Showing posts with label அரசியல் -சமூகம் -நையாண்டி -கலைஞர். Show all posts
Showing posts with label அரசியல் -சமூகம் -நையாண்டி -கலைஞர். Show all posts

Sunday, October 26, 2008

தாமிராவும்..பிளீச்சிங்க்பவுடரும்..பின்னே கலைஞரும்

தமிழன் ஒரு இளிச்சவாயான்..அவனை சாதாரண குழந்தையால் கூட கோபமூட்ட வைக்கலாம்...உடன் உணர்ச்சிவசப்படுபவன்...கோபம் வந்த சில நிமிஷங்களில் சமாதானம் அடைபவன்.
தாமிரா... ரிலையன்ஸின் பிரௌசிங்க் சென்டர் போனார்..அவரால் பிரௌஸ் பண்ண முடியவில்லை...அங்கிருந்த ஊழியர்களும் சரியான பதிலை சொல்லவில்லை..உடனே கோபமடைந்தார்..
ரிலையன்ஸ் மீது காறி உமிழுங்கள் என கோபத்தில் பதிவிட்டார்..பின் நண்பர்கள் சிலர் கூற ..கோபம் தணிந்து..ரிலையன்ஸை கண்டிக்கிறேன்..என்று மாற்றிக்கொண்டார்.

பிளிச்சிங்க். அவரது பதிவு ஒன்றால்...ஒருவர் மீது கோபம் கொண்டு..நாய்..சிங்கம் கதையெல்லாம் சென்னை பாஷையில் பதிவிட்டார்..கோபத்தில்..பின்னர்..அவர் நண்பர்களாலும்,கோபமும் தணிந்ததும் ..குறிப்பிட்ட பதிவை விலக்கிக்கொண்டார்.

கலைஞர்..இலங்கை தமிழர்களின் அவல நிலையை குறுந்தகடில் பார்த்தார்..உணர்ச்சிவசப்பட்டார்..அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டினார்.மத்ய அரசுக்கு 2 வாரம் அவகாசம் அளித்தார்..அதற்குள் ..அரசு முடிவெடுக்கவில்லை எனில் தமிழக எம்.பி.க்கள் 40 பேரும் ராஜினாமா செய்வார்கள் என்றார்..பிரதமர்..நாத்தழுதழுக்க பேசியதும்..கோபம் சிறிது தணிந்தது.ப்ரனாப் முகர்ஜியை அனுப்பி..கலைஞரின் கோபத்தை தணித்தனர்.கோபம் தணிந்த கலைஞர்..எம்.பி.க்கள் ராஜிநாமா இல்லை என அறிவித்து விட்டார்..

அதாவது..கலைஞரும்..தமிழன் ஆயிற்றே!!
தமிழனுக்கான இளிச்சவாய்த்தனமும்..உணர்ச்சி வசப்படுதலும்..விட்டுக்கொடுத்தலும்,விட்டுக்கொடுத்ததும் சால்ஜாப்பு சொல்வதுமான குணங்கள் அவரிடமும் உண்டாயிற்றே!!
அவரை அறிந்தவர்கள்..கலைஞர் ராஜதந்திரி என்கிறார்கள்..உண்மையா?