Monday, January 19, 2009

ஐ.டி., ஊழியர்களே மனம் தளராதீர்கள்...

விடியற்காலையில்...சென்னையில் எந்த பகுதியைச் சேர்ந்தவராக நீங்கள் இருந்தாலும்...அப்பகுதியில் இருக்கும் பஸ் நிறுத்தம் அருகே வந்திருக்கிறீர்களா?

சூரியன் உதிக்கும் முன்..நீங்கள் எழுபவராய் இருந்தால்..நான் சொல்லும் காட்சிகளைப் பார்த்திருப்பீர்கள்.

பொறியியல் கல்லூரியில் ....EEE,ECE,IT படிக்கும் இளம்மொட்டுக்கள்...கண்களில் தூக்கம் கலையாமல்..ஆனால் அதே நேரம் வருங்காலம் பற்றிய கனவுகளுடன்..வெறும் வயிற்றுடன்..கல்லூரி பேருந்தை எதிர்ப்பார்த்து காத்திருப்பார்கள்.

இவர்கள் இப்படி என்றால்..இன்னொரு பக்கம்...படித்து முடித்து ....ஏதேனும் மென் பொருள் நிறுவனத்தில் வேலை செய்யும் ..வாழ்நாளில் முன்னேறத் துடித்துக் கொண்டிருக்கும் இளைஞர்கள் தங்கள் நிறுவன பேருந்திற்காக காத்திருக்கும் அவலம்.

இதுவரை இக்கட்சிகளை பார்ததில்லையெனில்...நாளை சென்று பாருங்கள்.

ஆனால் கடந்த சில நாட்களாக..அம்முகங்களில் ஒரு வாட்டம்...எதிர்காலம் பற்றி கேள்விக்குறி...

உலகமெங்கும் பொருளாதார நெருக்கடி.ஐ.டி., துறையில் இன்னும் சற்று தீவிரம்.வெளிநாட்டு ப்ராஜக்ட்கள் நிறுத்தப்பட்டு வருவதால்..நம்ம ஊர் கம்பெனிகள்..செலவுகளைக் குறைக்க...கணிசமான அளவு
சம்பளக்குறைப்பு...ஆள்குறைப்பு செய்கிறார்கள்.50 பேர் செய்ய வேண்டிய வேலைகள்...20 பேர் செய்கிறார்கள்.

இந்நிலையில்...ஒபாமா நாளை பதவி ஏற்றதும்...அவுட் சோர்சிங் நிலைபாட்டில் என்ன முடிவெடுப்பார் என்று தெரியாத நிலை...

போதும் போதாதற்கு..இப்படிப்பட்ட நிலையில்தானா சத்யத்தின் அசத்ய நிலை வெளிவரவேண்டும்.கண்டிப்பாக இது நம் இந்திய நிறுவனங்கள் மீது களங்கத்தை ஏற்படுத்ததான் செய்யும்.

ஆனாலும்...இந்திய மென் பொருள் வல்லுநர்களே! மனம் தளராதீர்கள்.உங்களிடம் திறமை கொட்டிக் கிடக்கிறது.நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள்..தன்னம்பிக்கையை இழக்காதீர்கள்.

தடுக்கி வீழ்ந்தால் தவறல்ல...அது மீண்டும் புத்துணர்ச்சியுடன்..எழத்தான்..நாம் வீழ்வது கண்டு சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்.

நாளையும் நமதே...அதை புரிய வைப்போம்.

வெற்றி நமதே!!!

12 comments:

mvalarpirai said...

உங்களுடைய அன்புக்கு நன்றி....

- தன்னம்பிக்கையுடன் ஒரு மென்பொருள் தொழிலாளி !

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
mvalarpirai

ILA (a) இளா said...

உங்களுடைய அன்புக்கு நன்றி

- தன்னம்பிக்கையுடன் ஒரு வன்பொருள் தொழிலாளி !

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ILA

நசரேயன் said...

உங்கள் அன்புக்கு நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி நசரேயன்

குடுகுடுப்பை said...

நன்றி டிவீயார் அய்யா.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி குடுகுடுப்பை

ஷாஜி said...

அன்புக்கு மிக்க நன்றி நண்பா....

--நாளை நமதே

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஷாஜி

ரவி said...

நன்றி நன்றி நன்றி

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி ரவி