சில நாட்களுக்கு முன்..தன் ரசிகர்களிடையே ரஜினி 'கடமையைச் செய்,,பலனை எதிர்ப்பார்' என சொல்லப்போக..ஒரு சாரார்..அவர் கீதையை இழித்து உரைப்பதாய் ஆர்ப்பாட்டம் செய்ததை நாம் அறிவோம்.
அனால் ரஜினி சொன்னார் போல பலனை எதிர்ப்பார்த்து கடமையைச் செய்தால்..பல நேரங்களில் பலன் ஏதும் கிட்டாமல் போக நேரிடலாம்.
ஒரு உதவியை யாருக்கேனும் செய்தால்..அதற்கான பிரதிபலன் என்ன வென்று எதிர்ப்பார்க்கக்கூடாது.இதையே திருவள்ளுவர் எவ்வாறு சொல்கிறார் என்றால்..
கைமாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்னாற்றுங் கொல்லோ உலகு
என்கிறார்.
உதவி செய்வோரிடமிருந்து பலனை எதிப்பார்க்காதீர்கள்..நமக்கு உயிர் வாழ உதவி செய்யும் மழை நம்மிடம் இருந்து என்ன பிரதிபலனை எதிப்பார்த்து பெய்கிறது.(சூரியனைக் கூட பொங்கல் அன்று வணங்கும் நாம்..மழையை என்றாவது துதிக்கிறோமா? )
ஒரு தந்தை மகனை படிக்க வைத்து..கற்றோர் நிறைந்த சபையில் முதன்மையானவனாய் ஆக்க வேண்டியது, அவர் கடமை.ஆனால் அதற்கு பிரதிபலனாக பிற்காலத்தில் அவன் சம்பாதித்து கொடுப்பான் என்ற எதிப்பார்ப்பு கூடாது.
ஆனால் அவரது மகன் அவருக்கு செய்யும் உதவி...மீண்டும் சொல்கிறேன்..கடமை அல்ல...உதவி..இவ்வளவு அறிஞனான இவனை பெற இவன் தந்தை என்ன தவம் செய்தானோ என உலகு சொல்ல வேண்டும்.
இக் கருத்தும் வள்ளுவனுடையதே..
ஆகவே..எந்த ஒரு செயலுக்கும் பிரதிபலனை எதிப்பார்க்காதீர்..கடமையை செய்யுங்கள்..எதிர்ப்பார்ப்பு ஏமாற்றத்தை தரக்கூடியது.