்திசாலி அண்ணாசாமி வீட்டிற்கு உறவினர் ஒருவர் வந்தார்....அண்ணாசாமி குடியிருக்கும் வீட்டிற்கு அவர் குடிவர உதவிய நண்பர் ஒருவருக்கு அந்த உறவினரைப் பிடிக்காது.அதனால் வந்த உறவினரை உபசரித்தால் நண்பருக்குப் பிடிக்காது என அண்ணாசாமி அறிவார்.மேலும் அந்த நண்பர் அனுமதியில்லாமல் அண்ணாசாமி வீட்டிற்கு யாரும் வரவும் முடியாது.

அதனால்..தன் வீட்டு நுழைவாயிலில் உள்ளே வர முடியாத அளவிற்கு அண்ணாசாமி..தடைக்கல்லாக ஒரு பெரிய பாறாங்கல்லை வைத்தார்.

வந்த உறவினர் 'இப்படி தடைக்கல்லைப் போட்டால் எப்படி உள்ளே வருவது?' என்றார்.

உடன் அண்ணாசாமி..

உறவினரான அவர் தன் வீட்டிற்குள் வர விரும்பினால்..அதை தனக்குத் தெரிவிக்குமாறும்..அப்படித் தெரிவித்ததும் தான் தன் நண்பருக்கு கடிதம் எழுதுவதாகவும்..அந்தக் கடிதத்திற்கு பதில் வந்ததும்..நண்பர் தடைக்கல்லை அகற்றச் சொன்னால்..அப்படி அகற்றியதும் உறவு உள்ளே வரலாம் என்றும் கூறினார்.

வந்த உறவினரோ...

உடமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு

என்ற குறளை மனதில் எண்ணியபடியே திரும்பிச் சென்றார்.