Monday, November 21, 2011

சபாநாயகர் வாடகை பாக்கி ரூ. 1.98 கோடி





லோக்சபா சபாநாயகர் மீரா குமார் குடும்பத்தினர் கடந்த 1986ம் ஆண்டு முதல் வசித்து வரும் பங்களாவுக்கான வாடகை பாக்கியாக 1 கோடியே 98 லட்சத்து 22 ஆயிரத்து 723 ரூபாய் தர வேண்டும் என்று மத்திய நகர்ப்புற அமைச்சகத்தின், எஸ்டேட்ஸ் பிரிவு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அவருக்கு பில் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அது கூறியுள்ளது.

பாபு ஜெகஜீவன் ராம் மறைவுக்குப் பின்னர் அவரது மகளான மீரா குமார் மற்றும் ஜெகஜீவன் ராமின் குடும்பத்தினர், கடந்த 1986ம் ஆண்டு கிருஷ்ண மேனன் மார்க்கில் உள்ள 6ம் எண் பங்களாவில் தொடர்ந்து வசித்து வந்தனர். அன்று முதல் அவர்கள் இதுவரை வாடகை பாக்கியாக ரூ. 1,98,22,723 வைத்துள்ளனர். இதுதொடர்பாக பில் தயாரிக்கப்பட்டு மீரா குமாருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால்..அவர்கள் குடும்ப வட்டாரத்தில் அந்த வீட்டை எப்போதோ காலி செய்து விட்டதாகவும் , அவ் வீட்டிற்கு இப்போது குடிநீர்,கழிவு நீர் இணைப்புக் கூட கிடையாது என்றும் தெரிவிக்கப் பட்டது

டிஸ்கி- பாபு ஜெக ஜீவன் ராம் வருமான வரி பாக்கியாக 10 லட்சம் வைத்திருந்தார்.மத்திய அமைச்சராய் இருந்த அவரிடம் இது பற்றி அப்போது கேட்டபோது தான் மறந்துவிட்டதாகத் தெரிவித்தார்.


No comments: