Saturday, January 17, 2009

2.3 லட்சம் இலங்கை தமிழர்கள் தவிப்பு..

இலங்கை ராணுவம் முல்லைத்தீவு பகுதியில் சண்டை இட்டு வருவதால் 2.3 லட்சம் தமிழர்கள் நிலைமை மிகவும் மோசமாகியுள்ளது.அவர்கள் காடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல முடியவில்லை.

முல்லைத்தீவு பகுதியில்..முப்படை தாக்குதல் நடந்து வருகிறது.போர் விமானங்கள் வேறு சரமாரியாக குண்டுகள் வீசி வருகின்றன.இந்த நிலையில்..முல்லைத்தீவு பகுதியில் சிக்கியுள்ள தமிழர்கள்..உயிரை கையில் பிடித்தபடி காட்டுப்பகுதியில் குடும்பத்துடன் தஞ்சம் புகுந்துள்ளனர்.பசியும், பட்டினியுமாக குழந்தைகள் திண்டாடிக் கொண்டிருக்கின்றன.அவர்களின் நிலை மோசமாக இருப்பதாக ஐ.நா.சபை தன் கவலையைத் தெரிவித்துள்ளது.அவர்களுக்கு ஐ.நா.,சபை, மற்றும் உதவி நிறுவனங்களால் உணவு கிடைத்தாலும்..இருப்பிடம்,குடிநீர்,துப்புரவு,சுகாதார வசதிகள் இல்லை.

இதனிடையே...இலங்கை சென்ற வெளியுறவு செயலர் சிவசங்கர் மேனன், ராஜபக்சே வை சந்தித்து..இலங்கை தமிழர் பிரச்னை குறித்து பேசினார்.தவிர..இருவரும் பல்வேறு பிரச்னைகள் குறித்து.(??!!)
பேசியதாகவும் தெரிகிறது.

திருமாவளவனின் உண்ணா நிலை 4 வது நாளாக தொடர்கிறது.

கலைஞரோ..இன்னும் சிலநாள் பொறுத்திருந்து பார்ப்போம் என்கிறார். அவர் மனோகராவில் எழுதிய 'பொறுத்தது போதும்..பொங்கி எழு' என்ற வசனத்தை அவருக்கு ஞாபகமூட்டுகிறோம்.

No comments: