Monday, January 10, 2011

வைகோ..சீமான் சந்திப்பு


சீமானை தனது கூட்டணியில் சேர்க்க ஜெ ஈடுபட்டு வருவதாகத் தெரிகிறது.
வைகோ வை சீமான் சந்தித்தார்.கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரம் நடந்த சந்திப்பில்..பல விஷயங்கள் பேசப்பட்டதாகத் தெரிகிரது.
சிறையில் அவர் இருந்த போது..அவர் விடுதலை ஆக வேண்டும் என அறிக்கை விட்டவர் வைகோ. மேலும் அவரை சிறையில் வந்து பாத்தவர்.அவரிடம்..தேசிய அரசியலில் நீண்ட நாட்கள் இருந்து விட்டீர்கள்..மாநில அரசியலுக்கு நீங்கள் வரவேண்டும் என்றும்..சட்டசபையில் வைகோவின் தமிழர்கள் ஆதரவு குரல் ஒலிக்க வேண்டும் எனவும் சீமான் கேட்டுக் கொண்டதாகக் கூறினார் .
மேலும் சீமான் கூறுகையில் காங்கிரஸிற்கு எதிராகக் களத்தில் நிற்கும் பெரிய கட்சி அ.தி.மு.க., என்றும்..காங்கிரஸை வீழ்த்த அ.தி.மு.க., விற்கு ஓட்டு போடச்சொல்லி தான் மக்களிடம் கேட்பேன் என்றும் கூறினார்.
வைகோ இது பற்றிக் கூறுகையில்..கடந்த நாடாளுமன்றத் தேர்தலில்..1200 கோடிகள் தி.மு.க., கூட்டணி செலவழித்தும்..அவர்களால் 13 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலேயே வெல்ல முடிந்தது என்றார்.
அ.தி.மு.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்ட்கள்,நாம் தமிழர் ஆகியவை ஒரு அணியில் வரக்கூடும்.
பா.ம.க., காங்கிரஸ்,தி.மு.க., ஒரு கூட்டணியாகலாம்.
விஜய்காந்த் அ.தி.மு.க., கூட்டணியில் சேர்ந்தால் பலமுள்ள கூட்டணியாய் அது அமையும்.
ஆனால் இன்னமும் காங்கிரஸ் நிலைப்பாடு குறித்து சந்தேகம் இருந்துக் கொண்டுதான் இருக்கிறது.
அவர்கள் எடுக்கும் முடிவு மாறினால்..பல மாறுதல்கள் கூட்டணிகளில் ஏற்படலாம்.
ஆனால் காங்கிரஸ் சேரும் கூட்டணி இம்முறை தோல்வியை சந்திக்கும்.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி வரக்கூடும் என்றே தோன்றுகிறது.
 

1 comment:

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி நண்டு @நொரண்டு -