Wednesday, July 1, 2020

#TVRதமிழ் இதழ்களை அலங்கரித்த ஓவியர்கள் 9 -சித்ரலேகா



ஆனந்த விகடனில் அந்தக் காலக்கட்டத்தில் பிரபல் ஓவியர்கள் பட்டாளமே இருந்தது.

மாலி தலைமையில், சில்பி,கோபுலு, ஸாரதி,ராஜூ,ஸிம்ஹா,வாணி .இவர்களுடன் முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய ஓவியர் சித்ரலேகா ஆவார்.

நாராயணசாமி எனும் இயற் பெயர் கொண்ட இவர்..இதிகாச, சரித்திர நாயகர்களின் ஓவியங்கள் வரைவதில் மிகவும் திறமைசாலியாய் இருந்தார்.

விகடனில் பி.ஸ்ரீ.எழுதிய "சித்திர ராமாயணம்" என்ற தொடருக்கு இராமாயணக் காட்சிகளை அருமையான சித்திரங்களாக வரைந்தார் இவர்.

கி.வா ஜ...விகடனில் எழுதிய இலக்கியச் சித்திரத் தொடர் "சித்திர மேகலை" என்ற பெயரில் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையை 40 வாரங்களுக்குத் தொடராக எழுதினார்.அதற்கு சித்ரலேகா தான் ஓவியர்.

அவர் வரிந்த ஒவியங்களை இணைத்துள்ளேன்.

சித்திரலேலாவின் மகன் நா.ராஜேந்திரன், கும்பகோணம் காந்தி பூங்காவிற்கு வடக்கேயுள்ள வெங்கட்ரமணா ஹோட்டலில் அன்றாட மெனுவிற்கான பலகையில் பல ஓவியங்களை தினசரித் தீட்டி பார்வையாளர்களை கவர்ந்து வருவதாக ஒரு செய்தி கூறுகிறது.

No comments: