நமது உடலில் ஏழு வகை சுரப்பிகள் வெளியிடும் திரவம் ரத்தத்தில் கலந்து வாதம்,பித்தம்,சிலேத்துமம் ஆகிய மூன்று நாடிகளை இயக்குகிறது.இதன் மூலம் உடலுக்குத் தேவையான புரதம்,கொழுப்பு,மாவு சத்துகளை சமப்படுத்தி..சீரான வெப்ப நிலையில் நமது உடலை ஆரோக்கியமாக பாதுகாத்து வருகிறது.
2)ஜோதி பாசுவின் மறைவிற்குப் பின் 1964ல் மார்க்சிஸ்ட் கட்சியை உருவாக்கிய அத்தனை பொலிட் பீரோ உறுப்பினர்களையும் அக்கட்சி இழந்து விட்டது.23 ஆண்டுகள் முதல்வராய் இருந்த பாசு அதிகாரத் தோரணையோ..மமதையோ இல்லாதவராகத் திகழ்ந்தார்
3)ஒவ்வொன்றிற்கும் ஒரு சீசன் உண்டு.மாம்பழ சீசன்,பண்டிகை சீசன்,ஆடித் தள்ளுபடி சீசன்,சங்கீத சீசன் இப்படி..ஆனால் ஆண்டவனுக்கு சீசன் என்று நாம் கேள்விப் பட்டதில்லை.அதையும் சமீபத்தில் வந்த பத்திரிகை செய்திகள் சொல்லி விட்டன.சபரிமலை சீசனில் வசூலான உண்டியல் தொகை 119 கோடி ரூபாய் என்று செய்தி வெளி வந்துள்ளது.
4)இதுவரை இவர் 28 முறை சிறை சென்றுள்ளார்..நான்காண்டு காலம் சிறையில் கழித்துள்ளார்.அதிகக் காலம் சிறையில் இருந்த திராவிட இயக்கத் தலைவர் இவர் ஒருவரே! அவர் தான் வைகோ ஆவார்
5)ஒவ்வொரு குடியரசு தினத்திற்கும் சிறந்த தொண்டாற்றியவர்களுக்கு 'பத்ம' விருதுகள் வழங்குகிறது.இப்படிப்பட்ட விருதுகள் 1954 முதல் இந்திய அரசு வழங்கி வருகிறது.முதன் முதலில் ராஜாஜி,குடியரசு துணைத் தலைவராய் இருந்த ராதாகிருஷ்ணன்,சி.வி.ராமன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
6) ஒரு ஜோக்..
தலைவர்- அடடா..என்ன வெயில்....தாங்க முடியல
நிருபர்- அப்போ..உங்களுக்கு பிடித்த பருவம் எது
தலைவர்-16 வயது முதல் 24 வயது வரை