Wednesday, June 4, 2008

வாய் விட்டு சிரியுங்க - 8

1.என் மூளையை இன்ஷ்யூர் பண்ணலாம்னு இருக்கேன்
இல்லாததையெல்லாம் இன்ஷ்யூர் பண்ண மாட்டாங்களே

2.அதோ போறாரே அவர் கைலே ஆவி யை வைச்சிருக்கார்
அப்படியா? ஆச்சர்யமாயிருக்கே
இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கு..நான் சொல்ற ஆவி ஆனந்த விகடன் புத்தகம்

3.பீரோலே நான் பத்திரமா வைச்சிருந்த என் பேன்ட்,ஷர்ட் எல்லாம் காணோம்
நீங்க பத்திரமா வைச்சதெல்லாம் பாத்திரமா ஆயிடுச்சு

4.என்னை பொண்ணு பார்க்கவந்த அன்னிக்கே என் கணவர் கிரௌண்ட் வாங்கி இருந்தார்
எந்த ஏரியாவிலே?
அவர் தலையில்தான்.

5.என் கனவில் அவங்க கல்யணத்துக்கு முன்னாலே ஜோதிகா வந்துகிட்டு இருந்தாங்க.
இப்போ யார் வராங்க
அதற்கான தேர்வு நடத்திகிட்டு இருக்கேன்

6.அந்த எழுத்தாளரின் படைப்புகள் எல்லாம்..அற்புதமாய் இருக்கும்
நீஎதையாவது படிச்சு இருக்கியா?
அதுக்கு முன்னால அவங்களுக்கெல்லாம் கல்யாணம் ஆயிடுச்சு

No comments: