Wednesday, December 5, 2012

சிவாஜி ஒரு சகாப்தம் -3



 
1955ல் சிவாஜி நடித்து வெளிவந்த படங்கள்...

காவேரி,முதல்தேதி,உலகம் பலவிதம்,மங்கையர் திலகம்,கோடீஸ்வரன், கள்வனின் காதலி

மங்கையர் திலகம் ...தவிர மற்ற படங்கள் எதிர்ப்பார்த்த அளவு சோபிக்கவில்லை.

காவேரி படத்தில்..குதம்பை சித்தர் பாடலும்..சித்த சுவாதீனமுற்றவர் போல சிவாஜி நடிப்பும் புகழப்பட்டன.

முதல்தேதி...சிவாஜி, அஞ்சலிதேவி, என்.எஸ்.கே.,நடித்தபடம்..கதையம்சம் பாராட்டும்படி இருந்தாலும்...படத்தின் பெரும் பகுதி..கனவு என்று இருந்ததால்..படம் தோல்வி.

உலகம் பலவிதமும், கோடீஸ்வரனும்...சொல்ல ஒன்றும்..இல்லாமல்..வந்து போனது..அவ்வளவே..

கள்வனின் காதலி...கல்கியின் கதை..சிவாஜி, பானுமதி நடித்தது.. அவ்வளவுதான்.

மங்கையர்திலகம்...சிவாஜி,பத்மினி,சுப்பையா நடித்த படம்.'நீல வண்ண கண்ணா வாடா"பாடல் ஹிட்.படமும் ஹிட்.,சிவாஜியின் அண்ணியாக பத்மினி.

மொத்தத்தில்...இவ்வாண்டு சுமாரான..ஆண்டு அவருக்கு.

1956ல் வந்த படங்கள்-

நான் பெற்ற செல்வம்,நல்ல வீடு,நானே ராஜா,தெனாலிராமன்,பெண்ணின் பெருமை,ராஜா ராணி,அமரதீபம்,வாழ்விலே ஒரு நாள், ரங்கோன் ராதா.

நான் பெற்ற செல்வம்...ஜி.வரலட்சுமி ஜோடி.படம் வெற்றி...நான் பெற்ற...பாடல் ஹிட்.

நானே ராஜா படத்தில்..சாம்ராட் அசோகனாக சிவாஜி ஒரு காட்சியில் அட்டகாசமாக நடிப்பார்..படம் ஆனால் தோல்வி.

நல்ல வீடு, தெனாலிராமன் ஆகிய படங்களும் எதிர்ப்பார்த்த வெற்றிபெறவில்லை.

பெண்ணின் பெருமை..சாவித்ரி,ஜெமினி உடன் நடித்திருப்பர்.படம் வெற்றி.சிவாஜி வில்லன் போன்ற பாத்திரம்..இந்த மூன்று நடிகர்கள் பின்னாட்களில் பல வெற்றிப்படங்களைக் கொடுத்தனர்.

அமரதீபம்..ஸ்ரீதர் கதை..வசனம்..சாவித்திரி ஜோடி..பத்மினியும் படத்தில் உண்டு.படம் வெற்றி.ஏ.எம்.ராஜாவின்...தேன் உண்ணும் வண்டு போன்ற பல ஹிட் சாங்க்ஸ் உண்டு இப்படத்தில்.

வாழ்விலே ஒரு நாள்.ஜி.வரலட்சுமி...படம் தோல்வி.

ரங்கோன் ராதா ..அண்ணாவின் கதை..உடன் பானுமதி..எஸ்.எஸ்,ஆர்., கலைஞரின் பாடல்கள்..(பொது நலம்)., படம் வெற்றி.

இனி 1957 படங்கள் அடுத்த வாரம்.

மேலும் நண்பர் ஜோ தரும் அதிகத் தகவல்கள்

வருடம் - 1954 & 1955

1. முதன் முதலாக தமிழில் ஒரே நடிகரின் இரண்டு திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியானது நடிகர் திலகத்திற்கு தான்.

படங்கள் - அந்த நாள் & கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி.

வெளியான நாள் - 13.04.1954.

2. முதன் முதலாக மதுரையில் ஒரே படம் இரண்டு தியேட்டரில் திரையிடப்பட்டது நடிகர் திலகத்தின் படம் தான்.

படம் - கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி.

திரையிடப்பட்ட அரங்குகள் - தங்கம் & நியூசினிமா.

3. அதே நாளில் அந்த நாள் படமும் மதுரை - ஸ்ரீமீனாக்ஷி திரையரங்கில் வெளியானது. ஆக முதன் முதலாக மதுரையில் ஒரே நடிகரின் படங்கள் மூன்று திரை அரங்குகளில் வெளியானதும் நடிகர் திலகத்திற்கு தான்

4. முதன் முதலாக ஒரு நடிகர் நடித்த இரண்டு படங்கள் ஒரு வருடத்தில் ஒரே நாளில் வெளியிட்ட சாதனை மட்டுமல்லாது அதே வருடத்தில் மீண்டும் ஒரு முறை ஒரே நாளில் இரண்டு படங்கள் வெளியானதும் நடிகர் திலகம் மட்டுமே செய்த சாதனைகளாகும். அவை பின்வருமாறு

படங்கள் - அந்த நாள் & கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி.

வெளியான நாள் - 13.04.1954.

படங்கள் - கூண்டுக்கிளி & தூக்கு தூக்கி.

வெளியான நாள் - 26.08.1954

5. முதன் முதலாக சென்னையில் 6 திரையரங்குகளில் வெளியான தமிழ் படம் - எதிர்பாராதது.

6. முதன் முதலாக சென்னையில் 5 திரையரங்குகளில் 80 நாட்களை கடந்து ஓடிய தமிழ் படம் - எதிர்பாராதது.

அரங்குகள் - சித்ரா,காமதேனு, பிராட்வே, மகாலக்ஷ்மி, பாரத்.

7. முதன் முதலாக ஒரே வருடத்தில் ஒரு தமிழ் பட கதாநாயகன் நடித்த அதிகமான படங்கள் வெளியானது இந்த வருடத்தில் தான். நடிகர் திலகம் நடித்த 10 படங்கள், 1954-ல் வெளியானது.

8. இதில் மூன்று படங்கள் 100 நாட்களை கடந்தன.

மனோகரா

கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி -

[சென்னை - காசினோ, சேலம் - நியூ சினிமா, திருச்சி -பிரபாத்.]

எதிர்பாராதது

9. முதன் முதலாக பந்துலுவும் நடிகர் திலகமும் ஒரு முழு நீள படத்திற்கு இணைந்தது இந்த படத்தில் தான். படம் - முதல் தேதி.

10. முதன் முதலாக படம் முழுவதும் கனவு காட்சியாகவே திரைக்கதை அமைக்கப்பட்ட படம் - முதல் தேதி.

11. முதன் முதலாக தமிழ் திரை உலகில் நடிக்க வந்த மூன்றே வருடங்களில் 25 படங்கள் அதுவும் நாயகனாகவே நடித்தவர் நமது நடிகர் திலகம் மட்டும் தான். [1952 -1955]
March 6, 2009 12:53:00 AM PST
 ஜோ / Joe said...
வருடம் - 1956

1.இரண்டு வருடங்களுக்கு முன் நடந்தது போல் மீண்டும் ஒரே நாளில் இரண்டு படங்கள் வெளியானது இந்த வருடத்தில் தான்.

படங்கள் - நான் பெற்ற செல்வம் & நல்ல வீடு

வெளியான நாள் - 14.01.1956

2. முதன் முதலாக 43 நாட்கள் வித்யாசத்தில் ஒரு கதாநாயகனின் 6 படங்கள் வெளியானது நடிகர் திலகத்திற்கு தான். அவை

நான் பெற்ற செல்வம் - 14.01.1956

நல்ல வீடு - 14.01.1956

நானே ராஜா - 25.01.1956

தெனாலி ராமன் - 03.02.1956

பெண்ணின் பெருமை - 17.02.1956

ராஜா ராணி - 25.02.1956

3. எதிர்பாராதது படத்தை தொடர்ந்து சென்னையில் 6 திரையரங்குகளில் வெளியான படம் நானே ராஜா.

4. நடிகர் திலகத்தின் காரக்டர் நெகட்டிவாக இருந்தாலும் பொது மக்கள் ஏற்று கொண்டதால் தமிழகத்தில் 5 திரையரங்குகளில் 100 நாட்களை கடந்தது பெண்ணின் பெருமை. அவை

சென்னை - காசினோ, பிராட்வே, மகாலெட்சுமி.

சேலம் - நியூ சினிமா

திருச்சி - ஜுபிடர்

5. சேரன் செங்குட்டுவன் ஓரங்க நாடகத்தில் கலைஞரின் 16 பக்க வசனத்தை ஒரே டேக்-ல் நடிகர் திலகம் பேசி நடித்த படம் ராஜா ராணி.

6. முதன் முதலாக சிவாஜி பிலிம்ஸ் விநியோகித்த தமிழ் படம் - அமர தீபம்.

7. முதன் முதலாக ஒரு தமிழ் படம் 100 தொடர் அரங்கு நிறைந்த காட்சிகளாக (continous 100 House full shows) ஓடிய சாதனையை நிகழ்த்தியதும் நடிகர் திலகத்தின் படம் தான்.

படம் - அமர தீபம்

அரங்கு - காசினோ

8. முதன் முதலாக தன்னை விட வயதான ஒருவருக்கு தந்தையாக நடிகர் திலகம் நடித்த படம் - வாழ்விலே ஒரு நாள்.

9. முதன் முதலாக அண்ணா கதை எழுத, கலைஞர் திரைக்கதை வசனம் தீட்ட, நடிகர் திலகம் நடித்த படம் ரங்கோன் ராதா

No comments: