ஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்
Showing posts with label தமிழகம் - அரசியல். Show all posts
Showing posts with label தமிழகம் - அரசியல். Show all posts
Monday, January 10, 2011
வைகோ..சீமான் சந்திப்பு
சீமானை தனது கூட்டணியில் சேர்க்க ஜெ ஈடுபட்டு வருவதாகத் தெரிகிறது.
வைகோ வை சீமான் சந்தித்தார்.கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரம் நடந்த சந்திப்பில்..பல விஷயங்கள் பேசப்பட்டதாகத் தெரிகிரது.
சிறையில் அவர் இருந்த போது..அவர் விடுதலை ஆக வேண்டும் என அறிக்கை விட்டவர் வைகோ. மேலும் அவரை சிறையில் வந்து பாத்தவர்.அவரிடம்..தேசிய அரசியலில் நீண்ட நாட்கள் இருந்து விட்டீர்கள்..மாநில அரசியலுக்கு நீங்கள் வரவேண்டும் என்றும்..சட்டசபையில் வைகோவின் தமிழர்கள் ஆதரவு குரல் ஒலிக்க வேண்டும் எனவும் சீமான் கேட்டுக் கொண்டதாகக் கூறினார் .
மேலும் சீமான் கூறுகையில் காங்கிரஸிற்கு எதிராகக் களத்தில் நிற்கும் பெரிய கட்சி அ.தி.மு.க., என்றும்..காங்கிரஸை வீழ்த்த அ.தி.மு.க., விற்கு ஓட்டு போடச்சொல்லி தான் மக்களிடம் கேட்பேன் என்றும் கூறினார்.
வைகோ இது பற்றிக் கூறுகையில்..கடந்த நாடாளுமன்றத் தேர்தலில்..1200 கோடிகள் தி.மு.க., கூட்டணி செலவழித்தும்..அவர்களால் 13 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலேயே வெல்ல முடிந்தது என்றார்.
அ.தி.மு.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்ட்கள்,நாம் தமிழர் ஆகியவை ஒரு அணியில் வரக்கூடும்.
பா.ம.க., காங்கிரஸ்,தி.மு.க., ஒரு கூட்டணியாகலாம்.
விஜய்காந்த் அ.தி.மு.க., கூட்டணியில் சேர்ந்தால் பலமுள்ள கூட்டணியாய் அது அமையும்.
ஆனால் இன்னமும் காங்கிரஸ் நிலைப்பாடு குறித்து சந்தேகம் இருந்துக் கொண்டுதான் இருக்கிறது.
அவர்கள் எடுக்கும் முடிவு மாறினால்..பல மாறுதல்கள் கூட்டணிகளில் ஏற்படலாம்.
ஆனால் காங்கிரஸ் சேரும் கூட்டணி இம்முறை தோல்வியை சந்திக்கும்.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி வரக்கூடும் என்றே தோன்றுகிறது.
Wednesday, September 15, 2010
நெருக்கடியான நிலையில் வை.கோ.,
தி.மு.க.,விற்கு எதிராக தமிழகத்தில் ஆவேச அலை வீசுவதாகவும், தி.மு.க., இனி வெற்றி பெற முடியாது என்கிறார் வை.கோ., அ.தி.மு.க., கூட்டணியே வெற்றி பெறும் என சமீபத்தில் செய்தியாளர்களிடம் வை.கோ., கூறினார்.
இந்நிலையில்..விஜய்காந்திற்கும்..அ.தி.மு.க.,விற்கும் ஒரு உடன்பாடு எட்டப்பட்டு விட்டதாகவும் தே.மு.தி.க.,60 இடங்களில் போட்டியிடும் என்றும் ஒரு அதிகாரப் பூர்வமற்ற செய்தி ஒன்றும் கூறுகிறது.இது உண்மையானால் மீத முள்ள தொகுதிகளில் பெரும்பான்மை அ.தி.மு.க. எடுத்துக் கொள்ளும்.தோழமைக் கட்சிகளுக்கு சொற்பத் தொகுதிகளே கிடைக்கும்.அப்போது வை.கோ.விற்கு எதிர்பார்த்த அளவு தொகுதிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறைவே!
சென்ற சட்டசபைத் தேர்தலில்..இங்கும்,அங்கும் அவர் அல்லாடியது போல இம்முறையும் அவரை பந்தாடுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம்.ஆகவே சிறிது காலம் அவர் தி.மு.க., வை கண்மூடித்தனமாக எதிர்ப்பதை தவிர்ப்பது நலம் என்றே தோன்றுகிறது.
இதற்கிடையே விடுதலை சிறுத்தைக் கட்சி திருமாவளவன், காங்கிரஸ் கட்சியின் தலைமையில் சிறிய கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைக்கும் என்றும்..தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என்றும், அதற்கான திட்டம் இருப்பதாகக் கூறியுள்ளார்.
சமீபத்தில் மூப்பனார் நினைவு நிகழ்ச்சியில்..விஜய்காந்த்,இளங்கோவன், ஜி.கே.வாசன் ,திருமாவளவன் ஆகியோர் ஆலோசனை நடத்தியதையும் மறப்பதற்கல்ல.
இந்நிலையில்..மேற்கு வங்க சட்டசபை தேர்தலில்...காங்கிரஸ் கட்சிக்கு மரியாதை, கௌரவம் தராத கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றுள்ளார் ராகுல்.இது திரினாமுல் காங்கிரஸிற்கு மட்டும் சொல்லியிருக்க மாட்டார் என்றும் தோன்றுகிறது
இந்நிலையில்..விஜய்காந்திற்கும்..அ.தி.மு.க.,விற்கும் ஒரு உடன்பாடு எட்டப்பட்டு விட்டதாகவும் தே.மு.தி.க.,60 இடங்களில் போட்டியிடும் என்றும் ஒரு அதிகாரப் பூர்வமற்ற செய்தி ஒன்றும் கூறுகிறது.இது உண்மையானால் மீத முள்ள தொகுதிகளில் பெரும்பான்மை அ.தி.மு.க. எடுத்துக் கொள்ளும்.தோழமைக் கட்சிகளுக்கு சொற்பத் தொகுதிகளே கிடைக்கும்.அப்போது வை.கோ.விற்கு எதிர்பார்த்த அளவு தொகுதிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறைவே!
சென்ற சட்டசபைத் தேர்தலில்..இங்கும்,அங்கும் அவர் அல்லாடியது போல இம்முறையும் அவரை பந்தாடுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம்.ஆகவே சிறிது காலம் அவர் தி.மு.க., வை கண்மூடித்தனமாக எதிர்ப்பதை தவிர்ப்பது நலம் என்றே தோன்றுகிறது.
இதற்கிடையே விடுதலை சிறுத்தைக் கட்சி திருமாவளவன், காங்கிரஸ் கட்சியின் தலைமையில் சிறிய கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைக்கும் என்றும்..தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என்றும், அதற்கான திட்டம் இருப்பதாகக் கூறியுள்ளார்.
சமீபத்தில் மூப்பனார் நினைவு நிகழ்ச்சியில்..விஜய்காந்த்,இளங்கோவன், ஜி.கே.வாசன் ,திருமாவளவன் ஆகியோர் ஆலோசனை நடத்தியதையும் மறப்பதற்கல்ல.
இந்நிலையில்..மேற்கு வங்க சட்டசபை தேர்தலில்...காங்கிரஸ் கட்சிக்கு மரியாதை, கௌரவம் தராத கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றுள்ளார் ராகுல்.இது திரினாமுல் காங்கிரஸிற்கு மட்டும் சொல்லியிருக்க மாட்டார் என்றும் தோன்றுகிறது
Thursday, July 29, 2010
தமிழக காங்கிரஸ் மண்குதிரையா...?
தமிழகத்தில்..காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பை இழந்த 1967 முதல்.. அது வெற்றி வாய்ப்பை பெறவில்லை.தவிர்த்து..தி.மு.க., உடைந்து அ.தி.மு.க., உருவானதும் அதன் நிலைமை மேலும் மோசமானது.ஏதாவது ஒரு திராவிடக் கட்சியுடன் கூட்டு சேர்ந்தாலே ..அக்கட்சி சட்டசபையில் நுழைய முடிந்தது..அதே போன்று காங்கிரசுடன் கூட்டணியால் தான் திராவிடக் கட்சிகளுக்கும் கூட்டணிக்கு ஏற்றார்போல் நாடாளுமன்றத்தில் நுழைய முடிந்தது.மத்திய அமைச்சர்கள் பேரம் பேச முடிந்தது.
ஆனால்..சமீப காலமாக ராகுல் காந்தி கட்சிக்கு புது ரத்தம் ஊட்ட முற்பட்டுக் கொண்டிருக்கிறார்.அதற்கு அச்சாரமாக உத்தரபிரதேஷ்,பீஹார் ஆகிய மாநிலங்களிலிருந்து நாடாளுமன்றத்திற்கு காங்கிரசால்
கணிசமான இடங்கள் வெற்றிபெற முடிந்தது.
இதையெல்லாம் கணக்கில் கொண்டு ராகுல் ஆலோசனையின் பெயரிலேயே தமிழகத்திலும் காங்கிரஸ் செயல்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.
அதற்கேற்றாற் போல ராகுலும் இரண்டு முறை தமிழகம் வந்தும் கலைஞரை சந்திப்பதை தவிர்த்திருக்கிறார்.
காங்கிரசுடன் கூட்டணி வைத்துக் கொள்ள ஜெ விரும்புகிறார்.அதற்கான முயற்சிகள் நடந்துக் கொண்டிருப்பதாகவே தெரிகிறது.அதனால் தான் கோவை யில் அவர் பேசுகையில் கூட 'நீங்கள் எதிர்பார்க்கும் கூட்டணி உருவாகும்..அதை நான் கவனித்துக் கொள்கிறேன்' எனக் கூறியுள்ளார்.
தங்கள் கூட்டணியில்..காங்கிரசை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் தி.மு.க.விற்கு உள்ளது. 18 எம்.பி.க்களை தன் வசம் வைத்துள்ள தி.மு.க.,மத்தியில் 3 கேபினட் அமைச்சர்கள்,4 இணை அமைச்சர்களை பேரத்தில் பெற்றிபெற்றருக்கிறது. ஸபெக்ட்ரம் ஊழல்,அழகிரியின் மொழிபிரச்னை போன்றவை இருந்தாலும் மைய அரசுக்கு பல விஷயங்களில் சாதகமாகவே தி.மு.க., இருப்பதால்..2011ல் கூட்டணி மாறினால் பிரச்னைகள் எழும் என காங்கிரஸ், கூட்டணயை மாற்றவும் தயங்குகிறது.இது தி.மு.க.விற்கு சாதகம்.
தமிழகத்தின் தலையெழுத்தை தீர்மானிக்கப் போவதில் பெரும் பங்கு காங்கிரஸிற்கு இருக்கும் என்பதால்...அதை இப்போது உணர்ந்து சட்டசபையில் ஆட்சியிலும் இம்முறை பங்கு கேட்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
தி.மு.க., தங்கள் கூட்டணியில் இம்முறை ம.தி.மு.க.,வையும் எதிர்பார்க்கும் எனத் தெரிகிறது.அதனாலேயே வைகோ வை பாராட்டி முரசொலி சமீபத்தில் ஒரு செய்தி வெளியிட்டது.பா.ம.க., வையும் தி.மு.க. எதிர்பார்க்கிறது. அதனாலேயே..டா ஸ்மாக் ஊழியர் பற்றி ராமதாஸ் கூறியதற்கு..மதுவிலக்கு ஏற்படுத்த அரசு ஆலோசித்து வருகிறது என கலைஞர் கூறியுள்ளார்.
இந்நிலையில்..செம்மொழி மாநாடு, அ.தி.மு.க., கூட்டம் என அல்லோகலப்பட்ட கோவையில் ஆகஸ்ட் 2ஆம் நாள் தி.மு.க., பொதுகூட்டம் நடைபெற உள்ளது.கலைஞர் கலந்து கொள்ளும் இக்கூட்டத்திற்கு ஜெ க்கு வந்த கூட்டத்திற்கு மேல் கூட்டம் கூட்டவேண்டும் என ரகசிய உத்தரவு.
எல்லாவற்றையும்..calmஆக கையில் ஓட்டுச் சீட்டுடன் பார்த்துக் கொண்டிருக்கிறான் காமன் மேன்.
ஆனால்..சமீப காலமாக ராகுல் காந்தி கட்சிக்கு புது ரத்தம் ஊட்ட முற்பட்டுக் கொண்டிருக்கிறார்.அதற்கு அச்சாரமாக உத்தரபிரதேஷ்,பீஹார் ஆகிய மாநிலங்களிலிருந்து நாடாளுமன்றத்திற்கு காங்கிரசால்
கணிசமான இடங்கள் வெற்றிபெற முடிந்தது.
இதையெல்லாம் கணக்கில் கொண்டு ராகுல் ஆலோசனையின் பெயரிலேயே தமிழகத்திலும் காங்கிரஸ் செயல்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.
அதற்கேற்றாற் போல ராகுலும் இரண்டு முறை தமிழகம் வந்தும் கலைஞரை சந்திப்பதை தவிர்த்திருக்கிறார்.
காங்கிரசுடன் கூட்டணி வைத்துக் கொள்ள ஜெ விரும்புகிறார்.அதற்கான முயற்சிகள் நடந்துக் கொண்டிருப்பதாகவே தெரிகிறது.அதனால் தான் கோவை யில் அவர் பேசுகையில் கூட 'நீங்கள் எதிர்பார்க்கும் கூட்டணி உருவாகும்..அதை நான் கவனித்துக் கொள்கிறேன்' எனக் கூறியுள்ளார்.
தங்கள் கூட்டணியில்..காங்கிரசை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் தி.மு.க.விற்கு உள்ளது. 18 எம்.பி.க்களை தன் வசம் வைத்துள்ள தி.மு.க.,மத்தியில் 3 கேபினட் அமைச்சர்கள்,4 இணை அமைச்சர்களை பேரத்தில் பெற்றிபெற்றருக்கிறது. ஸபெக்ட்ரம் ஊழல்,அழகிரியின் மொழிபிரச்னை போன்றவை இருந்தாலும் மைய அரசுக்கு பல விஷயங்களில் சாதகமாகவே தி.மு.க., இருப்பதால்..2011ல் கூட்டணி மாறினால் பிரச்னைகள் எழும் என காங்கிரஸ், கூட்டணயை மாற்றவும் தயங்குகிறது.இது தி.மு.க.விற்கு சாதகம்.
தமிழகத்தின் தலையெழுத்தை தீர்மானிக்கப் போவதில் பெரும் பங்கு காங்கிரஸிற்கு இருக்கும் என்பதால்...அதை இப்போது உணர்ந்து சட்டசபையில் ஆட்சியிலும் இம்முறை பங்கு கேட்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
தி.மு.க., தங்கள் கூட்டணியில் இம்முறை ம.தி.மு.க.,வையும் எதிர்பார்க்கும் எனத் தெரிகிறது.அதனாலேயே வைகோ வை பாராட்டி முரசொலி சமீபத்தில் ஒரு செய்தி வெளியிட்டது.பா.ம.க., வையும் தி.மு.க. எதிர்பார்க்கிறது. அதனாலேயே..டா ஸ்மாக் ஊழியர் பற்றி ராமதாஸ் கூறியதற்கு..மதுவிலக்கு ஏற்படுத்த அரசு ஆலோசித்து வருகிறது என கலைஞர் கூறியுள்ளார்.
இந்நிலையில்..செம்மொழி மாநாடு, அ.தி.மு.க., கூட்டம் என அல்லோகலப்பட்ட கோவையில் ஆகஸ்ட் 2ஆம் நாள் தி.மு.க., பொதுகூட்டம் நடைபெற உள்ளது.கலைஞர் கலந்து கொள்ளும் இக்கூட்டத்திற்கு ஜெ க்கு வந்த கூட்டத்திற்கு மேல் கூட்டம் கூட்டவேண்டும் என ரகசிய உத்தரவு.
எல்லாவற்றையும்..calmஆக கையில் ஓட்டுச் சீட்டுடன் பார்த்துக் கொண்டிருக்கிறான் காமன் மேன்.
Subscribe to:
Posts (Atom)
