Showing posts with label படைப்புகள் - கவிதை. Show all posts
Showing posts with label படைப்புகள் - கவிதை. Show all posts

Wednesday, October 3, 2012

இரு நிலவுகள் (கவிதை)






பௌர்ணமி இரவு

தெளிந்த நீரோடை

கரையில் அவள்

நீரில் நிலவுகள்

களங்கத்துடன் ஒன்று

களங்கமின்றி ஒன்று

Tuesday, May 8, 2012

கழுகு




காதலித்தான்

காதலித்தாள்

காத்திருந்தாள்

காதலனுக்கு

இலவு காத்த கிளியாய்

கழுகொன்று பறந்தது மேலே


Sunday, May 6, 2012

தாயும் கோயிலாகிறாள்..




கோயில்

கருவறையில் இறைவன்

தாயின் கருப்பையில்

குழந்தை

குழந்தையும், இறைவனும் ஒன்றெனில்

கருப்பையும், கருவறையும் ஒன்றல்லவா..?

கருவறை கோயிலில்

கருப்பை தாயிடம்

தாயும் கோயிலாகிறாள்..


Monday, February 27, 2012

எதை அறுப்பான்..??




தினை விதைத்தவன்

தினை அறுப்பானாம்

வினை விதைத்தவன்

வினை அறுப்பானாம்

ஊரைக் கொள்ளையடிப்பவன்

எதை அறுப்பான்

மக்களை கொன்று குவித்தவன்

எதை அறுப்பான்...