Showing posts with label முன்னணி பதிவுகள்... Show all posts
Showing posts with label முன்னணி பதிவுகள்... Show all posts

Tuesday, September 11, 2012

மெகா சீரியல்களும்..பதிவர்களும்..




மெகா சீரியல்கள் ஒரே மாதிரி..பெண்களை அழ வைக்க வேண்டும் என்னும் நோக்கிலேயே எடுக்கப்படுகின்றன என்பது ஒரு பக்கம் இருந்தாலும்..

அந்தத் தொடர்களில்..பெண்ணே பெண்ணுக்கு எதிரியாய் ..கதாநாயகியை கொடுமைப் படுத்துவதும்..அடியாட்களை வைத்து கொலை செய்வதும் போன்ற அநியாயத்திற்கு லாஜிக்குடன் காட்சிகள் அமைந்திருக்கும்.

இதற்கிடையே, தொடர்களை எப்படி வளர்ப்பது எனத் தெரியாமல்...

வேறு ஒரு தொடரில்..யாருக்கேனும் பக்கவாதம் வருவதாய் இருந்தால்..அதேபோன்று அடுத்தவாரம் வேறு ஒரு தொடரில் ஒரு கதாபாத்திரத்திற்கு அந்த நோய் வந்திருக்கும்..

கணவன் மனைவிக்குத் தெரியாமல்..வேறொரு பெண்ணுடன் வாழ்வது போல வந்தால்....வேறு தொடர்களிலும் அதே போன்ற காட்சிகளை எதிர்பார்க்கலாம்..

இதெல்லாம் கற்பனை வளம் குறைவதால் என்று கூற முடியாது..சீரியலை சேனல்கள் வளர்க்கச் சொன்னால் ..கதாசிரியர்தான் என்ன செய்வார்..இயக்குநர்தான் என்ன செய்வார்..தயாரிப்பாளர்தான் என்ன செய்வார்.நடிகர்களும் மீட்டர் விழுந்தால் போதும் என்பவர்கள்..

அது போகட்டும்..பதிவர்களுக்கும்..இதற்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா..?

இங்கும் கிட்டத்தட்ட அதுதான் நடைபெறுகிறது..

ஒரு பதிவரின்..பதிவு அதிக கமெண்டுகளையும், ஓட்டுகளையும், வருவோர் எண்ணிக்கையையும் அதிகரித்தால்..

அந்த பதிவை முன்மாதிரியாகக் கொண்டே..பல பதிவர்களின் பதிவுகள்...

உதாரணத்திற்கு..பதிவர் சந்திப்பு பற்றிய அநேக பதிவுகள்..

பிறகு....

இன்னும் சொல்லுவேன்..ஆனால்..

நான் யாரைப்பார்த்தாவது..பொறாமைக் கொண்டு..இப்பதிவை எழுதியுள்ளதாக சிலர் நினைத்துவிடக் கூடும்.ஆகவே இத்துடன் நிறுத்துக் கொள்கிறேன்.


Thursday, July 19, 2012

தமிழ்மண முன்னணி பதிவுகள்..




கடந்த இரு ஆண்டுகளாக முன்னணி பதிவுகள் என தமிழ்மணம் ரேங்க் பட்டியல் வெளியிடுகிறது.

இதில் முதல் 10 ரேங்கிற்குள் வரவேண்டும் என்பதே பல பதிவர்கள் விருப்பமாய் உள்ளது.

அதற்காகவே தினம் பதிவு போடுபவர்கள், கவர்ச்சிகர தலைப்பு வைப்பவர்கள் என பதிவர்கள் பலவகை உண்டு. நம் வலைப்பூவிற்கு படிக்க விரும்புபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்பதே இதற்கான காரணமாய் உள்ளது.

இந்நிலையில் , இவ்வாண்டு முடிய இன்னும் ஐந்து மாதங்களே உள்ள நிலையில்,  பல பதிவர்கள் முழு மூச்சுடன் பதிவிட ஆரம்பித்துள்ளார்கள்.இதில் சில மூத்த பதிவர்களும் உண்டு.

இதைத்தவிர்த்து..சிலர் சில விருதுகளை எதிர்பார்த்தும் பதிவுகள் இட்டு வருகின்றனர்.

அவரவர் திறமை பளிச்சிடவும், எண்ணங்கள் நிறைவேறவும் வாழ்த்துகள்.