Showing posts with label -அரசியல். Show all posts
Showing posts with label -அரசியல். Show all posts

Friday, October 5, 2012

ஆனாலும் பா.ம.க.,விற்கு ரொம்பத் தாங்க.....


கடலூர் மாவட்டத்தில் கிராமம், ஊராட்சி, நகரம், ஒன்றியம் வாரியாக பாமக கட்சிக் கொடிக் கம்பங்களை ஏற்றி வைத்துச் செல்லும் வழியில் நெய்வேலி வந்த அன்புமணி ராமதாஸ் நிருபர்களுக்கு அளித்தப் பேட்டி:

அடுத்து நடைபெறவுள்ள நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் பாமக இனி தனித்துப் போட்டியிடும் என நெய்வேலியில் வெள்ளிக்கிழமை முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

தமிழகத்தில் இன்று மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதற்குக் காரணம், தமிழகத்தை முன்னர் ஆண்ட கட்சியும், தற்போது ஆளுகிற கட்சியும்தான். இதில் கருணாநிதியின் பங்கு மிக அதிகம்.

÷காவிரி நீர்ப் பிரச்னைக்காக அன்றாடம் அறிக்கை மேல் அறிக்கை விட்டுக் கொண்டிருப்பதால் பிரச்னைக்குத் தீர்வு ஏற்படாது.

÷காவிரி நீரைப் பெற்றுத் தருவதில் இரு கட்சிகளும் மெத்தனமாகவே செயல்படுகின்றன. அதற்கு தீர்வு காணும் வழியை ஆய்வுசெய்து அதற்கான வேலைகளில் இறங்க வேண்டும்.

÷பாமக ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கு. மேலும் அன்னிய நேரடி முதலீட்டுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் ராமதாஸ் மட்டுமே.

÷எனவே திமுக, அதிமுக போன்ற திராவிடக் கட்சிகளைப் புறந்தள்ளிவிட்டு தற்போது இளைஞர்கள் பாமகவில் தங்களை இணைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்றார் அன்புமணி ராமதாஸ்.


Monday, October 24, 2011

எம்.ஜி.ஆர்., ஏன் திமுகவில் அமைச்சராகவில்லை..?!




அந்த சமயத்தில் எம்ஜிஆர் எந்தக் கட்சியிலும் இல்லை.,ஆனால் அரசியல் பற்றி சிந்தனையாளர்கள் பற்றி அடிக்கடி அந்நாள் பிரபல இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தரிடம் விவாதிப்பாராம்.

மூத்த இயக்குநர் திருலோகசந்தர் சமிபத்தில் ஒரு வார இதழிற்கு பேட்டிக் கொடுத்திருந்தார்.அதில் இவ்வாறு தெரிவிக்கிறார்.

அவர் மேலும் கூறுகையில்..

ஒருநாள் எம் ஜி ஆர் என்னிடம்'இப்போது இருக்கும் நிலையில், எனக்கு எந்தக் கட்சியிலும் ஈடுபாடு இல்லை.நானே ஒரு கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்றுள்ளேன்.அது சாத்தியமா? அது என்னால் முடியுமா? என்றார்.

அதற்கு நான்., 'முடியும்.ஆனால் அதற்கு கொஞ்ச காலம் பொறுத்திருக்க வேண்டும். முதலில்  அரசியல் அறிவு வேண்டும்.பின்னால் இருந்து நம்மை முன்னுக்குத் தள்ளும் உந்துதல் சக்தி வேண்டும்.அது மனித கூட்டம்,தொண்டர் படை, கோட்பாடு, பேச்சாற்றல் ஆகும்.இப்பொழுது ஒரு கூட்டம் உங்களை தொடர ஆரம்பித்து இருக்கிறது.இது போதாது.காமராஜர்,அண்ணா போல ஒரு கட்சியைச் சார்ந்திருந்து முன்னேறுவது உசிதம்.உங்களுக்கு சரி என்று தோன்றும் அரசியல் கட்சியில் சேருங்கள்.அந்தக் கட்சியையும் உங்களையும் வளர்த்துக் கொள்ளுங்கள்.பின் நல்ல அறிமுகத்தோடு வந்து கட்சி ஆரம்பியுங்கள் அதற்குள் உங்களுக்கே பல விஷயங்கள் புரிந்துவிடும்.நீங்கள் மக்களுக்குச் செய்ய வேண்டிய நன்மைகளை செய்ய முடியும்' என்றேன்.

பின்னாளில் அதுவே சாதனையானது.

'திராவிட முன்னேற்ற கழகம் முதன் முறையாக அரசு அமைக்கும் முயற்சியில் இருந்த போது நான், ' நீங்கள் நிச்சயம் அமைச்சராவீர்கள்' என்றேன்

அதற்கு அவர், 'ஆக மாட்டேன்..இப்போது மந்திரிப் பதவிக்காக போட்டி நடக்கப் போகிறது.அதில் கலந்துக் கொண்டு அனைவரின் அதிருப்தியையும்,விரோதத்தையும் பங்கிட்டுக் கொள்ள நான் விரும்பவில்லை.ஆர்வக் கோளாறால் பல தவறுகள் நடக்கலாம்.அதில் நானும் அங்கமாக இருக்க விரும்பவில்லை' என்றார்.

பின்னர் எம் ஜி ஆரே...வெளியே வந்து தனிக்கட்சி ஆரம்பித்து முதல்வரானது தனிக்கதை.

இப்படி பேட்டிக் கொடுத்த திருலோகசந்தர் எம் ஜி.ஆரின் நண்பர்..அவரை வைத்து சில படங்களை இயக்கியுள்ளார்.