Tuesday, January 13, 2009

அ.தி.மு.க., தோல்வி அடைந்தது ஏன்?

அ.தி.மு.க., எம்.ஜி.ஆர்.,இருந்தவரை.. மக்களிடையே..தங்கள் கட்சி அது என்ற எண்ணம் இருந்தது. அவர் மறைந்ததும் கட்சி உடைந்தது.ஜானகி அணி என்றும்,ஜெ அணி என்றும் தேர்தலில் போட்டியிட..மக்கள் இரண்டையும் நிராகரித்தனர்.இதனிடையே..எம்.ஜி.ஆர்.உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த போது..அவரால் பணிகளை ஒழுங்காக செய்ய முடிய வில்லை..ஆகவே என்னை முதல்வராக ஆக்குங்கள் என ஜெ..தில்லிக்கு ராஜிவிடம் காவடி எடுத்ததுண்டு.

ராஜிவ்..1989ல் ஆட்சிக்கு வந்த தி.மு.க.வை கலைத்து..ஜெ கூட்டணியில் சட்டசபை தேர்தலை 1991 ல் சந்திக்க இருந்த போது..கொலையானார்.ராஜிவ் அனுதாப அலையும்,அவர் மரணத்திற்கு தி.மு.க., காரணம் என்ற வதந்தியும் சேர்ந்து அம்மாவை ஆட்சியில் அமர்த்தியது.அச்சமயத்தில்தான்..நாடே வியக்கும்..படி..வளர்ப்புமகன் திருமணம்..மாபெரும் ஊழல்கள் என ஆட்சி நடந்தது,மக்கள் தி.மு.க.,ஆட்சியே பரவாயில்லை என எண்ணத்தொடங்கி..தேர்தலை எதிர்நோக்கி காத்திருந்தனர்.

1996ல் தி.மு.க.,ஆட்சியைப் பிடித்து..ஜெ மீது வழக்குகள் போடப்பட்டன.கலைஞர் இப்போதய இலவச ஆட்சியாய் இல்லாமல்..திறம்பட..அனைவரும் பாராட்டுமாறு அந்த ஆட்சி அமைந்தது .அதனால் மக்கள் ஆதரவு நிச்சயம் என்ற நிலையில்..கூட்டணி விஷயத்தில்..சற்று மெத்தனமாக இருக்க..2001ல்அ.தி.மு.க.கூட்டணி வலுவாய் அமைய.அ.தி.மு.க.வெற்றிப் பெற்றது.

அப்போதும் பாடம் படைக்காத ஜெ..வானளவு அதிகாரத்தைக் கையிலெடுத்து..கலைஞர் கைது,அரசு ஊழியர்கள் கைது என துக்ளக் ராஜ்யம் அமைக்க...மக்கள் வெறுப்பை சம்பாதித்தார்.

2006...அ.தி.மு.க.,விடமிருந்து ஆட்சி கலைஞரிடம் கொடுக்கப்பட்டது.இத் தேர்தலில் வலுவான கூட்டணியாக.,தி.மு.க.,பா.ம.க.,காங்கிரஸ்,இரண்டு கம்யூனிஸ்ட் என கூட்டணி அமைந்ததால்..தி.மு.க.,குறந்த இடங்களே போட்டியிட முடிந்தது.அதனால் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை.இத் தேர்தலில் விஜய்காந்த் வேறு ஓட்டுக்களைப் பிரித்தார்.அப்படியும் அ.தி.மு.க.,கிட்டத்தட்ட தனித்து போட்டி(வைகோ மட்டும் உடன் இருந்தார்)யிட்டு 60 இடங்களுக்குமேல் வென்றது.

அப்படிப்பட்ட..கட்சி..இடைத்தேர்தலில் இப்போது மாபெரும் தோல்வியை சந்தித்துள்லது.இதற்கான காரணம் என்ன? பண பலம் எனக்கூற முடியாது.அ.தி.மு.க.,வும் பணத்தை வாரி செலவழித்தது.

தலைப்புக்கு வருவோம்..ஜெ இன்னமும்...

இன்னும் மக்களுக்கு எட்ட முடியாத தலைவராய் இருக்கிறார்..
தினசரி..தேவையில்லாமல் ஏதேனும் காரணம் சொல்லி ..ஆர்ப்பாட்டம் என..மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கிறார்.
அவ்வப்போது அறிக்கை விடுவதோடு...தன் பணி முடிந்ததாய் நினைக்கிறார்.
தேர்தல் நேரத்தில் மட்டும் பிரசாரம் செய்தால் போதும் என எண்ணுகிறார்.
தி.மு.க.வின் நல்ல திட்டங்களை, மக்களுக்கு பயன் அளிக்கும் திட்டங்களையும்..தேவையில்லாமல் விமரிசிக்கிறார்.
இலங்கை தமிழர் பிரச்னையில்..நிலைபாடு தவறு
தி.மு.க.,வில்.உறுப்பினர் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஒரு கோடி.,அதேபோல உறுப்பினர்கள் எண்ணிக்கையைப் பற்றி கவலைப்படுவதில்லை.

இன்னிலை நீடித்தால்..விஜய்காந்த் இரண்டாம் இடத்தைப் பிடித்துவிட முடியும்., அ.தி.மு.க.,தேவகவுடா கட்சிகளுடன்தான் கூட்டணி வைத்துக் கொள்ளமுடியும்.,
ஜெ நன்கு யோசித்து..தன் நிலைப்பாடை திருத்திக் கொள்ளட்டும்.
தனி நபர் வெறுப்பும் வேண்டாம்...தனி நபர் துதியும் வேண்டாம்.
மக்கள் நலனை நினையுங்கள்...வெற்றி நிச்சயம்.

7 comments:

அத்திரி said...

அம்மையாருக்கு நல்லாவே யோசனை சொல்லியிருக்கீங்க

நசரேயன் said...

நல்ல யோசனை எல்லோருக்கும் பொருந்தும்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி அத்திரி

T.V.ராதாகிருஷ்ணன் said...
This comment has been removed by the author.
T.V.ராதாகிருஷ்ணன் said...
This comment has been removed by the author.
குடுகுடுப்பை said...

உள்ளேன் அய்யா

T.V.ராதாகிருஷ்ணன் said...

//குடுகுடுப்பை said...
உள்ளேன் அய்யா//

yes..present