Friday, January 23, 2009

இறுதி வேண்டுகோளும்...அப்பாவி தமிழர்களும்

இறுதி வேண்டுகோள்..என்றால் என்ன...ஆங்கிலத்தில் சொல்வதானால் Last request.அதாவது கடைசியாக பணிந்து கேட்டுக் கொள்ளுதல்.

உதாரணமாக...உங்கள் நண்பனால்..உங்களுக்கு ஒரு காரியம் ஆக வேண்டும், அக்காரியத்தை அவர் ஒருவரால் தான் செய்யமுடியும்..நீங்களும் பலமுறைக் கேட்டும்..அவர் செய்யவில்லை..என்றால் என்ன பொருள்.

நீங்கள் நினைப்பதுபோல்..அந்த காரியத்தை முடிக்கும் சக்தி அவரிடம் இல்லை , அல்லது உங்களுக்கு செய்ய அவர் விரும்பவில்லை.

இந்நிலையில்...இறுதி என்ற வார்த்தை ஏன்..அதுவும்..நீங்கள் வேண்டும்போது. உங்கள் மனதில் உள்ளது 'பல முறை கேட்டு விட்டேன்..மரியாதையாய் செய்..இல்லாவிட்டால்.."

இல்லாவிட்டால் என்ன செய்வதாக எண்ணம்.அவரை மீறவும் முடியாது. அதிக பட்சமாக பதவியை துறக்கலாம்.அதனால் யாருக்கு பயன்? மீண்டும் அந்த பதவிக்கு வர நமக்கு..அவர் தயவு தேவைப்படலாம்.

ஆகவே..தற்சமயம் எந்த முடிவும் எடுக்க முடியாது. வேண்டுமானால்..இறுதி வேண்டுகோள் ஒன்று, இறுதி வேண்டுகோள் 2 என அறிவித்துக்கொண்டிருக்கலாம்.அப்பாவி தமிழினம் அங்கே..அழிந்ததும்..மத்திய அரசு உதவலாம்.

இப்பதிவு..வேதனையை தாங்கமாட்டாமல்..எழுதப்பட்டதே..தவிர..கலைஞர் மேல் குறை சொல்ல அல்ல என்பதை அபிமானிகள் புரிந்துக் கொள்வார்களாக!

6 comments:

ரமேஷ் வைத்யா said...

உண்மையைச் சொன்னீர்கள்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ரமேஷ் வைத்யா

Valluvan said...

100 % true frnd.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

தங்கள் ஆதங்கம் நியாயமானது திரு இராதாகிருட்டிணன் ஐயா!

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Srinivasan

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி ஜோதிபாரதி