
(மேலே உள்ள போலீஸ்காரரால் என்ன செய்ய முடியும்?)
கிராமப்புறங்களில் உள்ள குடிசை வீடுகள் அனைத்தும் 6 ஆண்டுகளில் கான்கிரீட் வீடுகளாகக் கட்டித்தரும் தமிழக அரசின் திட்டத்திற்கு..முதல் ஆண்டிற்கான அரசு செலவிடப்போகும் பணம் இது..இதனால் மூன்று லட்சம் மக்கள் வீடு பெறுவர்..இதற்கான செலவு 1800 கோடீ ருபாய்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சி,5 பேரூராட்சி மற்றும் 64 வழியோரக்குடியிருப்புகள் ஆகியவற்றிற்கு குடிநீர்திட்ட விவாக்கத்திற்கு அரசு செலவிடப்போகும் பணம் 1800 கோடி..இதனால் மக்கள் தாகம் தீர 270 மில்லியன் லிட்டர் குடிநீர் கிடைக்கும்..
மாயாவதிக்கு அவர் ஆயுள் முழுதும் பிறந்த நாளுக்கு பணமாலை போட 1800 கோடி போதும்..
IPL T20 கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு..போட்டியாளர்கள் முதல் பரிசுத் தொகையாக 1800 கோடியை கிட்டத்தட்ட 400 ஆண்டுகளுக்குக் கொடுக்கலாம்.
ஆமாம் இதெல்லாம் என்ன கணக்கு என்கிறீர்களா?
இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவர் கேதன் தேசாயிடமிருந்து ஊழல் குற்றச்சாட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பணம்..ஒவ்வொரு வருடமும் அங்கீகாரம் தர கோடிக்கணக்கில் லஞ்சம்..தவிர அக்கல்லூரிகளில் அவருக்கென்று 5 சீட்டுகள்..அதன் மூலம் ஆண்டு வருமானம் 200 கோடி..
ஊழல் பெருச்சாளி எனக் கேள்விப்பட்டிருக்கிறோம்..ஆனால் ஊழல் யானை இவர்..
ஆமாம்..சாதாரணக் குடிமகனுக்கு கிடைக்கும் டெபாசிட் வட்டியில் கூட pan நம்பர் இல்லையேல் வருமான வரி பிடித்தம் செய்யச் சொல்லும் அரசுக்கு..இவ்வளவு ஆண்டுகளாக எப்படி இவரைப் பற்றித் தெரியாமல் போச்சு?
மேலே குறிப்பிட்டுள்ளது 1800 கோடிக்கு எத்தனை சைபர் எனத் தெரிந்துக் கொள்ள..
அது சரி + போட்டு அது என்ன என்கிறீர்களா? அவரிடமிருந்து கைப்பற்றிய 1500 கிலோ தங்கத்தின் மதிப்பு..(கிராம் 10000 ரூபாய் எனக் கொண்டால்)
அவருக்கென்ன..வாழ்நாளில் பெரும் பகுதி கழிந்து விட்டது..மீதி நாளை ஜாமீனில் கழித்துவிடுவார்..
கடைசியில் பதிவை ஒரு திருக்குறளுடன் முடிக்காவிட்டால் வானம்பாடிகள் (பாலாஜி) கோபித்துக் கொள்வார்..அதனால் ஒரு குறள்
தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்
ஏதப்பா டஞ்சு பவர்
(களங்கத்துக்குப் பயப்படக்கூடியவர்கள்..விளைவுகளை எண்ணிப் பார்த்து அந்தக் களங்கம் தரும் காரியத்தில் இறங்காமல் இருப்பார்கள்)
எருமைத் தோலர்களைப் பற்றியும், நாட்டு துரோகிகள் பற்றியும் பேசிப் பயனில்லை..
டிஸ்கி..- ஹி..ஹி..மேலே உள்ள போலீஸ்காரர் நான் தான்..என் 'மனசேதான் கடவுளடா" நாடகத்தில்