Tuesday, January 22, 2013

கணப்பொழுது ...

                                       
கணநேரத்தில்
நிகழ்ந்து விடுகிறது

*** *** ****

நடக்கையில்
கணப்பொழுது தன்
கனத்தை யோசித்தான்
கணப்பொழுது
கனம் நிறைந்ததாயிற்று நினைவு
கணத்தில் தலைசுற்ற
கனவான் விழுந்தான்
கணப்பொழுதில் 108 வர
கனவோ என எண்ணினான்
கணப்பொழுது தாமதித்திருந்தால்
கனத்திருப்பான் உடல்
மருத்துவமனையில்
கணப்பொழுதில் முதலுதவி

*** **** ****
கணப்பொழுது தவறு
எங்காவது
யாருக்காவது நடக்கிறது
என்றான் கிங்கரன்
காலனிடம்

1 comment:

கவியாழி said...

கண பொழுதில் கவிதையை முடித்தது ஏன்?