இந்த பதிவின் முதல் பாகம்
ஓமந்தூராருக்குப் பிறகு 1949ல் குமாரசாமி ராஜா முதல்வரானார்.இதன்பின் மாகாண எல்லைகள் மாற்றம் செய்யப்பட்டு..சென்னை மாநிலம் என்று பெயரிடப் பட்டது.செயின்ட் ஜார்ஜ் கோட்டை,சென்னைப் பல்கலைக் கழக செனடர் ஹால்ல்,சில்ரன்ஸ் தியேட்டர்,ராஜாஜி ஹால்..என பல இடங்களில் சட்டசபை நடந்தது.1959ல் ஏப்ரல் மாதம் இருபது நாட்கள் ஊட்டியிலும் நடந்தது.அதற்கு பின் 1959ல் ஆகஸ்ட் முதல் தொடர்ந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலேயே இதுவரை தொடர்ச்சியாக நடந்து வருகிறது.1950ல் குடியரசுக்குப் பின் இரண்டு ஆண்டுகள் குமாரசாமி ராஜா முதல்வர்.
இந்திய குடியரசின் முதல் கவர்னர் ஜெனரலாய் இருந்த ராஜாஜி 1952ல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் முதல்வரானார்.
பின் 1954 முதல் 1963 வரை காமராஜ் முதல்வர்..தமிழகத்தின் பொற்காலம் இது எனலாம்.மக்கள் நல திட்டங்கள் பல அக்காலத்தில் உருவாயின.மதிய உணவு திட்டம், இலவச கல்வி மற்றும் கிண்டி,அம்பத்தூர் தொழிற்பேட்டைகள் உருவாயின.கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் முதல்வராய் இருந்த காமராஜர்..கட்சியைப் பலப்படுத்த..காமராஜர் பிளான் என்று ஒன்றை அமுல் படுத்தி..தான் உள்பட இந்தியாவின் மூத்த தலைவர்களை அரசிலிருந்து வெளியேற வைத்தார்.
அந்தக் காலகட்டத்தில் 1963ல் பக்தவத்சலம் முதல்வரானார்.1965 இந்தி எதிர்ப்பு, கடுமையான அரிசி பஞ்சம் ஆகியவை காங்கிரஸ் அரசை ஒழிக்க முக்கிய காரணமாயின.காங்கிரஸ் கட்சியின் பால் மனக்கசப்புக் கொண்ட ராஜாஜியும்,,காங்கிரஸை ஒழிப்பதே தன் குறிக்கோள் என வயதான காலத்தில் சுதந்திரக் கட்சியை நிறுவினார்.கணிசமான ஆதரவு இருந்தது கட்சிக்கு.1967ல் தி.மு.க.உடன் கூட்டணி வைத்தார்.அந்த தேர்தலில் தி.மு.க., ஆட்சியைக் கைப் பற்ற...இன்றுவரை மீண்டும் காங்கிரஸ் பதவியை பிடிக்க முடியவில்லை.
1967ல் அண்ணா..திராவிடக் கட்சியின் முதல் முதல்வர் ஆனார். ..பதவி ஏற்ற உடன் ஒரு படி ஒரு ரூபாய் அரிசி..படிப்படியாய்..ரூபாய்க்கு மூன்று படி என்பது தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையாய் இருந்தது. தி.மு.க., பதவி ஏற்றதும் சென்னை,கோவை மாவட்டங்களில் ஒரு ரூபாய்க்கு ஒரு படி சில காலம் போடப்பட்டது.
இதற்கிடையே உடல் நலக் குறைவால் 3-2-69 அண்ணா இயற்கை எய்த..கலைஞர் 10-3-69ல் முதல்வரானார்.(நெடுஞ்செழியன் இடைக்கால முதல்வர்)கை ரிக்க்ஷா ஒழிப்பு திட்டம்..கலைஞர் ஆட்சியின் அருமையான திட்டமாகும்.பின் தி.மு.க., வில் பிளவு ஏற்பட எம்.ஜி.ஆர்., கட்சியிலிருந்து விலக்கப்பட்டார்.அவர் அண்ணா தி.மு.க., வை ஆரம்பித்தார்.ஜூன் 77ல் ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆர்., மறைவு வரை டிசம்பர் 87 வரை முதல்வரானார்.பின் அவர் மனைவி ஜானகி முதல்வரானார்.ஜெ அணி (ஜெயலலிதா) ஜா அணி (ஜானகி அணி ) உருவானது ..அதனால் ஜானகி 23 நாட்களே முதல்வராய் இருந்தார்.
89ல் கலைஞர் முதல்வர் ஆனார்..ஆனால் இரு ஆண்டுகளில் அவர் ஆட்சிகவிழ..91 ல் மீண்டும் தேர்தல்..இச்சமயத்தில்..பிரசாரத்திற்கு சென்னை வந்த ராஜிவ் கொல்லப்பட்டார்.அனுதாப அலை வீச காங்கிரஸ் கூட்டணி கட்சியாய் இருந்த ஜெயலலிதா முதல்வரானார்.வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது, வளர்ப்பு மகன் திருமணம் ஆகியவை ஜெ விற்கு எதிர்ப்பை அதிகமாக்கின.
1996ல் மீண்டும் கலைஞர் முதல்வர்..மூப்பனார் கூட்டணியில் கலைஞர் வென்றார்.இந்த சமயத்தில் தனியாக ஆட்சி அமைக்கும் வாய்ப்பை காங்கிரஸ் இழந்தது. ஜெ மீது பல ஊழல் வழக்குகள் போடப்பட்டன.ஜெ கைதானார்.
2001ல் மிண்டும் ஜெ முதல்வர்..பழிக்கு பழி என்ற போக்கில் பாலங்கள் கட்டியதில் ஊழல் என ஒரு நாள் நள்ளிரவு கலைஞர் கைது..அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்தபோது ஆயிரக்கணக்கான ஊழியர் கைது ஆகிய செயல்கள் ஜெ வை 2006ல் தோற்கடிக்க..பல இலவச திட்டங்கள் கலைஞரை மீண்டும் அரியணை ஏற்றின.(இச் சமயத்தில்தான் ஒரு தேர்தலில் நான்கு இடங்களில் வேட்பு மனுதாக்கல் செய்த ஜெ சட்டச் சிக்கலில் மாட்டிக் கொண்டதால் 2001 செப்டம்பர் முதல் 2002 மார்ச் இரண்டாம் நாள் வரை ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவி வகுத்தார். )
2006ல் பதவிக்கு வந்த தி.மு.க., அதன் நிறுவனத் தலைவரால் முடியாத காரியத்தை வெற்றிகரமாக செயலாக்கியது..ஆம்..ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி போடப்பட்டது.இது சாதனையாகும்..கண்டிப்பாக கலைஞரின் சாதனை.இந்த அரசின் மேலும் சில சாதனைகள்
இஸ்லாமியருக்கு 3.5 % இட துக்கீடு
விவசாயிகளின் கூட்டுறவு கடன் 7000 கோடி தள்ளுபடி
அருந்ததியற்கு 3% இட ஒதுக்கீடு
குடிசை வீடுகள் ஒழிக்கப்பட்டு அனைத்து தரப்பினருக்கும் கான்கிரீட் வீடுகள்..திட்டத்தில் முதல் படி துவங்கியது.ஆறு ஆண்டுகளில் திட்டம் முடியும்.
எல்லாவற்றிற்கும் மகுடம் வைத்தார்போல சட்டசபைக்கான புது கட்டிடம் கட்ட ஓமந்தூரார் தோட்டம் தேர்ந்தெடுக்கப் பட்டு..2008ல் நவம்பர் 12ஆம் நாள் வேலைகள் ஆரம்பமாயின..கலைஞர் விடாது சென்று பார்வையிட்டார்.
இந்தியாவின் மிகச் சிறந்த பசுமை நிறைந்த அரசு கட்டிடமாக 450 கோடி செலவில்..உருவாகிய புது சட்டசபை கட்டிடம்.கடந்த 13-3-10 அன்று பாரதப் பிரதமர் மன்மோகன் சிங்கால் திறந்து வைக்கப்பட்டது.இனி சட்டசபை கூட்டங்கள் இங்குதான் நடைபெறும்..
இந்த கட்டிடம்..வடிவமைக்கப்பட்டுள்ள விதம்..பிரம்மாண்டம் எல்லாம் பார்க்கையில்..இனி வரும் நாட்களில் உலக அதிசயங்களில் ஒன்றாகக் கூட தேர்ந்தெடுக்கப் படலாம்..
கலைஞர் பால் மாற்றுக் கருத்துக் கொண்டவர்களும் போற்றும் வகையில் உருவான இது கலைஞரின் மணிமகுடத்தில் ஒரு வைரக்கல் என்றால் மிகையில்லை.
தமிழகத்தில் இது வரை ஜனாதிபதி ஆட்சி இருந்த காலங்கள்
31-1-76 முதல் 30-6-77 வரை
17-2-80 முதல் 9-6-80 வரை
30-1-88 முதல் 27-1-89 வரை
30-1-91 முதல் 24-6-91 வரை
ஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்
Showing posts with label நிகழ்வுகள் - தமிழகம். Show all posts
Showing posts with label நிகழ்வுகள் - தமிழகம். Show all posts
Monday, March 15, 2010
Saturday, March 13, 2010
தமிழகமும்...சட்டசபை திறப்பும்..-1

தமிழகம்,கேரள மாநிலத்தின் மலபார்,ஆந்திராவின் கடற்கரைப் பகுதிகள் மற்றும் ராயல்சீமா,கர்நாடகாவின் பெல்லாரி,தெற்கு கர்நாடகம்,உடுப்பி ஆகியவை இணைந்து சென்னை மாகாணமாய் இருந்தது.1670ல் ஒரே ஒரு செயலாளர் தலைமையில் தொடங்கப்பட்ட தலைமைச் செயலகம் 1920ல் சற்று விரிவுப் படுத்தி 6 துறைகளும்..ஒவ்வொன்றிற்கும் ஒரு செயலாளர்களும் நியமிக்கப் பட்டனர்.1920ஆம் ஆண்டுதான் முதன் முதலாக தேர்தல் நடத்தப் பட்டு சட்டப் பேரவை அமைக்கப் பட்டது.அப்போது பேரவையின் ஆட்சிக் காலம் 3 ஆண்டுகளாய் இருந்தது.132வ் உறுப்பினர்களில் 34 பேர் ஜனாதிபதியால் நியமிக்கப் பட்டனர்.1937ல் சட்டப்பேரவை 215 உறுப்பினர்கள் ஆனது.மேலவையில் 56 உறுப்பினர் இருந்தனர்.
ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் 1947-49 களில் சென்னை மாகாண முதலமைச்சராய் இருந்தவர்.இவருக்கு முன் நீதிக்கட்சியைச் சேர்ந்த ஏ.சுப்பராயலு,பனகல் அரசர்,முனுசுவாமி நாயுடு,ராமகிருஷ்ண ரங்கா ராவ்,பி.டி.ராஜன் ஆகியவர்கள் முதல்வராக இருந்தார்கள்.பி.சுப்பராயன் சுயேச்சை உறுப்பினரும் 1926ல் முதல்வராய் இருந்தார்.
பின்னர் 1937ல் ராஜாஜி..சென்னை மாகாண முதல்வர் ஆனார்..1946ல் டி.பிரகாசமும்,1947ல் ஓமந்தூராரும் முதல்வர்கள்.இவர்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள்.
ஓமந்தூரார்..தமிழ்நாடு என்று பெயரிடப்படுவதற்கு முன்..சென்னை மாகாணமாய் இருந்தகாலத்தில்..பத்தாவது முதலமைச்சராய் இருந்தவர்.1947ல் காமராஜரின் ஆதரவோடு முதல்வரானார்.முன்னதாக ஜஸ்டிஸ் கட்சி 1921ல் பெண்களுக்குத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை வழங்கிய சட்டத்தை நிறைவேற்றியது.பின் 1921ல் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் வாழ்வில் வகுப்புவாரி பிரதிநிதித்துவ ஆணையை நிறைவேற்றியது.
1947ல் ஓமந்தூரார்..ஆட்சியில்..எல்லாஜாதியினரும் கோயில்களுக்குள் சென்று வழிபடும் சட்டம், தேவதாஸி முறை ஒழிப்பு ஆகிய சட்டங்கள் உருவாக்கியது இவரது சாதனைகள் எனலாம்.சென்னை மாகாண அரசுக்கான கோபுர சின்னத்தை ஏற்படுத்தியவரும் இவரே..ஒரு குறிப்பிட்ட மதம் தொடர்பான சின்னம் இருக்கக் கூடாது என எதிர்ப்புகள் இருந்தும்,,அந்த விவகாரத்தை புத்திசாலித் தனமாக கையாண்டார்.இன்றும் அந்தச் சின்னமே தமிழக அரசின் சின்னமாய் இருந்து வருகிறது.(ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் கோபுரம் அது)
இவர் பெயர் கொண்ட ஓமந்தூரார் தோட்டத்தில்தான் புதிய சட்டசபை வளாகம் கட்டப்பட்டுள்ளது.
(சட்டசபை தொடரும்)
Subscribe to:
Posts (Atom)