Friday, October 9, 2009

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (9-10-09)

பொருளாதார மந்தத்தால் பில்கேட்ஸின் கடந்த ஆண்டு வருமானம் 25 லட்சம் கோடி ரூபாய்தானாம்.முந்தைய ஆண்டு வருமானத்தை விட இது 35 ஆயிரம் கோடி குறைவாம்.

2)கரும்பில் கோணல் முடிச்சுகள்..எவ்வளவு இருந்தாலும்..அதைக் கடித்துத் துப்பி அதிலுள்ள சுவையை அனுபவிக்கிறோம்.அதுபோலவே வாழ்வில் வரும் சோதனைகளைக் கடந்து வந்தால்தான் அதன் இனிமையை அனுபவிக்க முடியும்.

3)மேற்கத்திய நாடுகளில் மருத்துவர்களும்..கல்லூரி பேராசிரியர்களும் துறைசார்ந்த வல்லுநர்களும் மட்டுமே தாங்கள் படித்து வாங்கிய (!!) பட்டங்களைப் போட்டுக் கொள்கிறார்கள்.நாமோ கலயாணப் பத்திரிகை முதல் அனைத்திலும் போட்டுக் கொள்கிறோம்.

4)ராஜராஜ சோழன் காலத்திலேயே விவசாயிகளிடம் மூன்றில் ஒரு பங்கு வரி வசூலிக்கப்பட்டது.அதற்கு முன்பு ஆறில் ஒரு பங்கு வரியாம்.அப்படி வசூலித்த வரிப்பணத்தில் தான்..மக்களுக்கு கோவில் கட்டுவது போன்ற வேலைகளைக் கொடுத்து ஊதியம் கொடுத்தானாம்.

5)இந்தியாவில் குடும்பக் கட்டுப்பாடுத் திட்டம் அமுல் செய்யப்பட்ட பிறகு பத்னான்கரைக் கோடிக் குழந்தைகள் பிறப்பு தவிர்க்கப்பட்டுள்ளதாம்..(ஆமாம்..இந்த புள்ளிவிவரம் எப்படி எடுக்கப்பட்டது?)

6)இந்த வார அரசியல்வாதிக்கான் ஜோக் சொல்லி விருது பெறுபவர் மருத்துவர் ஐயா ராமதாஸ்.அவர் சொன்னது
'மக்கள் விரும்பினால்..பா.ம.க.,தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையும்.

7)ஒரு ஜோக்

ஏன் கழுதைப்போல கத்திக் கிட்டு இருக்கீங்க?
காலைல இவ்வளவு நேரம் ஆச்சு..இன்னும் பேப்பர் வரலை

19 comments:

க.பாலாசி said...

//மேற்கத்திய நாடுகளில் மருத்துவர்களும்..கல்லூரி பேராசிரியர்களும் துறைசார்ந்த வல்லுநர்களும் மட்டுமே தாங்கள் படித்து வாங்கிய (!!) பட்டங்களைப் போட்டுக் கொள்கிறார்கள்.நாமோ கலயாணப் பத்திரிகை முதல் அனைத்திலும் போட்டுக் கொள்கிறோம்.//

நிதர்சனமான உண்மை....

//'மக்கள் விரும்பினால்..பா.ம.க.,தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையும்.//

இததானே ரொம்ப நாளா சொல்லிகிட்டு இருக்காரு...

//ஏன் கழுதைப்போல கத்திக் கிட்டு இருக்கீங்க?
காலைல இவ்வளவு நேரம் ஆச்சு..இன்னும் பேப்பர் வரலை//

ஹா...ஹா....

சுண்டல் சுவை...

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்ல தகவல்கள் உள்ள பதிவு

Starjan (ஸ்டார்ஜன்) said...

me second & third

goma said...

கரும்பில் கோணல் முடிச்சுகள்..எவ்வளவு இருந்தாலும்..அதைக் கடித்துத் துப்பி அதிலுள்ள சுவையை அனுபவிக்கிறோம்.அதுபோலவே வாழ்வில் வரும் சோதனைகளைக் கடந்து வந்தால்தான் அதன் இனிமையை அனுபவிக்க முடியும்.

நீங்கள் சொலவது சரிதான்
கரும்பில் [4அங்குலத்துக்கு ஒரு முடிச்சு என]முடிச்சு எங்கெ இருக்கு எப்ப வரும்னு பார்த்தாலே தெரியும் ...வாழ்க்கையில் முடிச்சு எப்போ வரும் எங்கே வரும்னு சொல்ல முடியாதே ....அப்புறம் எப்படிக் கடிக்க எங்கே துப்ப...

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி பாலாஜி

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி Starjan

T.V.ராதாகிருஷ்ணன் said...

/// goma said...
கரும்பில் கோணல் முடிச்சுகள்..எவ்வளவு இருந்தாலும்..அதைக் கடித்துத் துப்பி அதிலுள்ள சுவையை அனுபவிக்கிறோம்.அதுபோலவே வாழ்வில் வரும் சோதனைகளைக் கடந்து வந்தால்தான் அதன் இனிமையை அனுபவிக்க முடியும்.

நீங்கள் சொலவது சரிதான்
கரும்பில் [4அங்குலத்துக்கு ஒரு முடிச்சு என]முடிச்சு எங்கெ இருக்கு எப்ப வரும்னு பார்த்தாலே தெரியும் ...வாழ்க்கையில் முடிச்சு எப்போ வரும் எங்கே வரும்னு சொல்ல முடியாதே ....அப்புறம் எப்படிக் கடிக்க எங்கே துப்ப...//


வாழ்வில் எதிர்பாராது வரும் சவால் முடிச்சுகளை கடித்து துப்புங்கள்..முதலிலேயே முடிச்சு எங்கிருக்கிறது என தெரிந்துவிட்டால் வாழ்வு சுவாரஸ்யமாய் இருக்காது

Anonymous said...

//ஏன் கழுதைப்போல கத்திக் கிட்டு இருக்கீங்க?
காலைல இவ்வளவு நேரம் ஆச்சு..இன்னும் பேப்பர் வரலை //

சாப்பிடத்தானே

T.V.ராதாகிருஷ்ணன் said...

//சின்ன அம்மிணி said...
//ஏன் கழுதைப்போல கத்திக் கிட்டு இருக்கீங்க?
காலைல இவ்வளவு நேரம் ஆச்சு..இன்னும் பேப்பர் வரலை //

சாப்பிடத்தானே//

yes


நன்றி சின்ன அம்மிணி

சென்ஷி said...

கடைசி ரெண்டு ஜோக்கும் அருமை! :)

அத்திரி said...

//'மக்கள் விரும்பினால்..பா.ம.க.,தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையும்.//

காமெடிக்கு ஒரு அளவு இல்லாம போச்சு

T.V.ராதாகிருஷ்ணன் said...

//சென்ஷி said...
கடைசி ரெண்டு ஜோக்கும் அருமை! :)//

வருகைக்கு நன்றி சென்ஷி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அத்திரி said...
//'மக்கள் விரும்பினால்..பா.ம.க.,தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையும்.//

காமெடிக்கு ஒரு அளவு இல்லாம போச்சு//

வருகைக்கு நன்றி அத்திரி

துபாய் ராஜா said...

//'மக்கள் விரும்பினால்.. பா.ம.க.,தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையும்.//

அன்புமணி எலெக்சன்ல நிக்கிறதுதான் அய்யா மருத்துவருக்கு விருப்பமில்லாத விஷயமாச்சே.... :))

மங்களூர் சிவா said...

ஜோக் ரெண்டும் சூப்பர்!

சூப்பர் சுண்டல்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி துபாய் ராஜா

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மங்களூர் சிவா said...
ஜோக் ரெண்டும் சூப்பர்!

சூப்பர் சுண்டல்.//


நன்றி சிவா

வெண்ணிற இரவுகள்....! said...

சுண்டல் நன்றாக உள்ளது

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வெண்ணிற இரவுகள்....! said...
சுண்டல் நன்றாக உள்ளது//

நன்றி வெண்ணிற இரவுகள்....!