Tuesday, December 17, 2019

கிறுக்கல் கவிதைகள்

விடியலில்
எங்கோ
ஒரு சேவல் கூவுகிறது
பால் கொணர்பவனைப்
பார்த்து
நாய் குரைக்கின்றது
கோலப்பொடியில் அமர்ந்து
காகம் கரைகிறது
கடமைகளை
மறப்பதில்லை இவை
படுக்கையில்
புரண்டபடியே
எண்ணுகின்றான் இவன்.

2
வீடுகளில்
இப்போதெல்லாம்
நிழல்கள்தான்
பேசுகின்றன..
நிஜங்களோ
வாய் மூடிக்
கேட்டுக்
கொண்டிருக்கின்றன

No comments: