Showing posts with label நடப்பு செய்திகள். Show all posts
Showing posts with label நடப்பு செய்திகள். Show all posts

Sunday, April 12, 2009

ஐயா..சாமிகளே..இனி இலங்கை தமிழர் பற்றி பேசாதீர்கள்...


சமீப காலமாக...இலங்கை தமிழர் பிரச்னைக்கான உருப்படியான காரியம் ஏதும் செய்யாமல்...அரசியல் கட்சிகள் ஒருவரை ஒருவர் இந்த விஷயத்தில் குறை சொல்வதையே காணமுடிகிறது.

தேர்தல் அறிவிப்பு வந்ததும்...இந்த செயல் அதிகமாகவே ஆகிவிட்டது..

ஒருவர்...அந்த கட்சியின் மீது பயங்கரமாக பாய்ந்ததுடன்..அவர்களது அலுவலகத்தையே சூறையாடிவிட்டு...இன்று அதே கட்சியினருடன் கூட்டணியில் சேர்ந்து..இரு தொகுதிகள் பெற்றுவிட்டு...40ம் எங்களுடையதே...அதிலும் என் வெற்றி முதல் வெற்றி என கொக்கரிக்கிறார்.

இன்னும் ஒருவர்...நேற்றுவரை அவர்களுடன் இருந்துவிட்டு...பதவி, சுகம் என அனுபவித்துவிட்டு..இன்று வெளியே வந்து...கலைஞர் மத்திய அரசை..இவ்விஷயமாக நிர்பந்திக்க வேண்டும் என வோட்டுக்காக நாடகம் போட்டுக்கொண்டிருக்கிறார்.

ரத்தஆறு ஒடும்..என சீறும்..இவரோ...போர் என்றால்..அப்பாவி மக்களும் உயிர் இழக்கத்தான் நேரிடும்..என்று..சொன்னவருடன்...நான்கு தொகுதி ஆசையில் பூனையாய் விட்டார்.மக்களிடம் புலி..போயஸ்ஸிலோ பூனை.

தேர்தல் அறிவிப்புக்கு முன் ஒரு மாதிரியும்...அறிவிக்குப் பின் ஒருமாதிரியும்..நடந்துக் கொண்ட இவர்..திடீரென அவர்களை ஆதரித்து 8 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து ஆதரவை தேடுகிறார்.

இது விஷயமாக வாயையே திறக்காத இந்திய புஷ்..திடீரென...தமிழருக்கென இலங்கையில் தனி ஒன்றிரெண்டு மாநிலம் வேண்டும் என்கிறார்.அதுவும் யாரிடம்..அவர் போட்டியிடப்போகும் தகுதி மக்களிடம்.உள்ளூரிலாவது விலை போக வேண்டிய ஆசையில்.

60 வருஷ பொது வாழ்க்கை என்றும்..இதற்காக பதவி துறந்தேன் என வாய்க்கு வாய் கூறும்...தமிழின தலைவரோ..'அம்மா தாயே..." என்கிறார்.

அகில இந்திய கட்சிகளான மற்ற இரு கட்சிகள் தொகுதிகளுக்காக தங்கள் கொள்கைகளை அடமானம் வைத்துவிட்டன.தேர்தலுக்குப் பின் கொள்கைகளை மீட்டுவிடும்.

இன்னொரு பிரதமர் ஆகும் ஆசையில் உள்ள கட்சி ராமர் நினைப்பிலேயே..ஆட்சி கனவு காணுகிறது.அதற்கு அதன் கவலை...

நாடாளுமன்ற தேர்தலில்...இலங்கை தமிழர் பிரச்னை..பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது என்றாலும்...இந்த தலைவர்கள் பேசும் வசனங்களும்...போடும் நாடகங்களும்..போறும்டா சாமி என்ற நிலை பொதுமக்களிடம் ஏற்படுத்தி விட்டது.