Sunday, June 22, 2008

வாய் விட்டு சிரியுங்க - 14

1.நம்ப தலைவரோட வேட்பு மனு ஏன் நிராகரிக்கப்பட்டது
பழக்க தோஷத்திலே வேட்பு மனுவுக்கு பதிலாக முன் ஜாமீன் மனுவை தாக்கல் செய்துட்டாராம்.

2.வேலைக்காரி- அம்மா..வர..வர..உம் புருஷன் செய்ய்யறது நல்லா இல்லை ..சொல்லிட்டேன்
பெண்-(பதட்டத்துடன்) அப்படி என்ன செஞ்சார்
வேலைக்காரி- இன்னிக்கு சாம்பார்லே உப்போ காரமோ இல்லை

3.நண்பன்-(தன் நண்பனிடம்) கடன் கேட்டா இல்லைன்னு சொல்லிட்டே..என்னைப்பற்றி இப்போ
உனக்குத் தெரியாது..நீ accident ஆகி hospital ல இருக்கும்போதுதான் உயிர் காப்பான் தோழன்னு
என்னைப் புரிஞ்சுப்ப...

4.போன வாரம் செத்தது..நீயா..இல்ல உன் அண்ணனா?
ம்...நீ அண்ணன்னு சொன்னது என்னையா இல்ல என் தம்பியையா?
???!!!!

5.அந்த ராப்பிச்சை உங்க்களுக்கு ஏன் பணம் கொடுட்துட்டுப் போறான்?
மாசக்கடைசி கைச் செலவுக்கு பணம் இல்லைன்னு சொன்னேன்..வட்டிக்கு பணம்
கொடுத்துட்டு போறான்.

6.என்னை யாராவது முட்டாள்..மடையன்னு திட்டினா..நீ தாண்டா அதுன்னு மனசுலே நினைச்சுக்கிட்டு 'வரட்டுமா'
அப்பிடின்னு அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுவேன்
அப்போ நான் வரட்டுமா...
???!!!!

No comments: