Thursday, July 2, 2020

# TVRதமிழ் இதழ்களை அலங்கரித்த ஓவியர்கள் 10 - லதா



பொன்னியின் செல்வன் தொடர் முதன் முதலாகக் கல்கியில் வந்த போது..கல்கியின் எழுத்தையும், அதனுடன் அதற்கான மணியம் அவர்களின் ஓவியங்களுடன் ஒன்றிப் போனார்கள் அன்றைய கல்கி வாசகர்கள்.

அதுபோல சில பிரபல எழுத்தாளர்கள் கதையென்றால் அதற்கு ஓவியம் இவராகத்தான் இருக்க வேண்டும் என்பது அந்தநாளின் பத்திரிகை ஆசிரியர்களின் விருப்பமாகவும் இருந்தது..வாசகனின் எதிர்பார்ப்பாகவும் இருந்தது.

எழுத்தாளர் சாண்டில்யனின் இயற்பெயர் பாஷ்யம் ஐயங்கார். அவர் எழுத்துக்கு என்று அமைந்து போன பத்திரிகிய குமுதம் எனலாம். முன்னதாக அவர் அமுதசுரபி இதழில் "ஜீவ பூமி".மலைவாசல்" அகியத்தொடர்களை எழுதியிருந்தாலும்..காலத்தால் மறக்கமுடியா அவரின் தொடர்கள்
கன்னிமாடம், கடல் புறா,யவன ராணி  போன்றவை.

இவரின் தொடர்களுக்கு ஓவியம் வரைந்தவர் லதா ஆவார்.இந்த கூட்டனி ரசிகர்கள் விரும்பிய கூட்டனி.சாண்டில்யனின் வர்ணனைகளுக்கேற்ப லதாவைத் தவிர வேறொருவரின் ஓவியத்தை நினைத்துக் கூட பார்க்கமுடியா அளவிற்கு லதாவின் ஓவியங்கள் இருந்தன என்றால் மிகையில்லை.

சாண்டில்யன் வர்ணித்த மஞ்சள் அழகியை ஓவியமாகத் தீட்டி..இன்னமும் நம்மை மறக்கமுடியாமல் ஆக்கிய லதா பாராட்டுக்குரியவர்.







No comments: