Showing posts with label பதிவர் சந்திப்பு. Show all posts
Showing posts with label பதிவர் சந்திப்பு. Show all posts

Friday, March 26, 2010

சென்னை பதிவர் குழுமம்

நாளை பதிவர்கள் சந்திப்பு..கே.கே.நகர்.டிஸ்கவரி பேலஸில் மாலை நடைபெற உள்ளது.விவரம் இங்கு..

இணையதள பதிவர் குழுமம் என பொதுவாக இருக்கலாம்..இதில் சென்னைப் பதிவர்கள் மட்டுமின்றி..பதிவர்கள் எந்த ஊரில் இருந்தாலும் அங்கத்தினர் ஆகலாம்..அவர்களுக்கு அதற்கான அடையாள அட்டையையும் வழங்கலாம்..(சென்னை பதிவர் குழுமம் என்பதில் முதலில் சென்னை என்பது தேவையில்லை )..இணைய தள பதிவர் - சென்னை என்றிருக்கலாம்.. அதே போல இணையதள பதிவர்..(கோவை,ஈரோடு என அடுத்து ஊர் வரலாம்)

பதிவர்களிடமிருந்து மாதச் சந்தாவோ..வருடச் சந்தாவோ ஒரு குறிப்பிட்ட தொகையை நிர்வாகச் செலவுகளுக்கு வாங்கலாம்.அதைவிடுத்து..ஈரோடு பதிவர் குழுமம்,கோவை பதிவர் குழுமம் என நம் நண்பர்களையே பிரிப்பானேன். ஒவ்வொரு வருடமும் ஒரு குறிப்பிட்ட தினம்..ஏதேனும் நகரில்..பதிவர்கள் மகாநாடு நடத்தலாம்..அதற்கான தீர்மானத்தை அனைவரும் சேர்ந்து எடுக்கலாம்.

உதாரணமாக..கோவையில் அடுத்த பதிவர் மகாநாடு என்றால்..உள்ளூர் பதிவர்கள் விரும்பும் வண்ணம் அதை அனைவரும் சென்று நடத்தி சிறப்பிக்கலாம்..தாய் குழுமம் சென்னையில்..அதன் பொறுப்பில் இருப்பவர்கள் என ஒவ்வொரு பகுதிக்கும் ஒருவரை அல்லது இருவரை நியமிக்கலாம்.

விடுத்து..இப்படி நகருக்கு நகர் அவரவர்கள் குழுமம் அமைத்துக் கொண்டால்..ஒரு கட்டத்தில் பதிவரிடையே குறுகிய மனப்பான்மை வளர வழிவகுத்துவிடும்.

நாளுக்கு நாள்..இணையதளம் ஒரு பெரிய சக்தியாய் வளர்ந்து வருகிறது..அதை பெரிய அளவிலேயே அமைத்து..ஒரு மா பெரும் சக்தியாய் வளர்ப்போமே..

இந்த என் கருத்து பிடித்திருந்தால் தம்ப்ஸ் அப்பில் வாக்களியுங்கள்.