Thursday, January 29, 2009

சிதம்பரத்தின் மவுசு குறைகிறதா....

மத்தியில்...நிதி அமைச்சராக..கடந்த நான்கு ஆன்டுகளிலும் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தவர் சிதம்பரம்.கடந்த சில மாதங்களாக பணவீக்கம் இரட்டை எண்னில் இருந்ததால்...விலைவாசிகளும் உச்சத்திற்கு சென்றன.ஊடகங்கள்..பணவீக்க சிதம்பரம் என்று கூட கிண்டல் செய்தன.இன்னிலையில்..அவரிடமிருந்து நிதி இலாகாவை எப்படி தூக்குவது என அரசும் யோசித்து வந்தது.

மும்பை..வெடிகுண்டு நிகழ்ச்சிக்கு பிறகு..(25-11-08 ) உள்துறை அமைச்சர்..சிவராஜ் படீல் பதவி..விலக..காத்திருந்த மத்திய அரசு...சிதம்பரத்தை..நிதியிலிருந்து..ஹோம்(!!!) அனுப்பிவிட்டது.
நிதிப்பொறுப்பை..மன்மோகன் சிங்கே ஏற்றார்.

மன்மோகன் சிங்..உடல்நிலை சரியில்லா நிலையில்..அடுத்த மாதம்..இடைக்கால பட்ஜெட்..(தேர்தல் வருவதால்) தாக்கல் பட உள்ளது.ஏற்கனவே..வெளிவிவகாரத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி..வேலைப்பளு அதிகம் உள்ளநிலையில்..நிதி நிலை அறிக்கையும் தாக்கல் செய்ய உள்ளார்.இருமாதங்கள் முன்புவரை..நிதி இலாகாவை ஏற்றுவந்த சிதம்பரமே நிதி அறிக்கை தாக்கல் செய்திருக்கலாம்.ஆனால்..சோனியாவிற்கு..சிதம்பரத்தின்..திறமையில் நம்பிக்கை இன்மை வந்து விட்டதா? என்று தெரியவில்லை.

No comments: