Wednesday, January 21, 2009

..காளமேகமும்..நகைச்சுவையும்..

காளமேகம் பிற்காலப்புலவர்.நகைச்சுவை மன்னர்.

ஒரு நாள் வெயில் நேரம்.புலவருக்கோ தாகம்.அப்போது மோர் விற்று வருகிறாள் ஒரு பெண்.அவளிடம் மோர் வாங்கிகிறார்.அவளோ..காசு வேண்டாம்..என் மீது ஒரு கவி பாடுங்கள் என்கிறாள்.

உடன் கவி'அம்மையே..உன் மகத்துவத்தைக் காட்டிலும்..உன் மோரின் மகத்துவம் மிகப்பெரிது.அதைப்பாடுகிறேன்..என்கிறார்.

மோரே..நீ இம்மண்ணுலகப் பிறவியா..இல்லை..இல்லை..நீ தேவலோகப் பிறவி.திருமால் 10 அவதாரம் எடுத்தார்..நீ 3 அவதாரம் எடுத்தாய்.திருமாலுக்கு உவமை கூறும் வகையில் பெருமை மிக்க கருமை நிற வானில் சஞ்சரித்தாய்.உனக்கு கார் என பெயர் சூட்டி மண்ணுலகிற்கு அழைத்தோம்.திருமால் மண்ணுலகில் தேவகி வயிற்றில் அவதரித்தது போல் நீயும் மண்ணுலகில் நீராய் பொழிந்தாய்.
கண்ணன் தேவகியின் வயிற்றில் பிறந்தாலும்..யசோதை என்ற இடையர் குல பெண்ணிடம் புகுந்தான்.நீயும் நீராய் பொழிந்து பிறந்த இடத்தில் நில்லாமல்..இந்த ஆச்சியின் குடத்தில் புகுந்தாய்.உடனே இவளும் உனக்கு மூன்றாவது பெயர் 'மோர்" என சூட்டி விட்டாள்.உன் திருநாமத்தை 'மோரோ..மோர்..'என பன்முறை ஓதி பாராட்டுகிறாள்.

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகிப் பிறவுமாகி நிற்கும் இறைவனை எப்படிப் பாராட்டுவேன் என்கிறார் மணிவாசகர்.காராகி,நீராகி,மோராகி நிற்கும் உன்னை எப்பேரால் வாழ்த்துவேன் என்கிறார் காளமேகம்.அம்மையே..பிடியுங்கள் உங்கள் மோர் மீது என் ஆசுகவி என்கிறார்.

கார் என்று பேர்படைத்தாய் ககனத் துறும்போது
நீர் என்ரு பேர்படைத்தாய் நீணிலத்தில் வந்ததற்பின்
வார் ஒன்று பூங்குழலார் ஆய்ச்சியர்கை வந்ததற்பின்
மோர் என்று பேர் படைத்தாய் முப்பேரும் பெற்றாயே

10 comments:

Unknown said...

நீ கொடுத்த மோர் தண்ணி மாதிரி இருக்குன்னு எவ்வளவு அழகா சொல்லி இருக்கார்!!! சிலேடையில் காளமேகம் காளமேகம் தான்.

Unknown said...

அழகாக விளக்கி இருக்கின்றீர்கள்.
மோர் விற்கின்ற பெண்ணிடம் 'உன் மோரும் வானத்திலிருந்து வரும் நீரும் ஒன்றுதான்' என்கிறாரா?

பழமைபேசி said...

//வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகிப் பிறவுமாகி நிற்கும் இறைவனை எப்படிப் பாராட்டுவேன் என்கிறார் மணிவாசகர்.காராகி,நீராகி,மோராகி நிற்கும் உன்னை எப்பேரால் வாழ்த்துவேன் என்கிறார் காளமேகம்.//

எங்க அப்பிச்சியையும் என்னையும் ஒரு சேரச் சொல்லி இருக்கீங்க... நெம்ப சந்தோசமா இருக்கு...

நசரேயன் said...

/*பழமைபேசி said...
//வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகிப் பிறவுமாகி நிற்கும் இறைவனை எப்படிப் பாராட்டுவேன் என்கிறார் மணிவாசகர்.காராகி,நீராகி,மோராகி நிற்கும் உன்னை எப்பேரால் வாழ்த்துவேன் என்கிறார் காளமேகம்.//

எங்க அப்பிச்சியையும் என்னையும் ஒரு சேரச் சொல்லி இருக்கீங்க... நெம்ப சந்தோசமா இருக்கு...
*/
இனி உங்க பாடு திண்டாட்டம் தான்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி KVR

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சுல்தான்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி பழமைபேசி

தமிழ் said...

அருமை விளக்கம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி திகழ்மிளிர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி Valaipookkal