Showing posts with label பதிவர் சந்திப்பு - நகைச்சுவை. Show all posts
Showing posts with label பதிவர் சந்திப்பு - நகைச்சுவை. Show all posts

Sunday, April 11, 2010

நான் ஏன் பதிவர் சந்திப்பைப் புறக்கணித்தேன்

பதிவர் சந்திப்பு என்றால்..நான் சென்னையில் இருந்தால் கண்டிப்பாக இதுநாள் வரை கலந்துக் கொள்வேன்..ஆனால் சென்ற சனிக்கிழமை நடந்த சந்திப்பிற்கு நான் செல்லவில்லை.

அதற்கான 10 காரணங்கள்

1)முக்கியமாக சந்திப்பு ஆரம்பிப்பதற்கு முன்னால்..யாரேனும் ஏதேனும் ஜெராக்ஸ் காபி எடுத்த நோடீஸ்களைக் கொடுத்தால் அதை வாங்குவதா..வேண்டாமா என்ற குழப்பம்.

2)முதலில் சில பதிவர்கள்..முதலிலேயே பதிவர் சந்திப்பு என்பதைத் தீர்மானித்து விட்டு..பின் மற்றவர்களை அழைத்திருக்கிறார்கள் என யாரேனும் வன்மையாக குற்றம் சாட்டுவர்

3)பதிவர்கள் வட்டமாக அமர்வார்களா..வரிசையில் அமர்வார்களா..வரிசையில் அமர்ந்தால் யார் யார் முதல் வரிசையில் அமர்வது என்ற குழப்பம் இருக்கும்

4)யாரேனும் ஒரு பதிவர் டீ,பிஸ்கெட் சப்ளை செய்துவிட்டு ..அதற்கான காசை கொடுத்தால் ..நானும் தருகிறேன் என்று சொல்வேன்..உடன் அவர்..அப்படியானால் நான் தற்கொலை செய்துக் கொள்வேன் என்றுவிட்டால்..கடற்கரை வேறு..நமக்கு எதற்கு ஏன் வீண் வம்பு?

5)வரும் அனைத்துப் பதிவினரிடையேயும் சொல்லிக் கொண்டு கிளம்ப வேண்டும்..யாரிடமேனும் மறந்து சொல்லாமல் கிளம்பினால்..அவர்கள் மனதில் கீறல் ஏற்படும்..அதைத் தவிர்க்கலாம்..

6)நாம் ஒரு யூத் பதிவர் என்பது ஊரறிந்த ரகசியம்..நம்மை யாரேனும் வயதான, மூத்த பதிவர் புகைப்படம் எடுத்து..தன் பதிவில் நமக்கு விளம்பரம் கொடுத்து விட்டால்...அவர்களுக்கு நம்மால் வீண் வேலை

7)நாம் யாரேனும் பேசுகையில் மௌனியாய் இருக்க வேண்டும்..அப்படியில்லா விட்டால்..'சைலன்ஸ் பேசறாங்க இல்ல..' என்று வாத்தியார் தோரணையில் யாரேனும் குரல் கொடுப்பார்களோ என்ற பயம்..

8)ராமு..சோமு என இயக்குநர்கள் யாரேனும் வந்திருந்து..சந்திப்பு அவர்கள் எடுத்த படங்கள் பற்றி இருந்து விட்டால்...என்ன செய்வது.

9)சந்திப்பிற்கு முன் நம் பெயர், விலாசம் என..கேட்டு வாங்கும் போது..அதைப்பார்த்துக் கொண்டிருக்கும் கடற்கரைக்கு வரும் கூட்டம் நம்மை ஒரு தீவிரவாதி என எண்ணிவிட்டால் என்ன செய்வது?

10)வலைப்பதிவர் குழுமத்தில் இனி பதிவர் சந்திப்பு நடத்த அனுமதி வாங்க வேண்டுமா? இவர்கள் வாங்கி இருக்கிறார்களா?

மேற்குறிப்பிட்ட காரணங்களால் நான் கலந்துக் கொள்ளவில்லை.


ஹி..ஹி..ஹி...உண்மைக் காரணம்..அன்று எனக்கு வேறு வேலை இருந்தது.உண்மையில்.பால பாரதியையும் மற்ற நண்பர்களையும் பார்க்க முடியாதது வருத்தமே!

யாரேனும்..இன்னொரு பதிவர் சந்திப்புக்கு ஏற்பாடு பண்ணுங்கப்பா..