Friday, November 27, 2020

யார் நல்லவர்..யார் கெட்டவர்

" டோக்கன் நம்பர் 24"


வெளியே பெஞ்சில் காத்துக் கொண்டிருந்த சாம்பசிவத்தின் காதுகளில் இது விழுந்தது.


தன் கைகளில் வைத்திருந்த அட்டை டோக்கனைப் பார்த்தார்.அவருடையது தான்..


எழுந்து டாக்டரைப் பார்க்க உள்ளே நுழைய இருந்த அவருக்கு உதவியாளர் கதவைத் திறந்து விட்டார்.


அவரைப் பார்த்ததும் சாம்பசிவம்.."உன்னைப் பார்த்தால் நல்லவனாகத் தெரியவில்லையே! வந்து உன்னை பேசிக் கொள்கிறேன்" என உள்ளே நுழைந்தார்.


அவரை டாக்டர் ரவீந்திரன் "வாங்க" என வரவேற்றார்.


"ஆமாம்..ஆமாம்..எங்களை வாங்க..வாங்கன்னு நீங்க கூப்பிடறதே எங்கக் கிட்ட இருந்து அநியாயத்துக்கு வாங்க..வாங்கதானே!" என்றார்.


இது போன்று பேசும் நோயாளிகள் பலரைப் பார்த்திருந்ததால், அவர் சொல்வதை சட்டை செய்யாமல் புன்முறுவலுடன் "உங்களுக்கு என்ன உடம்புக்கு?" என்றார்.


சிறிது நேரம் யோசித்தவர்"டாக்டர்..எனக்கு..இப்ப எல்லாம் யாரைப் பார்த்தாலும் நல்லவங்களாத் தெரியறதில்லை" என்றார்.


"எவ்வளவு நாளாக இப்படி இருக்கு?"



"யாரைப் பார்த்து என்ன கேட்கற.நான் உன்னை நல்லவன்னு நினைச்சேன்.இப்படி கேடு கெட்டவனா இருக்கியே.நீ ஒரு ஃபிராடு.உங்கிட்ட வந்தேன் பாரு..என் புத்தியை செருப்பால அடிக்கணும்"      என்று சொல்லிய படியே வெளியேறினார்.

No comments: