சமீப காலங்களாக விஜய் படங்கள் தோல்வியைத் தழுவி வருகின்றன..
..எல்லோரிடம்..'நீங்க சொல்றது சரிங்ணா..' என்று அன்புடன் பேசும் அவரையும் தோல்வி..ஒரு பேட்டியின் போது..'சைலன்ஸ்..பேசிக்கிட்டு இருக்கேன்..இல்ல..' என கோபப்பட வைத்தது..(இந்த இடத்தில் இதே பாணியைப் பின்பற்றிய நர்சிம் உங்க ஞாபகத்திற்கு வந்தால் கம்பெனி பொறுப்பல்ல)
வில்லு, அழகிய தமிழ் மகன், வேட்டைக்காரன், சுறா..என..ஹேட்ரிக் தோல்வியையும் மிஞ்சி தோல்வியத் தந்த இவரா...ஒரு காலத்தில்..மதுர,திருப்பாச்சி,சிவகாசி,கில்லி என பல வெற்றி படங்களைத் தந்தார் ..என திரை உலகினரை மட்டுமன்றி அனைவரையும் வியக்க வைத்தது..
அரசியல் ஆசை, தந்தையின் குறுக்கீடு, கதை அமைப்பு என பல காரணங்கள் சொல்லப்பட்டாலும்...
அவரது படங்கள் ஒரே மாதிரி கதை அமைப்புக் கொண்டவையாய் இருந்ததே உண்மைக் காரணம்..தவிர்த்து..எம்.ஜி.ஆர்., ரஜினி ஆகியவர்களைப் பின்பற்றி சண்டைக் காட்சிகளும்..பஞ்ச் வசனங்களும் வேறு..
ரஜினியின் வெற்றி..அவர் யார் பாணியையும் பின்பற்றாததால் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தைப் பெற்று தந்தது..
விஜய்க்கு ரஜினியைப் போல்..அனைவரும் விசிறிகள்..அவர்கள் விரும்புவதைக் கொடுக்க வேண்டியது அவரது கடமை..
இந்நிலையில் சமீபத்தில் வந்துள்ள செய்தி ஒன்று அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது...அந்த செய்தி..
விஜய் நடித்து வரும்..'காவல்காரன்' என்ற படம் 'பாடிகார்ட்' என்ற பெயரில்..தான் தயாரித்து சித்திக் இயக்க்த்தில் வந்து வெற்றிகரமாக ஓடிய படம் என்றும்..தனது ஒப்புதல் இல்லாமல் சித்திக் அதை தமிழில் தயாரித்து வருவதாகவும்..அதற்கு அவருக்கு உரிமை இல்லையென்றும் ஜானிதாமஸ் என்பவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.சென்னை உயர் நீதி மன்றமும்..இதை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரிக்க உத்தரவிட்டுள்ளது..
இதில் என்ன ஆச்சர்யம் என்கிறீர்களா..
பிற மொழியில் நல்ல கதையம்சத்துடன் வெற்றிகரமாக ஓடிய படம்...விஜய்க்கு இது மற்றொரு கில்லியாக அமையும்..
இதற்குப் பிறகு ..யாரும் விஜய் படங்கள் ஒரே மாதிரியானவை என யாரும் சொல்லமாட்டார்கள் என நம்புவோம்.