Monday, November 22, 2010

குறள் இன்பம் - 2

வள்ளுவனின் சொல் வன்மை, சொல்லழகு ஆகியவற்றிற்கு எடுத்துக் காட்டாய் மூன்று


  குறள்களை இந்த இடுகையில் பார்ப்போம்.



கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க

முன்னின்று பின்னோக்காச் சொல்



புறங்கூறாமையில் நான்காவது குறள்.கண்,கண்,சொல்,சொல் என்னும் சொற்களை எவ்வளவு அழகாக கையாண்டுள்ளர்.

நேருக்கு நேர் ஒருவரது குறைகளைக் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாமாம்..ஆனால் பின் விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் நேரில் இல்லாத ஒருவரைப் பற்றி குறை கூறுவது தவறு...என்கிறார்.







யாதனின்,அதனின்..என்றே நான்கு சொற்களை பிடித்துவிடுகிறது துறவு அதிகாரத்தில் முதல் குறள்



யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்

அதனின் அதனின் இலன்



ஒருவன் பலவகையான பற்றுகளில் எந்த ஒன்றை விட்டு விட்டாலும் ,குறிப்பிட்ட அந்தப் பற்று காரணமாக வரும் துன்பம் அவனை அணுகுவதில்லை



பொய்யாமை,செய்யாமை என்னும் வார்த்தை விளையாட்டு கீழ் கண்ட குறளில்..



பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற

செய்யாமை செய்யாமை நன்று



வாய்மையில் ஏழாம் குறள்

செய்யக்கூடாததைச் செய்யாததால் விளையும் நன்மையைவிடப் பொய் கூறாத பண்பு பொய்த்துப் போகாமல் கடைபிடிக்கும் அற வழி நன்மை தரும்.

மூன்று

5 comments:

Unknown said...

நன்றாகவுள்ளது தொடருங்கள்
வரிகளுக்கான இடைவெளி பெரிதாகவுள்ளது சரி பார்க்கவும்

'பரிவை' சே.குமார் said...

அருமை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி மகாதேவன்-V.K

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சே.குமார்