Showing posts with label - செய்திகள். Show all posts
Showing posts with label - செய்திகள். Show all posts

Wednesday, September 5, 2012

சாய்பாபாவின் 40,000 கோடி சொத்துக்கள் யாருக்கு?



மறைந்த சத்ய சாய்பாபாவின் உயில் இப்போது வெளியாகியுள்ளது.
ரூ. 40,000 கோடி சொத்துக்கள் கொண்டது சத்ய சாய்பாபாவின் அறக்கட்டளை. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் மறைந்ததையடுத்து அவரது சொத்துக்களை யார் பராமரிப்பது என்பது குறித்த பிரச்சனைகள் எழுந்தன.

இந் நிலையில் 1967ம் ஆண்டு மார்ச் மாதம் 23ம் தேதி சாய் பாபா எழுதி வைத்த உயில் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. சாய் பாபாவின் உதவியாளரான சத்யஜித் சாலியன் அதை நேற்று ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளையின் இயக்குனர் குழுவிடம் சமர்பித்தார்.

எனது பக்தர்களால் தரப்பட்ட எல்லா நன்கொடைகளும் மக்கள் நலப் பணிகளுக்கே செலவிடப்பட வேண்டும். சொத்துக்களில் எந்தப் பகுதியும் வேறு எந்த தனிப்பட்ட நபருக்கும் இல்லை. எனக்கு என்று எந்த தனிப்பட்ட சொத்தும் இல்லை. எனது குடும்பத்தினரின் சொத்துக்களிலும் கூட எனக்கு பங்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டேன் என்று கூறப்பட்டுள்ளது.

தனது அறக்கட்டளையின் உறுப்பினரும் சார்ட்டர்ட் அக்கெளண்டன்டுமான இந்துலால் ஷா, மும்பை உயர் நீதிமன்ற சொலிசிட்டராக இருந்த டிஐ சுக்லா ஆகியோரை சாட்சிகளாக வைத்துக் கொண்டு இந்த உயிலை எழுதியுள்ளார் பாபா. இதில் இந்துலால் மட்டுமே இப்போது உயிரோடு உள்ளார்.
இந்த உயில் வெளியானதன் மூலம் பாபாவின் அறக்கட்டளையின் சொத்துக்களில் அவரது குடும்பத்தினருக்கு எந்த பங்கும் இல்லை என்பது தெளிவாகிவிட்டது.
சாய்பாபாவின் அறக்கட்டளை புட்டபர்த்தியில் பல்கலைக்கழகம், மருத்துவமனை, மியூசியம், கோளரங்கம், ரயில் நிலையம், விமான நிலையம், விளையாட்டு அரங்கம், பெங்களூரில் மருத்துவமனை, ஆசிரமம், தமிழகம் மற்றும் ஆந்திராவில் பல குடிநீர்த் திட்டங்கள், நாடு முழுவதும் பல கல்வி நிலையங்கள், சுகாதார மையங்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் 165 நாடுகளில் இந்த அறக்கட்டளைக்கு ஆசிரமங்கள் உள்ளன. இன்னும் அதற்கு உலகம் முழுவதும் இருந்தும் நன்கொடைகள் வங்கிகள் மூலமாக வந்து கொண்டு தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 (தட்ஸ்தமிழ்)

Friday, July 23, 2010

தேங்காய்-..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (23-7-10)


1) இந்தியாவில் அதிகம் பேர் வேலை பார்ப்பது ரயில்வே துறையில்தான்.இத் துறை 16 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.14 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வேலை பார்க்கின்றனர்

2)உலகின் மிகப் பெரிய நூலகம் வாஷிங்டனில் உள்ளது.இது 1800ஆம் ஆண்டு அமைக்கப் பட்டது.66 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இந்நூலகத்தில் 8.75 கோடி புத்தகங்கள் உள்ளனவாம்.

3)அ.தி.மு.க.,விலிருந்து பிரபலங்கள் பலர் தி.மு.க.,விற்கு சென்றுக் கொண்டிருப்பதால்..அதைத் தடுக்க என்ன செய்யலாம் என்று யோசித்த ஜெ..கோவை..பொதுக்கூட்டத்தில் 'நீங்கள் எதிர்பார்க்கும் கூட்டணி அமையும்' என்று பேசினாராம்.அதைக் கேட்ட சில ரத்தத்தின் ரத்தங்கள் ' கட்சி மாறும் எண்ணத்தை தற்காலிகமாக கிடப்பில் போட்டுவிட்டதாகத் தெரிகிறது.

4) இதயமும், நுரையீரலும் சரியாக இயங்க தைராயிடு சுரப்பி முக்கிய பங்காற்றுகிறது.தைராயிடு சுரப்பி நன்கு சுரந்தால்தான் உடலின் சக்தி அதிக அளவாக இருக்கும்.தைராயிடு problem இருப்பவர்கள் அதை அலட்சியம் செய்யாது..உடனடியாக மருத்துவரை அணுகி அதற்கான மாத்திரைகளை விடாது சாப்பிடவும்.

5)ஒவ்வொரு நாளும் நமது மூக்கு 14 கன மீட்டர் காற்றை குளிர்விக்கிறதாம்.இது ஒரு சிறிய அறையில் நிரம்பியிருக்கும் காற்றின் அளவாகும்.

6)ஐ.நா., வளர்ச்சிக் குழுவில் இடம் பிடித்து இருக்கிறார் முகேஷ் அம்பானி.பணத்தேவை உள்ள இடங்களையும்,மக்களையும் அடையாளம் கண்டு அவர்களுக்கு உதவி செய்வது இக் குழுவின் வேலை.பில் கேட்ஸ் உள்ளிட்ட உலக பணக்காரர்கள் இடம் பெற்றிருக்கும் இக் குழுவில் ஒரு இந்தியர் இடம் பெற்றிருப்பது இதுவே முதல் முறை.

7)சென்ற வாரம் நான் படித்த இடுகைகளில் தமிழா தமிழா வின் மகுட இடுகை இதுதான் ..வாழ்த்துகள் குமரன்

8)கொசுறு ஒரு ஜோக்..

ரீடர்ஸ் டைஜஸ்டில் நான் படித்த ஜோக்..

one sunday our house was filled with friends watching the finals of a foot-ball tournament.As the game was ending, my brother-in-law, a sold ier , called all the way from Japan where he is stationed.As he spoke with my wife, I told my pals 'He is 14 hours ahead of us.It is already monday there'.
one of my friend had a brilliant suggesion 'Ask him who won.'