Monday, January 5, 2009

படித்ததும் கேட்டதும்....

1.இன்னும் தகுதி அடிப்படையில் இல்லாமல் சாதி அடிப்படையில் சாதிவாரியாக தொகுதிகள் ஒதுக்கப்படும் அவலம் நடக்கிறது.அமைச்சர் பதவி முதல்..பல்கலைக்கழக துணை வேந்தர் வரை எல்லாவற்றையும் தீர்மானிப்பது சாதி அரசியல்தான்.

2.ஒரு சமூகத்திற்கு அரசியல்தான் ஆணிவேர்..அரசியல் அசிங்கமானால் நாடே அசிங்கமாகத்தான் இருக்கும்

3.ஒருமுறை வாக்குப்பிச்சைப் போட்டுவிட்டு 5 ஆண்டுகளுக்கு வாழ்க்கைப்பிச்சை எடுப்பதை நிறுத்துவோம்.நேர்மை,உண்மை இரண்டும் சேர்ந்த அரசினால்தான் நாம் கனவு காணும் சமத்துவ நாடு உருவாகும்.

4.கார்கில் யுத்தத்தில் நாட்டைக் காக்க போராடிய ராணுவ வீரர்களுக்கு செய்யப்பட்ட சவப்பெட்டியிலும் ஊழல்.திரும்புகிற பக்கமெல்லாம் ஊழல்.பார்க்கிற பக்கமெல்லாம் லஞ்சம்.

5.teenage is the time when your children begin to question your answers

6.மனிதனின் தீயசெயல்களை மட்டுமே பார்த்து அதன் காரணமாக அவரை நாம் ஒதுக்கிவிடக்கூடாது.அந்த மனிதன் நாளடைவில் நல்லவனாக மாறக்கூடும்.ராமருக்கு தான் காட்டுக்குப்போக காரணம் கைகேயி என்று தெரிந்தும்..புறப்படும் வேலையில் அவளை நமஸ்கரித்துவிட்டு செல்லவில்லையா?யூதாஸ் தன்னைக் காட்டிக்கொடுக்கப் போகிறான் எனத் தெரிந்தும் ..ஏசு கிறிஸ்து கடைசி விருந்தின் போது அவன் பாதங்களை கழுவவில்லையா?தினமும் தன் மீது சகதியை எறிந்து அவமானப்படுத்திய பெண்மனிக்கு...நோய் வந்தபோது யாரும் சொல்லாமலேயே நபிகள் நாயகம் சென்று சேவை செய்யவில்லையா?

7.மனிதனைவிட மிருகங்கள் மேல்...ஏனென்றால்..அவற்றிடம்தான் ..பொறாமை,குரோதம்,சுயநலம்,அடுத்தவனைக் கெடுக்கும் ஈனத்தனம் கிடையாது.அவை கள்ளங்கபடமில்லா..குழந்தைகள் போல.

No comments: