அப்போது நாங்கள் இருந்த காலனியில் கிட்டத்தட்ட 100 வீடுகள் இருக்கும்.ஒவ்வொரு வீட்டினரைப் பற்றியும் அனைத்து வீட்டினரும் அறிவார்கள்.ஒவ்வொரு வீட்டு மனையும் 2 கிரௌண்டுகள் இருக்கும்.தனித்தனி வீடுகள்.வீடு கட்டியதுப் போக எஞ்சிய நிலத்தில் வெண்டை,கத்திரி,கொத்தவரை,அவரை,புடல் என செடிகள் போட்டிருப்பார்கள்.அவரைக்கும்,புடலுக்கும் பெரிய பந்தல்.புழக்கடைப் பக்கம் கிணறு...பக்கத்தில்..துணி தோய்க்க கல்.காலை விடியும் போதே.. கிணற்றிலிருந்து பக்கெட்..பக்கெட்டாக தண்ணீர் சேந்தி..தலைக்கு குளிப்போம்.குளிக்கும் தண்ணீர் செல்லும் பாதையில் வாழை மரங்கள்.வாழையடி வாழையாக வளரும் கன்றுகள்.அருகே தானே தரையில் வளரும் பூசணிக்கொடி.
வாசலில் மல்லிகை பந்தல்,ரோஜா செடிகள்,அந்தி மந்தாரை,பவழவல்லி மரம்,குண்டுமல்லிகை..என வாசனை கும்மென்று இருக்கும்.கூடியவரை எந்த வீட்டிலும் காய்கறிகள் விலை கொடுத்து வாங்கமாட்டார்கள்.நமக்குப் போக மீதத்தை பகிர்ந்து , பக்கத்து வீடுகளுக்கு கொடுக்கும் தாராள மனது.நவராத்திரி சமயத்தில்...மாலை நேரத்தில்..கண்களுக்கு விருந்தாய்..பல வண்ண ஆடைகள் உடுத்தி வீதியில் துள்ளித் திரியும் மான்கள் (??!!) கூட்டம்..கையில் குங்குமம்..சுண்டல் பைகளுடன் பொடிசுகள்.
தீபாவளி,பொங்கல் தினங்களில்..ஒருவர் வீட்டுக்கு..ஒருவர் வருவதும்..வாழ்த்துவதும்...அடடா அந்த நாட்கள்..பொங்கல் பொங்கும் போது காலனி முழுதும் எதிரொலிக்கும்'பொங்கலோ..பொங்கல்'கூவல்...அடுத்த நாள்..மாட்டுப்பொங்கல்....பசுமாடுகள் இருக்கும் வீட்டில்..அந்த பசுவின் கொம்புகளுக்கு..வண்ணம் தீட்டி..மற்ற வீடுகளுக்கு மாலை நேரத்தில் எடுத்துச் செல்வார்கள்.நாம் பசுவிற்கு எதேனும் கொடுக்க வேண்டும்.அதுபோக..காளைமாடுகள் பூட்டிய வண்டியில்..ஜாலியாக..ஊரைச்சுற்றி ஊர்வலம் வருவார்கள்.
ஏதேனும் வீடுகளில்..அசம்பாவிதம் ஏதேனும் நிகழ்ந்தால்...இளைஞர்கள் கூட்டம் கூடிவிடும்.இறுதி ஊர்வலத்திற்கு உடலை சுமப்பதில்..நான்..நீ...என போட்டி இருக்கும்...
ஆனால் இன்று...?
தனித்தனி வீடுகள் போய்..எங்கு பார்த்தாலும்..அடுக்கு மாடி குடியிருப்புகள்..அடுத்த ஃப்ளாட்டில் யார் இருக்கிறார் என்று தெரியாது.போதாக் குறைக்கு...தீபாவளி சமயங்களில்..காலை 6 மணிக்கு மேல் தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற சட்டங்கள் வேறு.பொங்கல் அன்று..சாலமன் பாப்பையாவைப் பார்த்துக் கொண்டே குக்கர் பொங்கல்.
யார் வீட்டிலாவது...மரணம் சம்பவித்தால்..வரும் உறவு,நண்பர்கள்..எப்போது எடுப்பார்கள்? வீட்டில் மெகா சீரியல் பார்க்க நேரம் ஆச்சே என உள்ளம் பதை பதைக்க போலியாக வருத்தத்துடன் அமர்ந்திருக்கும் அவலம்.எங்களால் 'பாடி'யை சுமக்க முடியாது..B.P., sugar என்று கூறும் அனைத்து வயதினரும்.கடைசியில் அமரர் ஊர்தியில்..எவ்வளவு உறவு இருந்தாலும் தூக்க ஆளின்றி காடு செல்லும் பிணங்கள்.
இவற்றை எல்லாம்...பார்க்கும் போது...
கால ஓட்டத்தில் நாம் தொலைத்த, காணாமல் போன அந்த நாட்கள்..அந்த மனித நேயம்...திரும்ப வருமா? என்று எண்ணத் தோன்றுகிறது .
இப்படி ஒரு பதிவை போட உதவிய சிவாவிற்கு நன்றி.
இத் தொடரைத் தொடர நான் கேட்டுக் கொள்ளும் இருவர்...
ச்சின்னப்பையன்
வடகரை வேலன்
ஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்
Sunday, August 31, 2008
Saturday, August 30, 2008
உடல் ஆரோக்கியம் அடைய நீங்கள் நினைக்கவேண்டியன - பாரதியார்
நான் நோயில்லாதவன்... நான் வலிமையுடையவன்.என் உடம்பின் உறுப்புகள்
என் தெய்வ வலிமையைப் பெற்றுக் கொண்டு விட்டன.அவை திறனுடையன...இலாவகமுடையன..
மகசக்தியின் வீடுகளாயின.
என் உடலில் நோயின் வேகமே கிடையாது.நான் என் நோய்களை வீசி எறிந்துவிட்டேன்.
நானே சுகம்...நானே பலம்..நானே சக்தி..பொய் பலகீனமுடையது...
நான் சத்யம்..
நான் கடவுள்..
நான் ஆற்றல்..
அவ்வாறு இருக்கையில்..நான் எவ்வாறு வலிமையின்றி நோயுற்றவனாக இருக்க முடியும்?
ஆகா..வலிமையும்,நோயின்மையும் ஆகிய ஆற்றலிருப்பதால் எனக்கு விளையும் இன்பத்தை
எப்படி உரைப்பேன்.
நான் எய்தும் ஆனந்தத்தை என்ன சொல்வேன்..
நான் தேவன்....
நான் தேவன்...
நான் தேவன்..
என் தலை..என் விழிகள்...என் நாசி..என் வாய்..என் செவிகள்,என் கழுத்து,மார்பு.
வயிறு,கைகள்,இடை,கால்கள் எல்லாமே ஆரோக்கியமுடையன.எக்காலத்திலும்
நோயுறமாட்டா.
என் மனம் ஆரோக்கியமே வடிவு கொண்டது.
என் மனமும்.இருதயமும் எவ்வித நோய்கிருமிகளாலும் தாக்கப்படாதன.
நானே ஆரோக்கியம்
நானே தேவன்
நான் கடவுள்
அதனால் நான் சாக மாட்டேன்.
தெய்வம் என்றும் என்னுள் வந்து பொழிந்துக்கொண்டிருக்கும்படி என்னை திறந்து
வைத்திருக்கிறேன்.
எப்பொழுதும் கடமைகளைச் செய்வேன்...
பிற உயிர்களின் மேல் காதல் கொள்வேன்
ஆதலால் 'சாதல்' இல்லேன்.
நான் கவலையை விட்டவன்..
கவலையும்,பயமும் நம் பகைவர்கள்
நான் அப்பகைவர்களை வென்றவன்
நான் அமரன்
(எல்லோரும் இப்படியே நினையுங்கள்.இப்படியே தியானம் செய்யுங்கள்.
உங்களுக்குள் புதுவேகம் பிறக்கும். மனமும்,உடலும் சந்தோஷமாகவும்
ஆரோக்கியமாகவும் இருக்கும்..நம்மில் பாரதி தோன்றுவான்.)
என் தெய்வ வலிமையைப் பெற்றுக் கொண்டு விட்டன.அவை திறனுடையன...இலாவகமுடையன..
மகசக்தியின் வீடுகளாயின.
என் உடலில் நோயின் வேகமே கிடையாது.நான் என் நோய்களை வீசி எறிந்துவிட்டேன்.
நானே சுகம்...நானே பலம்..நானே சக்தி..பொய் பலகீனமுடையது...
நான் சத்யம்..
நான் கடவுள்..
நான் ஆற்றல்..
அவ்வாறு இருக்கையில்..நான் எவ்வாறு வலிமையின்றி நோயுற்றவனாக இருக்க முடியும்?
ஆகா..வலிமையும்,நோயின்மையும் ஆகிய ஆற்றலிருப்பதால் எனக்கு விளையும் இன்பத்தை
எப்படி உரைப்பேன்.
நான் எய்தும் ஆனந்தத்தை என்ன சொல்வேன்..
நான் தேவன்....
நான் தேவன்...
நான் தேவன்..
என் தலை..என் விழிகள்...என் நாசி..என் வாய்..என் செவிகள்,என் கழுத்து,மார்பு.
வயிறு,கைகள்,இடை,கால்கள் எல்லாமே ஆரோக்கியமுடையன.எக்காலத்திலும்
நோயுறமாட்டா.
என் மனம் ஆரோக்கியமே வடிவு கொண்டது.
என் மனமும்.இருதயமும் எவ்வித நோய்கிருமிகளாலும் தாக்கப்படாதன.
நானே ஆரோக்கியம்
நானே தேவன்
நான் கடவுள்
அதனால் நான் சாக மாட்டேன்.
தெய்வம் என்றும் என்னுள் வந்து பொழிந்துக்கொண்டிருக்கும்படி என்னை திறந்து
வைத்திருக்கிறேன்.
எப்பொழுதும் கடமைகளைச் செய்வேன்...
பிற உயிர்களின் மேல் காதல் கொள்வேன்
ஆதலால் 'சாதல்' இல்லேன்.
நான் கவலையை விட்டவன்..
கவலையும்,பயமும் நம் பகைவர்கள்
நான் அப்பகைவர்களை வென்றவன்
நான் அமரன்
(எல்லோரும் இப்படியே நினையுங்கள்.இப்படியே தியானம் செய்யுங்கள்.
உங்களுக்குள் புதுவேகம் பிறக்கும். மனமும்,உடலும் சந்தோஷமாகவும்
ஆரோக்கியமாகவும் இருக்கும்..நம்மில் பாரதி தோன்றுவான்.)
அய்ந்தறிவும் ஆறறிவும்....(கவிதை)...
உயர்ந்தோர் தாழ்ந்தோர்
பேதமில்லை
மச்சு வீடு குச்சு வீடு
பாகுபாடில்லை.
செய்த பாவம் தீர
இறை வழிபாடில்லை
மெய்யை பொய்யாக்க
நீதிமன்றங்கள் இல்லை.
உண்டு உண்டு உறங்கும்
சோம்பேறிகள் இல்லை
ஒருவருக்கொருவர்
கூழைக் கும்பிடு இல்லை
பதவிக்காக தலைவர்
புகழ் பாடுவாரில்லை
ஐந்தறிவு படைத்தவர் நாங்கள்
ஆறறிவு எங்களுக்கு இல்லை
பேதமில்லை
மச்சு வீடு குச்சு வீடு
பாகுபாடில்லை.
செய்த பாவம் தீர
இறை வழிபாடில்லை
மெய்யை பொய்யாக்க
நீதிமன்றங்கள் இல்லை.
உண்டு உண்டு உறங்கும்
சோம்பேறிகள் இல்லை
ஒருவருக்கொருவர்
கூழைக் கும்பிடு இல்லை
பதவிக்காக தலைவர்
புகழ் பாடுவாரில்லை
ஐந்தறிவு படைத்தவர் நாங்கள்
ஆறறிவு எங்களுக்கு இல்லை
Friday, August 29, 2008
அதி புத்திசாலி அண்ணாசாமி ஜோக்ஸ்
அண்ணாசாமி ஒரு நாள் ஒரு டீக்கடையில் உட்கார்ந்து டீ குடித்துக் கொண்டிருந்தார்.அப்போது சுடுகாட்டிற்கு
2 சடலங்கள் எடுத்துச் செல்லப்பட்டன.அவற்றுடன் நாயுடன் ஒருவர் செல்ல அவர் பின்னால் ஒருவர் பின் ஒருவராக
கிட்டத்தட்ட 500பேர் சென்றுக்கொண்டிருந்தனர்.அதைப் பார்த்த அண்ணாசாமிக்கு ஆச்சர்யம்.டீக்கடைக்காரரிடம்
நான் எவ்வளவோ பிண ஊர்வலங்களைப் பார்த்திருக்கிறேன்..ஆனால் இவ்வளவு ஒழுங்காக ஒருவர் பின் ஒருவராக
சென்று பார்த்ததில்லை..ஆமாம் ..யாருடைய ஊர்வலம் இது? என்றார்.
அவர் நாயுடன் செல்பவரை சுட்டிக்காட்டி 'அவரைக் கேளுங்கள்' என்றார்.
நாயுடன் செல்பவர் சொன்னார்'முதலில் சென்றது என் மனைவி..'
'ஆமாம் ..அவருக்கு என்னவாயிற்று?'
என் நாய் அவளைக்கடித்து விட்டது.இரண்டாவது பிணம் என் மாமியார்..என் மனைவியைக் காப்பாற்ற சென்றவரை
என் நாய் கடித்து விட்டது.
உடனே ஆவலுடன் அண்ணாசாமி'இந்த நாய் எனக்கு வாடகைக்கு கிடைக்குமா?'என்றார்.
வரிசையில் போய் நில்லுங்கள் என்றார்...நாயுடன் சென்றவர்.
அண்ணாசாமி 501வது ஆளாக வரிசையில் நின்றார்.
2 சடலங்கள் எடுத்துச் செல்லப்பட்டன.அவற்றுடன் நாயுடன் ஒருவர் செல்ல அவர் பின்னால் ஒருவர் பின் ஒருவராக
கிட்டத்தட்ட 500பேர் சென்றுக்கொண்டிருந்தனர்.அதைப் பார்த்த அண்ணாசாமிக்கு ஆச்சர்யம்.டீக்கடைக்காரரிடம்
நான் எவ்வளவோ பிண ஊர்வலங்களைப் பார்த்திருக்கிறேன்..ஆனால் இவ்வளவு ஒழுங்காக ஒருவர் பின் ஒருவராக
சென்று பார்த்ததில்லை..ஆமாம் ..யாருடைய ஊர்வலம் இது? என்றார்.
அவர் நாயுடன் செல்பவரை சுட்டிக்காட்டி 'அவரைக் கேளுங்கள்' என்றார்.
நாயுடன் செல்பவர் சொன்னார்'முதலில் சென்றது என் மனைவி..'
'ஆமாம் ..அவருக்கு என்னவாயிற்று?'
என் நாய் அவளைக்கடித்து விட்டது.இரண்டாவது பிணம் என் மாமியார்..என் மனைவியைக் காப்பாற்ற சென்றவரை
என் நாய் கடித்து விட்டது.
உடனே ஆவலுடன் அண்ணாசாமி'இந்த நாய் எனக்கு வாடகைக்கு கிடைக்குமா?'என்றார்.
வரிசையில் போய் நில்லுங்கள் என்றார்...நாயுடன் சென்றவர்.
அண்ணாசாமி 501வது ஆளாக வரிசையில் நின்றார்.
பலப்பத்தை மறந்த அவாள்
படிக்கின்ற காலத்திலே
பாலர் வகுப்பிலே
பலப்பம் இன்றி இருந்திட
பிச்சை இட்டேன்
பலப்பத்தை நான்
அதை மறந்திட்டார்
அவாள் இன்று
மற்றோரு ஆழ்வாரோ
வடவாசல் அன்னை
வருகை அன்று
என் எண்ணத்தை
தவிடு பொடி ஆக்கினார்
ஆதலால் பின்னாளில்
அன்னை புகழ் பாடினேன் -இன்றோ
நரைமுடியான் என எனை
எள்ளி நகையாடுகிறார்
தேளாய்,நண்டாய் கொட்டுகிறார்
வஞ்சகர்களே.இன்று
வன்மையாய் நான்
ஒன்று உரைத்திடுவேன்
கனி இருக்க காய்
கவர்ந்தற்று - .வள்ளுவன்
வாக்கை மறந்திடாதீர்.
பாலர் வகுப்பிலே
பலப்பம் இன்றி இருந்திட
பிச்சை இட்டேன்
பலப்பத்தை நான்
அதை மறந்திட்டார்
அவாள் இன்று
மற்றோரு ஆழ்வாரோ
வடவாசல் அன்னை
வருகை அன்று
என் எண்ணத்தை
தவிடு பொடி ஆக்கினார்
ஆதலால் பின்னாளில்
அன்னை புகழ் பாடினேன் -இன்றோ
நரைமுடியான் என எனை
எள்ளி நகையாடுகிறார்
தேளாய்,நண்டாய் கொட்டுகிறார்
வஞ்சகர்களே.இன்று
வன்மையாய் நான்
ஒன்று உரைத்திடுவேன்
கனி இருக்க காய்
கவர்ந்தற்று - .வள்ளுவன்
வாக்கை மறந்திடாதீர்.
Thursday, August 28, 2008
விழுதுகள் (கவிதை)
அவனுக்கு அவன்மீதே
ஆத்திரம்
நாம் இருவர்
நமக்கு இருவர் - மறந்து
வீங்கிய வயிறுடன்
வீட்டினுள் மணவாட்டி
முத்தாய் மூன்றாவது
முளையிலேயே கிள்ளிடணும்
இல்லையேல் முடியாது
இனிதாய் வாழ்ந்திட
இரவு முழுதும் மனப்புயல்
இடி மழையோ வெளியே
மறுநாள் புயலில்
மரங்கள் பல சாய
ஆலமரமோ சாயவில்லை
ஆதாரம் விழுதுகளே..
வருந்திய மனதில்
வந்தது மகிழ்ச்சி
ஆத்திரம்
நாம் இருவர்
நமக்கு இருவர் - மறந்து
வீங்கிய வயிறுடன்
வீட்டினுள் மணவாட்டி
முத்தாய் மூன்றாவது
முளையிலேயே கிள்ளிடணும்
இல்லையேல் முடியாது
இனிதாய் வாழ்ந்திட
இரவு முழுதும் மனப்புயல்
இடி மழையோ வெளியே
மறுநாள் புயலில்
மரங்கள் பல சாய
ஆலமரமோ சாயவில்லை
ஆதாரம் விழுதுகளே..
வருந்திய மனதில்
வந்தது மகிழ்ச்சி
Wednesday, August 27, 2008
கோவி கண்ணனும்,பதிவுகளும்
கோவி கண்ணன் சிங்கையில் சிஸ்டம் இஞ்சினியராக பணி புரிந்து வருகிறார்.நான்கு வருடங்களாக பதிவராக உள்ளார்.(govikannan.blogspot.com)
பதிவு உலகில் புதியதாக வருபவர்கள்..முதலில் இவரின் சில பதிவுகளையாவது படிக்க வேண்டும்.சாதாரண விஷயங்கள் முதல்..பல சமூக,அறிவியல்,பகுத்தறிவு,உலக நடப்பு,நகைச்சுவை,
மொக்கை பதிவு என எல்லா தலைப்புகளிலும் பதிவிடும் பதிவர்கள் மிகச் சிலரே!!!அதில் கண்ணனும் ஒருவர்.
நான் பதிவுகளில் நுழையும் முன் நான் படித்த சில பதிவர்கள்...தமிழச்சி,கோவி கண்ணன்.டோண்டு ராகவன்.
தமிழச்சியின் துணிச்சலான பதிவுகள்
டோண்டுவின் சிந்தனைப் பதிவுகள்
கோவி யின் தெரிந்துக் கொள்ள வேண்டிய பதிவுகள். இவைதான் என்னை பதிவு எழுத தூண்டியவை.
இந்த பதிவு கோவியைப் பற்றியது ஆதலால் அதைப்பற்றி...
சிறுகதை- அவர் சில சிறுகதைகளை பதிவேற்றி இருக்கிறார். அதில் 'புணரபி மரணம்..புணரபி ஜனனம்' என்று ஒரு கதை.அருமையான கதை.படிக்காதவர்கள் அந்த வலைப்பக்கத்துக்குச்
சென்று தவறாமல் படிக்கவும்.
மரணம்..ஜனனம்..எல்லாம் மாயை...எவ்வளவு அர்த்தம் பொதிந்த வார்த்தைகள்?
இடஒதுக்கிடு- பற்றி ஒரு பதிவு..உயர் வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு கொடுத்தால் என்ன?
ஜாதி மக்கள் அடிப்படையில் எல்லோருக்கும் இட ஒதுக்கீடு வழங்கினால்தான் சமத்துவம் ஏற்படும்.
அவரின் இந்த எண்ணம்..அவரை ஜாதி,மதங்களுக்கு அப்பாற்பட்டவராய் தோற்றுவிக்கிறது.
யாருக்கும்..எதற்கும் பயப்படாது..தன் எண்ணங்களை பதித்துள்ளார்.
எண்ணப்படம் பார்த்ததுண்டா வில்...விசித்ரமனம் பற்றி ஒரு பதிவு
'அறிவியல்..ஆன்மீகம் அனைத்தும் பொருள் உரைத்தாலும்..மிகச் சரியாக மனம் என்பது எப்படி செயல் படுகிறது என்பதற்கான தெளிவுரை எவருமே எழுத வில்லை..'என்கிறார்.
எவ்வளவு உண்மையான வார்த்தைகள்?
ரோஜாவை எப்படி அழைத்தாலும் ரோஜாதான்..பதிவில்..பல்வேறு பெயர்களில் ரோஜாவை ஏற்றுக் கொள்ளும் நாம் பல் வேறு பெயர்களில் (ஈஸ்வரன்,அல்லா,ஜீஸஸ்)அழைக்கப்படும் பரம்பொருளை எண் ஏற்பதில்லை ...என்கிறார்.
கலைஞர் முடிவெடுக்க வேண்டிய நேரம்...ஒகேனக்கல் குடிநீர் திட்டம் பற்றய ஒரு பதிவு..சிங்கையில் இருந்தாலும்..தமிழ்நாட்டை மறக்காத தமிழன் தான் என்பதை உறுதி படுத்துகிறார்.
சில மொக்கை பதிவகளும் உண்டு.
ஆனால் அவை நமக்கு மொக்கையாகத் தெரிவதில்லை.
பதிவர் சந்திப்பு..என்பார்..பார்த்தால் மார்க்கெட்டில் இரு பதிவர்கள் பார்த்திருப்பார்கள்.அவ்வளவுதான்..ஆனால்..படிக்க நமக்கு சுவையாக இருக்கும்..அதுதான் அவர் எழுத்து.
பொன்முடி ஆங்கிலம் படிக்க வேண்டிய..அவசியத்தை கூறியுள்ளதை..ஆதரித்து..ஆங்கிலம் எவ்வளவு முக்கியம் என்று ஒரு பதிவு.
மொத்தத்தில் தன் மனதில் சரி என்று தோன்றுவதை..யாருக்கும்..எதற்கும் பயப்படாமல் பதிவிடுதல் இவர் ஸ்பெஷாலிடி.
பின்னூட்டம்-பின்னூட்டம் இடுவதிலும் தனித்து நிற்பவர்.ச்சின்னப்பையனின் ஒரு பதிவுக்கு..குமரி முனையில் நில்லுங்கள்..உங்கள் பின்னால் 100 கோடி பேர் இருப்பர் என மெல்லிய நையாண்டி..எனது வாய் விட்டு சிரியுங்கள் பதிவிற்கு 'நான் வாய் விட்டு சிரித்தால்..வேலைக்கு ஆப்பு"என்று பின்னூட்டம் இட்டவர்..எம்.ஆர்.ராதா பற்றிய என் பதிவிற்கு என்னை 'அஞ்சா நெஞ்சன்'என்றும் பாராட்டினார்.
எவ்வளவு பேருக்கு..பாராட்டும் மனம் இருக்கிறது?
புதிய பதிவர்கள் என்றால்..அவர்களை ஊக்குவித்து (கலைஞர்..ஸ்டாலின்..ஊக்கு அல்ல) மூத்த பதிவர் என்ற தோரணை இன்றி பின்னூட்டம் இடுவார்.
அவ்வளவு ஏன்..சில மாதங்களாகவே எழுதும் என்னை (தமிழா..தமிழா..)..உங்களுக்கு பிடிக்கும் என தன் பதிவின் முகப்பில் இட்டுள்ளார்.
இவரைப் பற்றி எழுதிக்கொண்டே இருக்கலாம்...ஆனால் பதிவு நீண்டுவிடும்..
புது பதிவர்களே...இவர் பக்கத்திற்கு சென்று..இவர் பதிவுகளை படியுங்கள்.
ஆமாம்..இவர் பதிவில் எது சிறந்தது?
வெல்லக்கட்டியில் எந்த பாகம் இனிப்பு..சொல்லுங்கள்..நானும் சொல்கிறேன்.
பதிவு உலகில் புதியதாக வருபவர்கள்..முதலில் இவரின் சில பதிவுகளையாவது படிக்க வேண்டும்.சாதாரண விஷயங்கள் முதல்..பல சமூக,அறிவியல்,பகுத்தறிவு,உலக நடப்பு,நகைச்சுவை,
மொக்கை பதிவு என எல்லா தலைப்புகளிலும் பதிவிடும் பதிவர்கள் மிகச் சிலரே!!!அதில் கண்ணனும் ஒருவர்.
நான் பதிவுகளில் நுழையும் முன் நான் படித்த சில பதிவர்கள்...தமிழச்சி,கோவி கண்ணன்.டோண்டு ராகவன்.
தமிழச்சியின் துணிச்சலான பதிவுகள்
டோண்டுவின் சிந்தனைப் பதிவுகள்
கோவி யின் தெரிந்துக் கொள்ள வேண்டிய பதிவுகள். இவைதான் என்னை பதிவு எழுத தூண்டியவை.
இந்த பதிவு கோவியைப் பற்றியது ஆதலால் அதைப்பற்றி...
சிறுகதை- அவர் சில சிறுகதைகளை பதிவேற்றி இருக்கிறார். அதில் 'புணரபி மரணம்..புணரபி ஜனனம்' என்று ஒரு கதை.அருமையான கதை.படிக்காதவர்கள் அந்த வலைப்பக்கத்துக்குச்
சென்று தவறாமல் படிக்கவும்.
மரணம்..ஜனனம்..எல்லாம் மாயை...எவ்வளவு அர்த்தம் பொதிந்த வார்த்தைகள்?
இடஒதுக்கிடு- பற்றி ஒரு பதிவு..உயர் வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு கொடுத்தால் என்ன?
ஜாதி மக்கள் அடிப்படையில் எல்லோருக்கும் இட ஒதுக்கீடு வழங்கினால்தான் சமத்துவம் ஏற்படும்.
அவரின் இந்த எண்ணம்..அவரை ஜாதி,மதங்களுக்கு அப்பாற்பட்டவராய் தோற்றுவிக்கிறது.
யாருக்கும்..எதற்கும் பயப்படாது..தன் எண்ணங்களை பதித்துள்ளார்.
எண்ணப்படம் பார்த்ததுண்டா வில்...விசித்ரமனம் பற்றி ஒரு பதிவு
'அறிவியல்..ஆன்மீகம் அனைத்தும் பொருள் உரைத்தாலும்..மிகச் சரியாக மனம் என்பது எப்படி செயல் படுகிறது என்பதற்கான தெளிவுரை எவருமே எழுத வில்லை..'என்கிறார்.
எவ்வளவு உண்மையான வார்த்தைகள்?
ரோஜாவை எப்படி அழைத்தாலும் ரோஜாதான்..பதிவில்..பல்வேறு பெயர்களில் ரோஜாவை ஏற்றுக் கொள்ளும் நாம் பல் வேறு பெயர்களில் (ஈஸ்வரன்,அல்லா,ஜீஸஸ்)அழைக்கப்படும் பரம்பொருளை எண் ஏற்பதில்லை ...என்கிறார்.
கலைஞர் முடிவெடுக்க வேண்டிய நேரம்...ஒகேனக்கல் குடிநீர் திட்டம் பற்றய ஒரு பதிவு..சிங்கையில் இருந்தாலும்..தமிழ்நாட்டை மறக்காத தமிழன் தான் என்பதை உறுதி படுத்துகிறார்.
சில மொக்கை பதிவகளும் உண்டு.
ஆனால் அவை நமக்கு மொக்கையாகத் தெரிவதில்லை.
பதிவர் சந்திப்பு..என்பார்..பார்த்தால் மார்க்கெட்டில் இரு பதிவர்கள் பார்த்திருப்பார்கள்.அவ்வளவுதான்..ஆனால்..படிக்க நமக்கு சுவையாக இருக்கும்..அதுதான் அவர் எழுத்து.
பொன்முடி ஆங்கிலம் படிக்க வேண்டிய..அவசியத்தை கூறியுள்ளதை..ஆதரித்து..ஆங்கிலம் எவ்வளவு முக்கியம் என்று ஒரு பதிவு.
மொத்தத்தில் தன் மனதில் சரி என்று தோன்றுவதை..யாருக்கும்..எதற்கும் பயப்படாமல் பதிவிடுதல் இவர் ஸ்பெஷாலிடி.
பின்னூட்டம்-பின்னூட்டம் இடுவதிலும் தனித்து நிற்பவர்.ச்சின்னப்பையனின் ஒரு பதிவுக்கு..குமரி முனையில் நில்லுங்கள்..உங்கள் பின்னால் 100 கோடி பேர் இருப்பர் என மெல்லிய நையாண்டி..எனது வாய் விட்டு சிரியுங்கள் பதிவிற்கு 'நான் வாய் விட்டு சிரித்தால்..வேலைக்கு ஆப்பு"என்று பின்னூட்டம் இட்டவர்..எம்.ஆர்.ராதா பற்றிய என் பதிவிற்கு என்னை 'அஞ்சா நெஞ்சன்'என்றும் பாராட்டினார்.
எவ்வளவு பேருக்கு..பாராட்டும் மனம் இருக்கிறது?
புதிய பதிவர்கள் என்றால்..அவர்களை ஊக்குவித்து (கலைஞர்..ஸ்டாலின்..ஊக்கு அல்ல) மூத்த பதிவர் என்ற தோரணை இன்றி பின்னூட்டம் இடுவார்.
அவ்வளவு ஏன்..சில மாதங்களாகவே எழுதும் என்னை (தமிழா..தமிழா..)..உங்களுக்கு பிடிக்கும் என தன் பதிவின் முகப்பில் இட்டுள்ளார்.
இவரைப் பற்றி எழுதிக்கொண்டே இருக்கலாம்...ஆனால் பதிவு நீண்டுவிடும்..
புது பதிவர்களே...இவர் பக்கத்திற்கு சென்று..இவர் பதிவுகளை படியுங்கள்.
ஆமாம்..இவர் பதிவில் எது சிறந்தது?
வெல்லக்கட்டியில் எந்த பாகம் இனிப்பு..சொல்லுங்கள்..நானும் சொல்கிறேன்.
Tuesday, August 26, 2008
திரைப்பட பாடல்களும்...பட்டுக்கோட்டையாரும்
..
கானா பாட்டு,குத்துப் பாட்டு என திரைப்பட பாடல்கள் வந்துக் கொண்டிருக்கும் நாளில்..(நிலா..நிலா..வா வா என்று ஒரு லேட்டஸ்ட் பாட்டு..இனி எந்த பள்ளியிலும் நர்சரி ரைம்ஸில் இந்த பாடல் சொல்லிக்கொடுக்க முடியாது)அந்த நாளில் பட்டுக்கோட்டையாரின் பாடல்களை நினைக்கத் தோன்றுகிறது.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பொது உடமை கட்சிக்காரர்.ஒவ்வொரு பாடல்களிலும் கருத்து மிக அருமையாக இருக்கும்.அவரது பாடல் வரிகளில் இருந்து சிலவற்றைப் பார்ப்போம்.
'குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்
குருட்டு உலகமடா - இது
கொள்ளை அடிப்பதில்
வல்லமைக் காட்டிடும்
திருட்டு உலகமடா...தம்பி
உலகம் புரிந்து நடந்துக் கொள்ளடா
இதயம் திருந்த மருந்து சொல்லடா'
மற்றொரு பாடல்;-
(குழந்தையிடம் பாடும் பாடல்)
ஆளும் வளரணும்
அறிவும் வளரணும்
அதுதாண்டா வளர்ச்சி - உன்னை
ஆசையோடு ஈன்றவளுக்கு
அதுவே நீ தரும் மகிழ்ச்சி
என்று சொல்பவர்..அதே பாடலில்
வேப்பமர உச்சியில் நின்று
பேய் ஒன்று ஆடுதுன்னு
விளையாடப் போகையில் சொல்லி வைப்பாங்க -உன்
வீரத்தை முளையிலே கிள்ளி வைப்பாங்க
வேலையற்ற வீணர்களின்
மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக் கூட நம்பிவிடாதே - நீ
வீட்டுக்குள்ளே ஸோம்பி இருந்து
வெம்பி விடாதே..
கவிஞருக்கு சமுதாயத்தின் மீது எவ்வளவு அக்கரை பாருங்கள்
நாடோடி மன்னன் படத்தில் வரும் 'தூங்காதே தம்பி தூங்காதே' பற்றி சொல்லவே வேண்டாம்.ஒவ்வொரு வரியும் பொன் வரிகள்..அப்பாடலின் கடைசி இரு வரிகள்..
இன்னும் பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால் பல
பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா
(இந்த இடத்தில்..தமிழக அரசு தூங்காமல் இருந்திருந்தால் ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை ஒப்புதல் போட்ட உடனேயே முடித்திருக்கலாம்.இன்று
பிரச்னை இருந்திருக்காது)
இப்படி பட்டுக்கோட்டையாரின் பாடல்கள் பற்றி கூறிக்கொண்டே இருக்கலாம்.
ஆமாம்..இவருக்கு ஜனரஞ்சக மான பாட்டுக்கள் எழுதத் தெரியாதா? என்றால்..
அவரால் அதுவும் முடியும்..
கல்யாணபரிசு பாடல்கள் அனைத்தும் அவர்தான்.
அவர் வாழ்நாள் முழுதும் கோடம்பாக்கம் ஸ்டூடியோக்களுக்குச் செல்ல மைலாப்பூரிலிருந்து 12-B பஸ் பிடித்துத்தான் செல்வாராம்..கார் வைத்துக்கொள்ள வசதி இல்லை.
எனக்கு புரியாத புதிர் ஒன்று...பாரதியார்,பட்டுக்கோட்டையார்,கண்ணதாசன்..போன்ற திறமையானவர்களை இயற்கை ஏன் விரைவில் தன்னிடம் அழைத்துக் கொள்கிறது?
கானா பாட்டு,குத்துப் பாட்டு என திரைப்பட பாடல்கள் வந்துக் கொண்டிருக்கும் நாளில்..(நிலா..நிலா..வா வா என்று ஒரு லேட்டஸ்ட் பாட்டு..இனி எந்த பள்ளியிலும் நர்சரி ரைம்ஸில் இந்த பாடல் சொல்லிக்கொடுக்க முடியாது)அந்த நாளில் பட்டுக்கோட்டையாரின் பாடல்களை நினைக்கத் தோன்றுகிறது.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பொது உடமை கட்சிக்காரர்.ஒவ்வொரு பாடல்களிலும் கருத்து மிக அருமையாக இருக்கும்.அவரது பாடல் வரிகளில் இருந்து சிலவற்றைப் பார்ப்போம்.
'குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்
குருட்டு உலகமடா - இது
கொள்ளை அடிப்பதில்
வல்லமைக் காட்டிடும்
திருட்டு உலகமடா...தம்பி
உலகம் புரிந்து நடந்துக் கொள்ளடா
இதயம் திருந்த மருந்து சொல்லடா'
மற்றொரு பாடல்;-
(குழந்தையிடம் பாடும் பாடல்)
ஆளும் வளரணும்
அறிவும் வளரணும்
அதுதாண்டா வளர்ச்சி - உன்னை
ஆசையோடு ஈன்றவளுக்கு
அதுவே நீ தரும் மகிழ்ச்சி
என்று சொல்பவர்..அதே பாடலில்
வேப்பமர உச்சியில் நின்று
பேய் ஒன்று ஆடுதுன்னு
விளையாடப் போகையில் சொல்லி வைப்பாங்க -உன்
வீரத்தை முளையிலே கிள்ளி வைப்பாங்க
வேலையற்ற வீணர்களின்
மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக் கூட நம்பிவிடாதே - நீ
வீட்டுக்குள்ளே ஸோம்பி இருந்து
வெம்பி விடாதே..
கவிஞருக்கு சமுதாயத்தின் மீது எவ்வளவு அக்கரை பாருங்கள்
நாடோடி மன்னன் படத்தில் வரும் 'தூங்காதே தம்பி தூங்காதே' பற்றி சொல்லவே வேண்டாம்.ஒவ்வொரு வரியும் பொன் வரிகள்..அப்பாடலின் கடைசி இரு வரிகள்..
இன்னும் பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால் பல
பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா
(இந்த இடத்தில்..தமிழக அரசு தூங்காமல் இருந்திருந்தால் ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை ஒப்புதல் போட்ட உடனேயே முடித்திருக்கலாம்.இன்று
பிரச்னை இருந்திருக்காது)
இப்படி பட்டுக்கோட்டையாரின் பாடல்கள் பற்றி கூறிக்கொண்டே இருக்கலாம்.
ஆமாம்..இவருக்கு ஜனரஞ்சக மான பாட்டுக்கள் எழுதத் தெரியாதா? என்றால்..
அவரால் அதுவும் முடியும்..
கல்யாணபரிசு பாடல்கள் அனைத்தும் அவர்தான்.
அவர் வாழ்நாள் முழுதும் கோடம்பாக்கம் ஸ்டூடியோக்களுக்குச் செல்ல மைலாப்பூரிலிருந்து 12-B பஸ் பிடித்துத்தான் செல்வாராம்..கார் வைத்துக்கொள்ள வசதி இல்லை.
எனக்கு புரியாத புதிர் ஒன்று...பாரதியார்,பட்டுக்கோட்டையார்,கண்ணதாசன்..போன்ற திறமையானவர்களை இயற்கை ஏன் விரைவில் தன்னிடம் அழைத்துக் கொள்கிறது?
ஆனந்தம்
மஞ்சள் நீராட்டு
குங்குமப்பொட்டு
கழுத்தில்மாலை
ஆட்டிற்க்கோ ஆனந்தம்
விவரம் புரியாததால்
நேர்த்திக்கடன் ஆண்டவனுக்கு
நிறைவேர்றப்போவதால்
பக்தனுக்கோ ஆனந்தம்
தான் படைத்த உயிர்களில்
தன் பெயரைச்சொல்லி
ஒன்று பலியாவதால்
இறைவனுக்கோ கண்ணீர்
கண்டிப்பாக
ஆனந்தக்கண்ணீர் அல்ல
குங்குமப்பொட்டு
கழுத்தில்மாலை
ஆட்டிற்க்கோ ஆனந்தம்
விவரம் புரியாததால்
நேர்த்திக்கடன் ஆண்டவனுக்கு
நிறைவேர்றப்போவதால்
பக்தனுக்கோ ஆனந்தம்
தான் படைத்த உயிர்களில்
தன் பெயரைச்சொல்லி
ஒன்று பலியாவதால்
இறைவனுக்கோ கண்ணீர்
கண்டிப்பாக
ஆனந்தக்கண்ணீர் அல்ல
பனிப்பாவை (கவிதை)
வைகறையில்
கதிரோனின் கீற்றுகள்
வண்ண வெளிச்சம் போட்டு
புற்களில் தூங்கும்
பனிப்பாவையினரின்
நிர்வாணத்தைக் கலைத்து
மேனியில் ஊடுறிவி
இன்னலை விளைவிக்க
வெட்கத்துடன் பாவையினர்
மறைந்தனரே
கதிரோனின் கீற்றுகள்
வண்ண வெளிச்சம் போட்டு
புற்களில் தூங்கும்
பனிப்பாவையினரின்
நிர்வாணத்தைக் கலைத்து
மேனியில் ஊடுறிவி
இன்னலை விளைவிக்க
வெட்கத்துடன் பாவையினர்
மறைந்தனரே
Monday, August 25, 2008
ஆணாதிக்க சமுதாயம் இது..பெண்களே இதை மாற்றவேண்டியது நீங்கள் தான்
இரு நண்பர்களிடையே நடந்த உரையாடல்..
'என்ன.. கோவிந்தன்..உங்க பையனுக்கு பொண்ணு பார்க்கறீங்களா? எப்படிப்பட்ட பொண்ணு வேணும்?'
'வரப்போறவ பொறுமையில் பூமாதேவியாய் இருக்கணும்..என்னா..என் பையன் கோபக்காரன்.
அழகிலே மஹாலட்சுமியாய் இருக்கணும்..என்னா...என் பையன் சுமார் ரகம்தான்..வர்றவ அழகா இருந்தா பிறக்கப்போற குழந்தயும் அழகா இருக்கும்.
அமுது படைப்பதில் அன்னை போல இருக்கணும்..என் மகனுக்கு அடுப்பு கூட பத்த வைக்கத்தெரியாது.
இல்லறநுகர்ச்சியில் கணிகை போல...அப்போதானே வீட்டோட கிடப்பான்...வெளியே சாப்பிடத்தோனாது..
ஆலோசனை சொல்றதிலே அமைச்சராய் இருக்கணும்.இவன் படிப்பு 10வது தான்.பொண்ணு குறஞ்சது டிகிரி முடிச்சிருந்தா வசதியாய் இருக்கும்.
பணிவிடை செய்யறதுலே தாதியாய் ...புருஷனுக்கு அடங்கி ..அவனையும் வீட்டு பொறுப்புகளையும் கவனிச்சுண்டு..வேலைக்கும் போய் வரணும்..ஏன்னா எங்க வீட்டிலே வேலைக்காரி கிடையாது.இப்படியெல்லாம் ஒரு பொண்ணு இருந்தா பாருங்க'
ஆமாம் உங்க பையன் என்ன பண்றான்?
ஊதாரியாய் சுற்றிண்டு இருக்கான்..ஒரு கால் கட்டு போட்டா எல்லாம் சரியாயிடும்.
பெண்களே இப்போது பதிவின் தலைப்பை இன்னொரு முறை படியுங்கள்.
'என்ன.. கோவிந்தன்..உங்க பையனுக்கு பொண்ணு பார்க்கறீங்களா? எப்படிப்பட்ட பொண்ணு வேணும்?'
'வரப்போறவ பொறுமையில் பூமாதேவியாய் இருக்கணும்..என்னா..என் பையன் கோபக்காரன்.
அழகிலே மஹாலட்சுமியாய் இருக்கணும்..என்னா...என் பையன் சுமார் ரகம்தான்..வர்றவ அழகா இருந்தா பிறக்கப்போற குழந்தயும் அழகா இருக்கும்.
அமுது படைப்பதில் அன்னை போல இருக்கணும்..என் மகனுக்கு அடுப்பு கூட பத்த வைக்கத்தெரியாது.
இல்லறநுகர்ச்சியில் கணிகை போல...அப்போதானே வீட்டோட கிடப்பான்...வெளியே சாப்பிடத்தோனாது..
ஆலோசனை சொல்றதிலே அமைச்சராய் இருக்கணும்.இவன் படிப்பு 10வது தான்.பொண்ணு குறஞ்சது டிகிரி முடிச்சிருந்தா வசதியாய் இருக்கும்.
பணிவிடை செய்யறதுலே தாதியாய் ...புருஷனுக்கு அடங்கி ..அவனையும் வீட்டு பொறுப்புகளையும் கவனிச்சுண்டு..வேலைக்கும் போய் வரணும்..ஏன்னா எங்க வீட்டிலே வேலைக்காரி கிடையாது.இப்படியெல்லாம் ஒரு பொண்ணு இருந்தா பாருங்க'
ஆமாம் உங்க பையன் என்ன பண்றான்?
ஊதாரியாய் சுற்றிண்டு இருக்கான்..ஒரு கால் கட்டு போட்டா எல்லாம் சரியாயிடும்.
பெண்களே இப்போது பதிவின் தலைப்பை இன்னொரு முறை படியுங்கள்.
Sunday, August 24, 2008
இட்லி வடை பதிவும்..கலைஞர் பதிலும் "அரிவாளை சீண்டிவிட்ட 'அவாள்'.."
1.இ.வ.-முதிர்ந்த அரசியல் தலைவர் இப்படியெல்லாம் தரம் தாழ்ந்து
எழுதலாமா? சிறுபிள்ளைத் தனமாக இல்லையா?
கலைஞர்-தம்பி இ.வ.(மனதிற்குள் இ.வா என்று சொல்லிக்கொள்கிறார்)
இதையே சிறுபிள்ளைத்தனம் என்று சொன்னால்..தரம்
தாழ்ந்தது என்று சொன்னால்..அஞ்சா நெஞ்சனை தா.கிருட்டிணன்
கொலை வழக்கில் சம்பந்தப் படுத்தி..பத்திரிகை நிருபர்கள் கேட்ட போது
* * * நீ பார்த்தியா? *** நான் சொல்றேன் நீதான் கொலை செஞ்சேன்னு
என்றெல்லாம் பேசினேனே அதை நீ என்ன வென்று சொல்வாய்?
2.இ.வ-பிராமண சமூகத்தை மட்டுமே ஏன் எப்போதும் இழிவு படுத்துகிறீர்கள்?அடுத்த
முறை கனவில் அண்ணா,பெரியார் வரும்போது நல்ல அறிவுரைகளைக்
கேட்டு தெரிந்துக் கொள்வீர்களா?
கலைஞர்-தம்பி..இம்முறையும் தவறாக என்னைப் புரிந்துக் கொண்டிருக்கிறாய்.பல
முறை என்னுடன் பணி புரியும் அதிகாரிகள் பிராமணர்கள்தான் வேண்டும்
என நான் கேட்டுப் பெற்றிருக்கிறேன்.அண்ணா..பெரியார் இருவரும் என்
கனவில் வரும்போது அதிகமாக ஸ்டாலினைப்பற்றியும்,அழகிரியைப் பற்றியுமே
கவலைப்படுகிறார்கள்.இது சம்பந்தமாக அவர்கள் இதயத்துள் தைக்கப்பட்டுள்ள
முள் அகன்றதும்தான் இதைப்பற்றி கேட்க முடியும் என்பதை நீ அறிவாய்.
3.இ.வ.-மைனாரிட்டி அரசாக இருந்தாலும்..நீங்கள் தமிழ்நாட்டு முதல் அமைச்சர்.
ஜாதிகளைப் பற்றிப் பேசும் நீங்கள் அந்த பதவிக்கு தகுந்தவரா?
கலைஞர்-இந்த கேள்வி சிரிப்பைத்தான் வரவழிக்கிறது. மைனாரிட்டி அரசு என்று
நீ சொல்வதன் மூலம் ...யார் சொல்லி நீ அதைக் கேட்கிறாய் என அறிந்தேன்.
நீ வெறும் அம்பு..எய்தவன் இருக்க உன்னை நொந்து என்ன பயன்?நான்
ஆரியன் இல்லை சூத்திரன் என்ற ஒரே காரணத்தினால் இக் கேள்விஎன்னிடம் கேட்கப்
பட்டிருக்கிறது என்பதை உடன் பிறப்புக்கள் அறிவார்கள்.
4.இ.வ-ஐந்து முறை பதவிப்பிரமாணம் எடுத்திருக்கும் உங்களுக்கு..'எந்த விருப்பும்..
வெறுப்பும் இன்றி..'என்று பிரமாணத்தில் வரும் வரியின் பொருள் தெரியுமா?
அதை கூட விட்டு விடுங்கள்..இப்படி 'அவாள்' என்று பேசுவதுதான் பகுத்தறிவா?
கலைஞர்-'அவாள்'என்று சொல்வதை ஏன் தவறாக எடுத்துக் கொள்கிறீர்கள்.நான் எப்போதும்
அவர்கள் நினைப்பிலேயே இருப்பதால்..அந்த பேச்சு என்னை அறியாது எனக்குள்
புகுந்துவிட்டது.வேண்டுமானால் தயாளு மாமியை கேட்டுப் பாருங்கள்.மாறன் இருந்திருந்தால்
இந்த கேள்வி எழுந்திருக்காது.
5.இ.வ.-தேர்தலில் இதை பகிரங்கமாக சொல்லி 'அவாள்' ஓட்டு வேண்டாம் என்னும் தைர்யம்
நேர்மை கொஞ்சமாவது உண்டா?
கலைஞர்-மீண்டும் எனக்கு சிரிப்பை வரவழிக்கிறாய்..தேர்தல் போது நீ பார்க்கும் மு.க. வேறு.
தேர்தலில் அவர்கள் ஓட்டையும் பெற்று நான் கோட்டையை பிடிக்கும் போதும்,
கோட்டையை இழக்கும் போதும் பார்க்கும் மு.க. வேறு.
(இத்துடன் கலைஞரின், நமது கற்பனை பதில்கள் முடிந்தது)
இனி நமக்கு புரியாத கேள்வி..எல்லா சவால்களையும் சமாளிப்பவர்..'அவாள்' சவால் என்பது எதனால்..?
எழுதலாமா? சிறுபிள்ளைத் தனமாக இல்லையா?
கலைஞர்-தம்பி இ.வ.(மனதிற்குள் இ.வா என்று சொல்லிக்கொள்கிறார்)
இதையே சிறுபிள்ளைத்தனம் என்று சொன்னால்..தரம்
தாழ்ந்தது என்று சொன்னால்..அஞ்சா நெஞ்சனை தா.கிருட்டிணன்
கொலை வழக்கில் சம்பந்தப் படுத்தி..பத்திரிகை நிருபர்கள் கேட்ட போது
* * * நீ பார்த்தியா? *** நான் சொல்றேன் நீதான் கொலை செஞ்சேன்னு
என்றெல்லாம் பேசினேனே அதை நீ என்ன வென்று சொல்வாய்?
2.இ.வ-பிராமண சமூகத்தை மட்டுமே ஏன் எப்போதும் இழிவு படுத்துகிறீர்கள்?அடுத்த
முறை கனவில் அண்ணா,பெரியார் வரும்போது நல்ல அறிவுரைகளைக்
கேட்டு தெரிந்துக் கொள்வீர்களா?
கலைஞர்-தம்பி..இம்முறையும் தவறாக என்னைப் புரிந்துக் கொண்டிருக்கிறாய்.பல
முறை என்னுடன் பணி புரியும் அதிகாரிகள் பிராமணர்கள்தான் வேண்டும்
என நான் கேட்டுப் பெற்றிருக்கிறேன்.அண்ணா..பெரியார் இருவரும் என்
கனவில் வரும்போது அதிகமாக ஸ்டாலினைப்பற்றியும்,அழகிரியைப் பற்றியுமே
கவலைப்படுகிறார்கள்.இது சம்பந்தமாக அவர்கள் இதயத்துள் தைக்கப்பட்டுள்ள
முள் அகன்றதும்தான் இதைப்பற்றி கேட்க முடியும் என்பதை நீ அறிவாய்.
3.இ.வ.-மைனாரிட்டி அரசாக இருந்தாலும்..நீங்கள் தமிழ்நாட்டு முதல் அமைச்சர்.
ஜாதிகளைப் பற்றிப் பேசும் நீங்கள் அந்த பதவிக்கு தகுந்தவரா?
கலைஞர்-இந்த கேள்வி சிரிப்பைத்தான் வரவழிக்கிறது. மைனாரிட்டி அரசு என்று
நீ சொல்வதன் மூலம் ...யார் சொல்லி நீ அதைக் கேட்கிறாய் என அறிந்தேன்.
நீ வெறும் அம்பு..எய்தவன் இருக்க உன்னை நொந்து என்ன பயன்?நான்
ஆரியன் இல்லை சூத்திரன் என்ற ஒரே காரணத்தினால் இக் கேள்விஎன்னிடம் கேட்கப்
பட்டிருக்கிறது என்பதை உடன் பிறப்புக்கள் அறிவார்கள்.
4.இ.வ-ஐந்து முறை பதவிப்பிரமாணம் எடுத்திருக்கும் உங்களுக்கு..'எந்த விருப்பும்..
வெறுப்பும் இன்றி..'என்று பிரமாணத்தில் வரும் வரியின் பொருள் தெரியுமா?
அதை கூட விட்டு விடுங்கள்..இப்படி 'அவாள்' என்று பேசுவதுதான் பகுத்தறிவா?
கலைஞர்-'அவாள்'என்று சொல்வதை ஏன் தவறாக எடுத்துக் கொள்கிறீர்கள்.நான் எப்போதும்
அவர்கள் நினைப்பிலேயே இருப்பதால்..அந்த பேச்சு என்னை அறியாது எனக்குள்
புகுந்துவிட்டது.வேண்டுமானால் தயாளு மாமியை கேட்டுப் பாருங்கள்.மாறன் இருந்திருந்தால்
இந்த கேள்வி எழுந்திருக்காது.
5.இ.வ.-தேர்தலில் இதை பகிரங்கமாக சொல்லி 'அவாள்' ஓட்டு வேண்டாம் என்னும் தைர்யம்
நேர்மை கொஞ்சமாவது உண்டா?
கலைஞர்-மீண்டும் எனக்கு சிரிப்பை வரவழிக்கிறாய்..தேர்தல் போது நீ பார்க்கும் மு.க. வேறு.
தேர்தலில் அவர்கள் ஓட்டையும் பெற்று நான் கோட்டையை பிடிக்கும் போதும்,
கோட்டையை இழக்கும் போதும் பார்க்கும் மு.க. வேறு.
(இத்துடன் கலைஞரின், நமது கற்பனை பதில்கள் முடிந்தது)
இனி நமக்கு புரியாத கேள்வி..எல்லா சவால்களையும் சமாளிப்பவர்..'அவாள்' சவால் என்பது எதனால்..?
Saturday, August 23, 2008
தமிழ் படித்தவரா (குட்டிக்கதை)
பத்துக்கு எட்டு அளவுள்ள அந்த அறைக்குள் நுழைந்தான் அண்ணாமலை .
நேர் காணலுக்கு வந்திருக்கிறான் .அறங்காவலர்கள் மூவர் அமர்ந்திருந்தனர் .
அவனைப் பார்த்து 'சிட் டோவ்ன் 'என்றனர்.பின் ஒருவர் மாற்றி ஒருவர்
கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தனர் .
வாட் ஈஸ் உவர் நேம்'
அண்ணாமலை.
யுவர் எசுகேசனால் குவாலிபிகேசன்
எம். ஏ .,தமிழ்
'தமிழ்' என்றபடி மூவரும் அவனை ஏதோ செய்யக்கூடாத தவறை செய்துவிட்டவன் போல பார்த்தனர்.
'டூ யு நோ ..தி நேம் ஆப் அவர் பவுண்டர்,'
'வெள்ளையப்பன்'
வெரிகுட். யு நோ இன் விச் இயர் வி சேலி பி ரே டெட் அவர் கோல்டன் சுபீலி
இன் தி இயற் 2000
ஹொவ் மச் சே ல ரி யு வான்ட்'
10000
ஆல் ரெயிட். வி வில் லேட் யு நோ '
தமிழ் வளர்ச்சி சங்க வேலைக்கு வந்தவன் தமிழ் படித்திருந்ததால்
தேர்ந்து எடுக்கப் பட வில்லை.
நேர் காணலுக்கு வந்திருக்கிறான் .அறங்காவலர்கள் மூவர் அமர்ந்திருந்தனர் .
அவனைப் பார்த்து 'சிட் டோவ்ன் 'என்றனர்.பின் ஒருவர் மாற்றி ஒருவர்
கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தனர் .
வாட் ஈஸ் உவர் நேம்'
அண்ணாமலை.
யுவர் எசுகேசனால் குவாலிபிகேசன்
எம். ஏ .,தமிழ்
'தமிழ்' என்றபடி மூவரும் அவனை ஏதோ செய்யக்கூடாத தவறை செய்துவிட்டவன் போல பார்த்தனர்.
'டூ யு நோ ..தி நேம் ஆப் அவர் பவுண்டர்,'
'வெள்ளையப்பன்'
வெரிகுட். யு நோ இன் விச் இயர் வி சேலி பி ரே டெட் அவர் கோல்டன் சுபீலி
இன் தி இயற் 2000
ஹொவ் மச் சே ல ரி யு வான்ட்'
10000
ஆல் ரெயிட். வி வில் லேட் யு நோ '
தமிழ் வளர்ச்சி சங்க வேலைக்கு வந்தவன் தமிழ் படித்திருந்ததால்
தேர்ந்து எடுக்கப் பட வில்லை.
Friday, August 22, 2008
பொழுது போகாத ச்சின்னப்பையனுக்கு
ச்சின்னப்பையனுக்கு பொழுது போகவில்லையாம்.
இப்படிப்பட்டவற்றையும் கண்டுபிடிக்கட்டும்.
ஓரெழுத்துச்சொல்-
கை..
கீ (சாவி)
தா
தீ
தை
நோ (NO)
பூ
பை, போ ,மை, ரோ(ROW)
வை
இரண்டு ஒறே எழுத்து
சௌசௌ
டாடா
தைதை(என குதித்தான்)
பாபா
மாமா
லாலா,
லோ..லோ(என அலைந்தான்)
ஒரே வார்த்தைகள் அதன் ஒற்றுடன்
காக்கா
பாப்பா
தாத்தா
சாச்சா
(அப்பாடா..ச்சின்னப்பையனுக்கு வேலை கொடுத்தாச்சு)
இப்படிப்பட்டவற்றையும் கண்டுபிடிக்கட்டும்.
ஓரெழுத்துச்சொல்-
கை..
கீ (சாவி)
தா
தீ
தை
நோ (NO)
பூ
பை, போ ,மை, ரோ(ROW)
வை
இரண்டு ஒறே எழுத்து
சௌசௌ
டாடா
தைதை(என குதித்தான்)
பாபா
மாமா
லாலா,
லோ..லோ(என அலைந்தான்)
ஒரே வார்த்தைகள் அதன் ஒற்றுடன்
காக்கா
பாப்பா
தாத்தா
சாச்சா
(அப்பாடா..ச்சின்னப்பையனுக்கு வேலை கொடுத்தாச்சு)
தாரே ஜாமீன் பர் லேட்டா வந்துள்ள லேட்டஸ்ட் விமரிசனம்
.
ஒரு தமிழ் படத்தயாரிப்பாளர் பார்வையில்
எல்லாரும் ஆஹா ,ஒ ஹோ ன்னு சொல்ராங்கலேன்னு அந்த படத்தை பார்க்க நினைச்சேன். ஆனா பாருங்க நமக்கு ஹிந்தி தெரியாது. இதுதான் தலைவா ஒரு கஷ்டம் ..நாம இந்தியாவிலே
இருந்தாலும் ,இந்தியாவிலே தயாரிக்கிற படத்தை நம்மலாலே
பார்க்கமுடியல்ல ..பார்த்தாலும் புரிஞ்சுக்க முடியல்ல.
இந்த படத்தோட DVD கிடைக்குமான்னு தேடினேன். அதுல தானே இங்கிலீஷ் சப் டைட்டில் இருக்கும்.(இங்கிலீஷ் ல கூட நான் வீக்
.அது வேற )
DVD கிடைச்சது. பார்த்தேன்.
என்ன அநியாயம் இது? இந்த படத்திலே என்ன இருக்கிறது?
ஒரு சண்டைக் காட்சி இருக்க...ஒரு கவர்ச்சி நடனம் உண்டா...
அவ்வளவு ஏன்...இதுலே ஒரு ஹிரோயின் னு கூட கிடையாது.
அப்பறம் தானே கவர்ச்சி .. தொப்புள்...எல்லாம்.
சரி.. அதுதான் போகட்டும்னா ,ஒரு வெளி நாட்டுலே கனவு காட்சி.
ஒரு பாட்டு,குறைஞ்ச ஆடையிலே ஒரு நடனம்..ம்..ம்...ம்..ம்..
சரி கதைக்கு வரேன்
டிச்லேக்சியா ங்கிற படிக்கிற திரன்லே குறைபாடுள்ள சிறுவனின்
கதை. அமீர்கானைவிட சிறுவன் நல்லா நடிச்சுருக்கான். ஆமாம் ..
இப்படி குழந்தைகளை நடிக்க வச்சா.. குழந்தை தொழிலாளர்கள்
சட்டம் மீரினாற்போல் இல்லையோ?
பாதியிலே DVD யை ஆப் பண்ணிட்டேன்.
சுவாரிசியமா எதுவுமில்ல.. ..நமக்கு இந்த படம் சரிப்படாது.
நம்ம அடுத்த படத்துலே நயன்தாரா பில்லா லே வர மாதிரி ஒரு கவர்ச்சி சீன் வைக்க சொல்லி இருக்கேன். கனல் கண்ணன் வேற காத்துக்கிட்டு இருக்கார்.
நான் வரேங்க.
நம்புங்க.. என்னாலே தாரே ஜாமீன் பார் மாதிரி ஒரு மட்டமான
படத்தை எடுக்க முடியாது.
ஒரு தமிழ் படத்தயாரிப்பாளர் பார்வையில்
எல்லாரும் ஆஹா ,ஒ ஹோ ன்னு சொல்ராங்கலேன்னு அந்த படத்தை பார்க்க நினைச்சேன். ஆனா பாருங்க நமக்கு ஹிந்தி தெரியாது. இதுதான் தலைவா ஒரு கஷ்டம் ..நாம இந்தியாவிலே
இருந்தாலும் ,இந்தியாவிலே தயாரிக்கிற படத்தை நம்மலாலே
பார்க்கமுடியல்ல ..பார்த்தாலும் புரிஞ்சுக்க முடியல்ல.
இந்த படத்தோட DVD கிடைக்குமான்னு தேடினேன். அதுல தானே இங்கிலீஷ் சப் டைட்டில் இருக்கும்.(இங்கிலீஷ் ல கூட நான் வீக்
.அது வேற )
DVD கிடைச்சது. பார்த்தேன்.
என்ன அநியாயம் இது? இந்த படத்திலே என்ன இருக்கிறது?
ஒரு சண்டைக் காட்சி இருக்க...ஒரு கவர்ச்சி நடனம் உண்டா...
அவ்வளவு ஏன்...இதுலே ஒரு ஹிரோயின் னு கூட கிடையாது.
அப்பறம் தானே கவர்ச்சி .. தொப்புள்...எல்லாம்.
சரி.. அதுதான் போகட்டும்னா ,ஒரு வெளி நாட்டுலே கனவு காட்சி.
ஒரு பாட்டு,குறைஞ்ச ஆடையிலே ஒரு நடனம்..ம்..ம்...ம்..ம்..
சரி கதைக்கு வரேன்
டிச்லேக்சியா ங்கிற படிக்கிற திரன்லே குறைபாடுள்ள சிறுவனின்
கதை. அமீர்கானைவிட சிறுவன் நல்லா நடிச்சுருக்கான். ஆமாம் ..
இப்படி குழந்தைகளை நடிக்க வச்சா.. குழந்தை தொழிலாளர்கள்
சட்டம் மீரினாற்போல் இல்லையோ?
பாதியிலே DVD யை ஆப் பண்ணிட்டேன்.
சுவாரிசியமா எதுவுமில்ல.. ..நமக்கு இந்த படம் சரிப்படாது.
நம்ம அடுத்த படத்துலே நயன்தாரா பில்லா லே வர மாதிரி ஒரு கவர்ச்சி சீன் வைக்க சொல்லி இருக்கேன். கனல் கண்ணன் வேற காத்துக்கிட்டு இருக்கார்.
நான் வரேங்க.
நம்புங்க.. என்னாலே தாரே ஜாமீன் பார் மாதிரி ஒரு மட்டமான
படத்தை எடுக்க முடியாது.
Thursday, August 21, 2008
இளைஞர்களுக்கு வழிவிடப்படுமா?
தி.மு.க.வைத் தொடங்கும்போது அண்ணாவுக்கு நாற்பது வயது, நாவலருக்கு 29 வயது, பேராசிரியருக்கு 27 வயது, கலைஞருக்கு 25 வயது, மதியழகனுக்கு 25 வயது... எனவே, வயது எதற்கும் தடையில்லை... - இப்படித்தான் தி.மு.க.வின் தலைவர்கள் எல்லாரும் பேசினார்கள், 1980-ல் மதுரையில் இளைஞரணி தொடங்கப்பட்டபோது!
ஆனால், தி.மு.க.வில் கேள்வி எழுப்பப்பட்டுக் கொண்டே இருந்தாலும்கூட கேள்விக்குறியாகவே தொடருகிறது இது. கடந்த சில ஆண்டுகளில், குறிப்பாக முதல்வர் கலைஞரின் உடல்நலம் பற்றிய சங்கடங்கள் வெளியே தெரியத் தொடங்கியபோது, ஸ்டாலின் முதல்வராவாரா? என்ற கேள்வி விவாதமானது. ஸ்டாலின் முதல்வராவதை ஆதரிப்பதாக பேராசிரியர் அன்பழகன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பகிரங்கமாகவே அறிவித்தபோதிலும்கூட, பதில்கள் மட்டும் பூடகமாகவே வெளியிடப்பட்டு வந்தன.
இந்தக் கோரிக்கையும் எதிர்பார்ப்பும் கொதிநிலையை எட்ட, நெல்லையில் நடந்த தி.மு.க. மாநாட்டின்போது ஸ்டாலின் முதல்வராக அறிவிக் கப்படுவார் என பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வழக்கமான பதிலுடன் அறிவிப்பு தள்ளிப் போனது. அதைத் தொடர்ந்துதான், இந்த யோசனையை யார் எதிர்ப்பது, ஏன் தள்ளிப் போகிறது, அறிவிப்பதில் என்ன தயக்கம் என்பது போன்ற கேள்விகளும் விவாதங்களும் பெரிதாக அடிபடத் தொடங்கின.
தொடர்ந்து, அடுத்த வாரிசுகளான அழகிரி, கனிமொழி போன்றோர் பற்றிய விவாதங்களும் சூடுபிடிக்கத் தொடங்கின. ஒரு சர்வேயின் பலனால் கட்சியிலிருந்து கட்டங்கட்டப்பட்ட தயாநிதி மாறனுடைய அரசியலும் இந்த சர்ச்சைகளுக்குள்ளே புகுந்து விளையாடத் தொடங்கியது.
அதிகாரத்தைக் குறிவைக்கும் குடும்ப அரசியலில் ஸ்டாலினும் ஒரு காயாகி, அங்கே இங்கே என்று நகர்த்தப்பட்டுக் கொண்டிருக்க, அண்மையில் ஸ்டாலின் மேற்கொண்ட லண்டன் பயணமும், அது தொடர்பான செய்திகளும் சர்ச்சைகளை மேலும் மேலும் வளப்படுத்தின. ஒருகட்டத்தில் ஸ்டாலின் ஓரங்கட்டப்படுகிறார் என்றேகூட கட்சிக்கு உள்ளேயும், வெளியேயும் இருந்த பலரால் கருதப்பட்டது.
வேலூர் மாநகராட்சித் தொடக்க விழாவில் பேசிய கலைஞரோ, `அடுத்த முறை முதல்வராக நான் விரும்பவில்லை. தகுதியும் திறமையும் வாய்ந்தவருக்கு உறுதுணையாக இருப்பேன்' என்றார். இத்தனைக்கும் மேடையில் உடனிருந்த ஸ்டாலின் பற்றி அவர் எதுவும் குறிப்பிடவில்லை. மதுரையில் டி.எம். சௌந்தரராஜனுக்கு நடந்த பாராட்டு விழாவில் அழகிரியைப் பாராட்டி அவர் பேசிய பேச்சும், பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் சிலை திறப்புக்கேகூட ஸ்டாலின் வராததும் சேர, அவருடைய ஆதரவாளர்களிடையே தர்மசங்கட அலைகளை ஏற்படுத்தியது.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு சென்னையில் அண்மையில் ஒரு மேம்பாலத் திறப்பு விழாவில் உள்ளாட்சித் துறை அமைச்சரான ஸ்டாலினையும் வைத்துக்கொண்டு பேசியபோதுதான், ஸ்டாலின் ஊக்கை விழுங்கிய கதையைக் கூறி, `அந்த ஊக்கத்தால் அவர் மேயராகி, அமைச்சராகி, இன்னும் என்னென்னவோ ஆகப் போகிறார்' என்று குறிப்பிட்டு மீண்டும் ஒரு நம்பிக்கை சஸ்பென்ஸ் வைத்திருக்கிறார் கலைஞர்.
ஸ்டாலின் முதல்வராவாரா?
இந்த விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க கலைஞர் முடிவு செய்துவிட்டதாகவே நம்பத் தகுந்த வட்டாரங்களின் லேட்டஸ்ட் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்டாலினை முதல்வராக அறிவிப்பதுடன், காங்கிரஸின் கோரிக்கைக்கு செவிமடுத்து அவர்களை அமைச்சரவையில் சேர்த்துக் கொள்வது பற்றிய அறிவிப்பையும் ஒருசேர செப்டம்பரில் கலைஞர் வெளியிடுவார் என இந்த வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன. அனேகமாக, செப்டம்பரில் அண்ணா பிறந்த நாளான 15-ம் தேதி, உள்கட்சித் தேர்தல் முடிந்து நடைபெறவுள்ள முப்பெரும் விழாவில் இதுபற்றிய முறைப்படியான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக கட்சியிலும் குடும்பத்திலும் ஒரு `காம்ப்ரமைஸ் ஃபார்முலா' உருவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த சில நாள்களாக ஸ்டாலின் மீண்டும் உற்சாகமாகக் காணப்படுவதற்கு இந்தப் புதிய முடிவுதான் காரணம் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.
இந்த முடிவை நோக்கி கலைஞர் சென்றடையப் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.
முதலாவதாக, உள்கட்சி தாண்டி அரசியல் கட்சிகள் மட்டுமின்றி சாதாரண மக்கள் மத்தியிலும் விவாதிக்கப்படும் `யார் அடுத்த வாரிசு?' என்பது பற்றிய அநாவசியமான சர்ச்சை. இதையொட்டியே பேசப்படும் அவருடைய உடல்நிலை தொடர்பான சங்கடங்கள்.
இவையெல்லாம் இப்படியே தொடர்ந்தால் காலப்போக்கில் கட்சியைப் பலவீனப்படுத்திவிடக் கூடும் என்ற கருத்து வலுப்பட்டு வருகிறது.
``கலைஞர் கண் முன்னாலேயே ஸ்டாலின் முதல்வராக அறிவிக்கப்பட்டால் பெரிய அளவில் எதிர்ப்பு எதுவும் இருக்காது. தென் மாவட்டங்களையும் சேர்த்தால்கூட பெரும்பாலான மாவட்டச் செயலர்கள் ஸ்டாலின் வருவதை எவ்வித முணுமுணுப்புமின்றி எளிதில் ஏற்றுக்கொள்வார்கள். இந்த விஷயத்தில், சட்டமன்றத் தேர்தலுக்கு முன் தமிழகம் முழுவதும் ஸ்டாலின் செய்த சுற்றுப்பயணம் நல்ல பலனைத் தந்திருக்கிறது.
``வீரபாண்டி ஆறுமுகம் போன்ற சிலரும்கூட பல்வேறு காரணங்களால் இப்போது ஸ்டாலினை ஏற்றுச்செல்லும் மனநிலைக்கு வந்துவிட்டனர். ஒருவேளை எதிர்ப்பு இருந்தாலும் ஒரு சொல்லில் கலைஞரால் அடக்கிவிடவும் முடியும். தக்க விதத்தில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படும் பட்சத்தில் வாரிசுகள் இணக்கமாகச் செயல்படுவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. கலைஞருடைய கண்காணிப்பு இல்லாவிட்டால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். காமராஜருக்குப் பிறகும், எம்.ஜி.ஆருக்குப் பிறகும் தமிழகத்தில் காங்கிரஸுக்கும் அ.தி.மு.க.வுக்கும் நேர்ந்ததை வரலாறு திருப்பிச் சொன்னாலும் வியப்பதற்கில்லை'' என்று அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
``ஆட்சியிலும் தேர்தலிலும் ஸ்டாலின் முன்னிறுத்தப்படும்பட்சத்தில் மாறன் சகோதரர்களின் எதிர்ப்புகூட மழுங்கடிக்கப்பட்டு விடக் கூடும். ஏனெனில், அழகிரியிடம் காட்டும் வன்மத்தை இவர்கள் ஸ்டாலினிடம் காட்டுவதில்லை. தேர்தல் என்று வரும்போது தி.மு.க. வேட்பாளர்களைத் தோற்கடிக்க இவர்கள் செய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படும் முயற்சிகள் எல்லாமும்கூட மட்டுப்படலாம்.
``பாட்டாளி மக்கள் கட்சி வெளியேற்றப்பட்ட நிலையில் இடதுசாரிகளும் வெளியேறினால் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகளை மட்டும் வைத்துக் கொண்டுதான் எதிர்வரும் மக்களவைத் தேர்தலை தி.மு.க. எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அ.தி.மு.க. அணி மேலும் வலுப்படும்பட்சத்தில், கட்சிக்குள் நடைபெறும் உள்குத்து அரசியல், தி.மு.க.வுக்குப் பெரும் பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும்'' என்பதும் சுட்டிக்காட்டப்படுகிறது.
வெற்றியோ, தோல்வியோ மக்களவைத் தேர்தலை ஒருவழியாகச் சமாளித்துவிட்டாலும் மாநிலத்தில் மீதியுள்ள ஆட்சிக்காலம்? இந்த இடத்தில்தான் அமைச்சரவையில் காங்கிரஸுக்கு இடம் தரும் முடிவு முக்கியத்துவம் பெறுகிறது.
காங்கிரஸை மட்டுமே நம்பி ஆட்சியைத் தொடர வேண்டிய சூழ்நிலையில், காங்கிரஸையும் ஆட்சியில் பங்கேற்கச் செய்வது மட்டுமே அவர்களின் ஒத்துழைப்பை உறுதி செய்யும். இல்லாவிட்டால், கோஷ்டிகளுக்குப் புகழ்பெற்ற காங்கிரஸில் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி (மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இல்லாவிட்டால் மிகவும் வசதியாகப் போய்விடும்) தி.மு.க. அரசை மிக எளிதாக, மிக விரைவாக ஜெயலலிதா கவிழ்த்துவிடும் வேலைகளில் இறங்குவார். இதற்கான வேலைகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டதாக அ.தி.மு.க. வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
காங்கிரஸ் பங்கேற்புடனான தி.மு.க. ஆட்சி என்றால் தற்போதைய சூழலில் உடனடியாக சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க வேண்டிய அவசியமின்றி, ஸ்டாலின் தலைமையில் மீதியுள்ள ஆண்டுகளை உறுதிப்பட நகர்த்திவிடவும் முடியும். ஸ்டாலின் சிறப்பாகச் செயல்படும்பட்சத்தில், கூட்டணியிலும் மாற்றங்கள் ஏற்பட்டு வலுப்பட்டால், சட்டமன்றத் தேர்தலின்போது வெற்றிக்காக மிகுந்த சிரமப்பட வேண்டியிருக்காது என்றும் கலைஞரும் தி.மு.க. வட்டாரங்களும் கருதுவதாகக் கூறப்படுகிறது.
`நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக கட்சிக்காரராக அரசியலில் தொடர்ந்து இருக்கிறார் ஸ்டாலின். சிறுவயதிலேயே கட்சித் தலைவர்களுக்கு அஞ்சல் அட்டையில் அவர் பொங்கல் வாழ்த்துகளை அனுப்புவார். இளைஞர் தி.மு.க. என்று தொடங்கிப் பல்வேறு நிலைகளைக் கடந்து வந்திருக்கிறார். ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல்காந்தி போல திடீரென வந்தவரல்லர் அவர்' என்றே தி.மு.க. வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
`தலைவர் மகன் என்றாலும் தொடக்க காலத்திலிருந்தே கட்சி தொடர்பான சிந்தனையுடன்தான் ஸ்டாலின் இருந்து வருகிறார். தி.மு.க.வின் கடந்த நாற்பதாண்டு கால வரலாற்றில் அவருக்கும் இடமிருக்கிறது. போராட்டங்களில் எல்லாம் பங்கேற்று வந்திருக்கிறார். சிறைக்கும் சென்றிருக்கிறார்' என்றும் இவர்கள் குறிப்பிடுகின்றனர்.
தந்தைக்கு இணையாக முடியாது என்றாலும் பெரிதாகக் குறைகூற முடியாத அளவுக்கு அவர் சிறந்த நிர்வாகி என்பதில் கருத்து வேறுபாடு இல்லை. சென்னை மாநகரின் மேயராக இருந்த காலத்தில் வெற்றிகரமாகவே செயல்பட்டிருக்கிறார். ஆனால், அந்த வெற்றியையேகூட எவ்வாறு வெளிக்காட்டிப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது அவருக்குத் தெரியாது என்பது பலவீனம்.
மேலும், தனக்கு நெருக்கமான விசுவாசிகளுக்குச் சிக்கல் வரும்போதுகூடத் துணிந்து எதிர்ப்புக் குரல் காட்ட முன்வர மாட்டார். இவருடைய தீவிர ஆதரவாளரான கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனிடமிருந்து நல்வாழ்வுத் துறை பறிக்கப்பட்டபோது இவரிடமிருந்து ஒரு முணுமுணுப்புக்கூட எழவில்லை என்பது சமீபத்திய எடுத்துக்காட்டு. எந்தவொரு விஷயமானாலும், அப்பாவிடம் கேட்க வேண்டுமே, கட்சிக்குக் கெட்ட பெயர் வந்துவிட்டால்..., நான் சொன்னால் நன்றாக இருக்குமா? என்கிற பாணியிலான இவருடைய அணுகுமுறைதான் பெரும் பலவீனங்களாக இருக்கும் என்றும் இவருடைய ஆதரவாளர்களே சுட்டிக்காட்டுகின்றனர்.
``ஸ்டாலின் முதல்வராக்கப்படுவது எப்போதோ நடந்திருக்க வேண்டியது. கலைஞர்தான் மிகவும் தயக்கம் காட்டி வருகிறார். சரியான காரணம் என்னவென்றுதான் தெரியவில்லை. இந்த முப்பெரும் விழாவிலாவது அறிவித்து விடுவார் என்றுதான் நம்புகிறோம்.
வட மாவட்டங்களின் அமைப்புச் செயலராக நீலநாராயணனும், தென் மாவட்டங்களின் அமைப்புச் செயலராக எஸ்.எஸ். தென்னரசுவும் இருந்தனர். தென்னரசுவின் மறைவுக்குப் பிறகு அந்தப் பொறுப்புக்கு யாரும் நியமிக்கப்படவில்லை. அனேகமாக, ஸ்டாலினுக்கு முடிசூட்டுவது பற்றி அறிவிக்கப்படும் விழாவிலேயே தென் மாவட்ட அமைப்புச் செயலராக அழகிரிக்கும் கட்சிப் பொறுப்பு வழங்கப்படலாம்'' என்று தி.மு.க. வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
எல்லாம் உறுதிதான் என்றே கூறப்பட்டாலும்கூட, ஸ்டாலின் முதல்வர் பொறுப்பேற்கக் காலம் கனிந்துவிட்டதா? அழகிரிக்கு கட்சிப் பொறுப்பு அறிவிக்கப்பட்டு விடுமா? காங்கிரஸுக்கு அமைச்சரவையில் பங்களிக்கப்படுமா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் திட்டவட்டமான பதில்களை கலைஞரைத் தவிர வேறு யார் அறிவார்?
ஆனால், தி.மு.க.வில் கேள்வி எழுப்பப்பட்டுக் கொண்டே இருந்தாலும்கூட கேள்விக்குறியாகவே தொடருகிறது இது. கடந்த சில ஆண்டுகளில், குறிப்பாக முதல்வர் கலைஞரின் உடல்நலம் பற்றிய சங்கடங்கள் வெளியே தெரியத் தொடங்கியபோது, ஸ்டாலின் முதல்வராவாரா? என்ற கேள்வி விவாதமானது. ஸ்டாலின் முதல்வராவதை ஆதரிப்பதாக பேராசிரியர் அன்பழகன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பகிரங்கமாகவே அறிவித்தபோதிலும்கூட, பதில்கள் மட்டும் பூடகமாகவே வெளியிடப்பட்டு வந்தன.
இந்தக் கோரிக்கையும் எதிர்பார்ப்பும் கொதிநிலையை எட்ட, நெல்லையில் நடந்த தி.மு.க. மாநாட்டின்போது ஸ்டாலின் முதல்வராக அறிவிக் கப்படுவார் என பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வழக்கமான பதிலுடன் அறிவிப்பு தள்ளிப் போனது. அதைத் தொடர்ந்துதான், இந்த யோசனையை யார் எதிர்ப்பது, ஏன் தள்ளிப் போகிறது, அறிவிப்பதில் என்ன தயக்கம் என்பது போன்ற கேள்விகளும் விவாதங்களும் பெரிதாக அடிபடத் தொடங்கின.
தொடர்ந்து, அடுத்த வாரிசுகளான அழகிரி, கனிமொழி போன்றோர் பற்றிய விவாதங்களும் சூடுபிடிக்கத் தொடங்கின. ஒரு சர்வேயின் பலனால் கட்சியிலிருந்து கட்டங்கட்டப்பட்ட தயாநிதி மாறனுடைய அரசியலும் இந்த சர்ச்சைகளுக்குள்ளே புகுந்து விளையாடத் தொடங்கியது.
அதிகாரத்தைக் குறிவைக்கும் குடும்ப அரசியலில் ஸ்டாலினும் ஒரு காயாகி, அங்கே இங்கே என்று நகர்த்தப்பட்டுக் கொண்டிருக்க, அண்மையில் ஸ்டாலின் மேற்கொண்ட லண்டன் பயணமும், அது தொடர்பான செய்திகளும் சர்ச்சைகளை மேலும் மேலும் வளப்படுத்தின. ஒருகட்டத்தில் ஸ்டாலின் ஓரங்கட்டப்படுகிறார் என்றேகூட கட்சிக்கு உள்ளேயும், வெளியேயும் இருந்த பலரால் கருதப்பட்டது.
வேலூர் மாநகராட்சித் தொடக்க விழாவில் பேசிய கலைஞரோ, `அடுத்த முறை முதல்வராக நான் விரும்பவில்லை. தகுதியும் திறமையும் வாய்ந்தவருக்கு உறுதுணையாக இருப்பேன்' என்றார். இத்தனைக்கும் மேடையில் உடனிருந்த ஸ்டாலின் பற்றி அவர் எதுவும் குறிப்பிடவில்லை. மதுரையில் டி.எம். சௌந்தரராஜனுக்கு நடந்த பாராட்டு விழாவில் அழகிரியைப் பாராட்டி அவர் பேசிய பேச்சும், பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் சிலை திறப்புக்கேகூட ஸ்டாலின் வராததும் சேர, அவருடைய ஆதரவாளர்களிடையே தர்மசங்கட அலைகளை ஏற்படுத்தியது.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு சென்னையில் அண்மையில் ஒரு மேம்பாலத் திறப்பு விழாவில் உள்ளாட்சித் துறை அமைச்சரான ஸ்டாலினையும் வைத்துக்கொண்டு பேசியபோதுதான், ஸ்டாலின் ஊக்கை விழுங்கிய கதையைக் கூறி, `அந்த ஊக்கத்தால் அவர் மேயராகி, அமைச்சராகி, இன்னும் என்னென்னவோ ஆகப் போகிறார்' என்று குறிப்பிட்டு மீண்டும் ஒரு நம்பிக்கை சஸ்பென்ஸ் வைத்திருக்கிறார் கலைஞர்.
ஸ்டாலின் முதல்வராவாரா?
இந்த விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க கலைஞர் முடிவு செய்துவிட்டதாகவே நம்பத் தகுந்த வட்டாரங்களின் லேட்டஸ்ட் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்டாலினை முதல்வராக அறிவிப்பதுடன், காங்கிரஸின் கோரிக்கைக்கு செவிமடுத்து அவர்களை அமைச்சரவையில் சேர்த்துக் கொள்வது பற்றிய அறிவிப்பையும் ஒருசேர செப்டம்பரில் கலைஞர் வெளியிடுவார் என இந்த வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன. அனேகமாக, செப்டம்பரில் அண்ணா பிறந்த நாளான 15-ம் தேதி, உள்கட்சித் தேர்தல் முடிந்து நடைபெறவுள்ள முப்பெரும் விழாவில் இதுபற்றிய முறைப்படியான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக கட்சியிலும் குடும்பத்திலும் ஒரு `காம்ப்ரமைஸ் ஃபார்முலா' உருவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த சில நாள்களாக ஸ்டாலின் மீண்டும் உற்சாகமாகக் காணப்படுவதற்கு இந்தப் புதிய முடிவுதான் காரணம் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.
இந்த முடிவை நோக்கி கலைஞர் சென்றடையப் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.
முதலாவதாக, உள்கட்சி தாண்டி அரசியல் கட்சிகள் மட்டுமின்றி சாதாரண மக்கள் மத்தியிலும் விவாதிக்கப்படும் `யார் அடுத்த வாரிசு?' என்பது பற்றிய அநாவசியமான சர்ச்சை. இதையொட்டியே பேசப்படும் அவருடைய உடல்நிலை தொடர்பான சங்கடங்கள்.
இவையெல்லாம் இப்படியே தொடர்ந்தால் காலப்போக்கில் கட்சியைப் பலவீனப்படுத்திவிடக் கூடும் என்ற கருத்து வலுப்பட்டு வருகிறது.
``கலைஞர் கண் முன்னாலேயே ஸ்டாலின் முதல்வராக அறிவிக்கப்பட்டால் பெரிய அளவில் எதிர்ப்பு எதுவும் இருக்காது. தென் மாவட்டங்களையும் சேர்த்தால்கூட பெரும்பாலான மாவட்டச் செயலர்கள் ஸ்டாலின் வருவதை எவ்வித முணுமுணுப்புமின்றி எளிதில் ஏற்றுக்கொள்வார்கள். இந்த விஷயத்தில், சட்டமன்றத் தேர்தலுக்கு முன் தமிழகம் முழுவதும் ஸ்டாலின் செய்த சுற்றுப்பயணம் நல்ல பலனைத் தந்திருக்கிறது.
``வீரபாண்டி ஆறுமுகம் போன்ற சிலரும்கூட பல்வேறு காரணங்களால் இப்போது ஸ்டாலினை ஏற்றுச்செல்லும் மனநிலைக்கு வந்துவிட்டனர். ஒருவேளை எதிர்ப்பு இருந்தாலும் ஒரு சொல்லில் கலைஞரால் அடக்கிவிடவும் முடியும். தக்க விதத்தில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படும் பட்சத்தில் வாரிசுகள் இணக்கமாகச் செயல்படுவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. கலைஞருடைய கண்காணிப்பு இல்லாவிட்டால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். காமராஜருக்குப் பிறகும், எம்.ஜி.ஆருக்குப் பிறகும் தமிழகத்தில் காங்கிரஸுக்கும் அ.தி.மு.க.வுக்கும் நேர்ந்ததை வரலாறு திருப்பிச் சொன்னாலும் வியப்பதற்கில்லை'' என்று அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
``ஆட்சியிலும் தேர்தலிலும் ஸ்டாலின் முன்னிறுத்தப்படும்பட்சத்தில் மாறன் சகோதரர்களின் எதிர்ப்புகூட மழுங்கடிக்கப்பட்டு விடக் கூடும். ஏனெனில், அழகிரியிடம் காட்டும் வன்மத்தை இவர்கள் ஸ்டாலினிடம் காட்டுவதில்லை. தேர்தல் என்று வரும்போது தி.மு.க. வேட்பாளர்களைத் தோற்கடிக்க இவர்கள் செய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படும் முயற்சிகள் எல்லாமும்கூட மட்டுப்படலாம்.
``பாட்டாளி மக்கள் கட்சி வெளியேற்றப்பட்ட நிலையில் இடதுசாரிகளும் வெளியேறினால் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகளை மட்டும் வைத்துக் கொண்டுதான் எதிர்வரும் மக்களவைத் தேர்தலை தி.மு.க. எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அ.தி.மு.க. அணி மேலும் வலுப்படும்பட்சத்தில், கட்சிக்குள் நடைபெறும் உள்குத்து அரசியல், தி.மு.க.வுக்குப் பெரும் பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும்'' என்பதும் சுட்டிக்காட்டப்படுகிறது.
வெற்றியோ, தோல்வியோ மக்களவைத் தேர்தலை ஒருவழியாகச் சமாளித்துவிட்டாலும் மாநிலத்தில் மீதியுள்ள ஆட்சிக்காலம்? இந்த இடத்தில்தான் அமைச்சரவையில் காங்கிரஸுக்கு இடம் தரும் முடிவு முக்கியத்துவம் பெறுகிறது.
காங்கிரஸை மட்டுமே நம்பி ஆட்சியைத் தொடர வேண்டிய சூழ்நிலையில், காங்கிரஸையும் ஆட்சியில் பங்கேற்கச் செய்வது மட்டுமே அவர்களின் ஒத்துழைப்பை உறுதி செய்யும். இல்லாவிட்டால், கோஷ்டிகளுக்குப் புகழ்பெற்ற காங்கிரஸில் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி (மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இல்லாவிட்டால் மிகவும் வசதியாகப் போய்விடும்) தி.மு.க. அரசை மிக எளிதாக, மிக விரைவாக ஜெயலலிதா கவிழ்த்துவிடும் வேலைகளில் இறங்குவார். இதற்கான வேலைகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டதாக அ.தி.மு.க. வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
காங்கிரஸ் பங்கேற்புடனான தி.மு.க. ஆட்சி என்றால் தற்போதைய சூழலில் உடனடியாக சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க வேண்டிய அவசியமின்றி, ஸ்டாலின் தலைமையில் மீதியுள்ள ஆண்டுகளை உறுதிப்பட நகர்த்திவிடவும் முடியும். ஸ்டாலின் சிறப்பாகச் செயல்படும்பட்சத்தில், கூட்டணியிலும் மாற்றங்கள் ஏற்பட்டு வலுப்பட்டால், சட்டமன்றத் தேர்தலின்போது வெற்றிக்காக மிகுந்த சிரமப்பட வேண்டியிருக்காது என்றும் கலைஞரும் தி.மு.க. வட்டாரங்களும் கருதுவதாகக் கூறப்படுகிறது.
`நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக கட்சிக்காரராக அரசியலில் தொடர்ந்து இருக்கிறார் ஸ்டாலின். சிறுவயதிலேயே கட்சித் தலைவர்களுக்கு அஞ்சல் அட்டையில் அவர் பொங்கல் வாழ்த்துகளை அனுப்புவார். இளைஞர் தி.மு.க. என்று தொடங்கிப் பல்வேறு நிலைகளைக் கடந்து வந்திருக்கிறார். ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல்காந்தி போல திடீரென வந்தவரல்லர் அவர்' என்றே தி.மு.க. வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
`தலைவர் மகன் என்றாலும் தொடக்க காலத்திலிருந்தே கட்சி தொடர்பான சிந்தனையுடன்தான் ஸ்டாலின் இருந்து வருகிறார். தி.மு.க.வின் கடந்த நாற்பதாண்டு கால வரலாற்றில் அவருக்கும் இடமிருக்கிறது. போராட்டங்களில் எல்லாம் பங்கேற்று வந்திருக்கிறார். சிறைக்கும் சென்றிருக்கிறார்' என்றும் இவர்கள் குறிப்பிடுகின்றனர்.
தந்தைக்கு இணையாக முடியாது என்றாலும் பெரிதாகக் குறைகூற முடியாத அளவுக்கு அவர் சிறந்த நிர்வாகி என்பதில் கருத்து வேறுபாடு இல்லை. சென்னை மாநகரின் மேயராக இருந்த காலத்தில் வெற்றிகரமாகவே செயல்பட்டிருக்கிறார். ஆனால், அந்த வெற்றியையேகூட எவ்வாறு வெளிக்காட்டிப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது அவருக்குத் தெரியாது என்பது பலவீனம்.
மேலும், தனக்கு நெருக்கமான விசுவாசிகளுக்குச் சிக்கல் வரும்போதுகூடத் துணிந்து எதிர்ப்புக் குரல் காட்ட முன்வர மாட்டார். இவருடைய தீவிர ஆதரவாளரான கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனிடமிருந்து நல்வாழ்வுத் துறை பறிக்கப்பட்டபோது இவரிடமிருந்து ஒரு முணுமுணுப்புக்கூட எழவில்லை என்பது சமீபத்திய எடுத்துக்காட்டு. எந்தவொரு விஷயமானாலும், அப்பாவிடம் கேட்க வேண்டுமே, கட்சிக்குக் கெட்ட பெயர் வந்துவிட்டால்..., நான் சொன்னால் நன்றாக இருக்குமா? என்கிற பாணியிலான இவருடைய அணுகுமுறைதான் பெரும் பலவீனங்களாக இருக்கும் என்றும் இவருடைய ஆதரவாளர்களே சுட்டிக்காட்டுகின்றனர்.
``ஸ்டாலின் முதல்வராக்கப்படுவது எப்போதோ நடந்திருக்க வேண்டியது. கலைஞர்தான் மிகவும் தயக்கம் காட்டி வருகிறார். சரியான காரணம் என்னவென்றுதான் தெரியவில்லை. இந்த முப்பெரும் விழாவிலாவது அறிவித்து விடுவார் என்றுதான் நம்புகிறோம்.
வட மாவட்டங்களின் அமைப்புச் செயலராக நீலநாராயணனும், தென் மாவட்டங்களின் அமைப்புச் செயலராக எஸ்.எஸ். தென்னரசுவும் இருந்தனர். தென்னரசுவின் மறைவுக்குப் பிறகு அந்தப் பொறுப்புக்கு யாரும் நியமிக்கப்படவில்லை. அனேகமாக, ஸ்டாலினுக்கு முடிசூட்டுவது பற்றி அறிவிக்கப்படும் விழாவிலேயே தென் மாவட்ட அமைப்புச் செயலராக அழகிரிக்கும் கட்சிப் பொறுப்பு வழங்கப்படலாம்'' என்று தி.மு.க. வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
எல்லாம் உறுதிதான் என்றே கூறப்பட்டாலும்கூட, ஸ்டாலின் முதல்வர் பொறுப்பேற்கக் காலம் கனிந்துவிட்டதா? அழகிரிக்கு கட்சிப் பொறுப்பு அறிவிக்கப்பட்டு விடுமா? காங்கிரஸுக்கு அமைச்சரவையில் பங்களிக்கப்படுமா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் திட்டவட்டமான பதில்களை கலைஞரைத் தவிர வேறு யார் அறிவார்?
Wednesday, August 20, 2008
நகையெல்லாம் கவரிங்
வளர்ப்பு மகனுக்கு இப்படியொரு திருமணமா?' என்று தமிழகமே வாய்பிளந்து பார்த்தது... பி.பி.சி. உட்பட உலகத் தொலைக்காட்சி களே அதிசயித்து அந்தத் திருமணத்தை நேரடி ஒளி பரப்பு செய்தன... அது மட்டுமா?
`பார்த்தாயா உடன்பிறப்பே... இந்தப் பகட்டையும் படாடோ பத்தையும்... ஊரெல்லாம் மின் விளக்குத் தோரணம்... உடம்பெல்லாம் தங்கம் வைரம்... ஒரு திருமணத்திற்கு செலவு நூறு கோடி!' என எதிர்க்கட்சிகள் எல்லாம் எரிமலையாய்க் குமுறின...
விளைவு! ஆட்சிகள் மாறின, காட்சிகள் மாறியது! ஆர்ப்பாட்டமாக திருமணம் செய்தவர்களின் வீடுகளில் சி.பி.ஐ.யின் அதிரடி சோதனை... பறிமுதல் செய்யப்பட்டவை என்று, 27 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகளை பத்திரிகைகள் பட்டியல் போட்டதோடு, தொலைக்காட்சிகளும் போயஸ் தோட்டத்து சுவர்களை ஊடுருவி சுனாமியாய் சுழன்றடித்தது.
சோதனையின்போது 381 வளையல்கள், 172 கம்மல்கள், 104 மோதிரங்கள் என வியப்பு விரிந்து கொண்டே போனது...
அரசியலே சுத்தப்படுத்தப்பட்டுவிட்டதாக மக்களும் அதிசயப்பட்டனர். காலம் மாற மாற திடீரென காட்சிகளும் மாறிவிட்டன. ஆண்டுக் கணக்கில் நீண்ட அந்த வழக்கில் `பறிமுதல் செய்யப்பட்டதாகச் சொல்லப்பட்ட நகைகளில் விலையுயர்ந்த இரண்டு ஒட்டியானங்கள் பறிமுதல் செய்யப்பட்ட பொழுதே மிஸ்ஸிங்' என்றும்; `நீதிமன்ற ஆவணங்களில் அவை ‘not available’என்றும் குறிப்பிடப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டது. சி.பி.ஐ. அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட அந்த ஒட்டியானங்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவில்லையென்றும், அந்த ஒட்டியானங்களை கடைசியாக இரு வி.ஐ.பி.க்கள் பார்வையிட்டபின் வேறு யார் கண்ணிலும் அவை படவில்லை என்றும்' பலவிதமான பரபரப்புக் காட்சிகள் அரங்கேறின.
ஒரு வழியாக இந்த பரபரப்புகள் ஓய்ந்து, அமைதியான சூழ் நிலையில் பெங்களூரு தனி நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு சுமுகமாக நடந்து கொண்டிருக்கும் பொழுது மீண்டும் ஓர் ஆழிப் பேரலை... அதை ஏற்படுத்தியது நீதிமன்றத்தில் ஜெயலலிதா, சசிகலாவின் வாக்குமூலங்களாக தாக்கல் செய்யப்பட்ட ஓர் ஆவணம்!
சுதாகரன் திருமணத்தின் போது ஜெயலலிதாவும், சசிகலாவும் அணிந்திருந்த நகைகள் எல்லாம் கவரிங் எனவும், அந்த கவரிங் நகைகள் மைசூரில் இருந்து திருமணத்திற்காக வரவழைக்கப்பட்டன எனவும், அதை மைசூரில் இருந்து ஒரு மேக்கப்மேனே எடுத்து வந்ததாகவும், திருமணம் முடிந்தபின் கையோடு அவற்றை யெல்லாம் அவர் திரும்ப எடுத்துச் சென்று விட்டதாக ஜெயலலிதாவும், சசிகலாவும் சொன்னதாகவும் தாக்கல் செய்யப்பட்டிருப்பதுதான் அந்த வாக்குமூலமாம்!
வீடு நிறைய பித்தளையே வைத்திருந்தாலும் ஒரு குண்டுமணித் தங்கம் திருடு போய்விட்டதென்றால் இருந்ததெல்லாம் தங்கம் என்று சொல்லும் இந்தக் காலத்தில் காணாமல் போனது மட்டுமல்ல நான் வைத்திருந்ததெல்லாம் பித்தளை என்பதுபோல் ஒருவர் சொல்கிறார் என்றால் அதன் சூட்சுமம் தெரியாமல் தலைசுற்றியது.
இதை நமக்குப் புரிய வைக்க முடியும் என்றால் அது ஒருவரால்தான் சாத்தியம்... அதனால் அவரிடம் கேட்கலாமென்று, ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணை அதிகாரி நல்லம நாயுடுவைத் தொடர்பு கொண்டோம்...
வழக்கு விசாரணை நடந்து கொண்டிருப்பதால் கருத்து எதுவும் கூற மறுத்துவிட்டார்.
சம்பந்தப்பட்டவர் பேசமாட்டார்... சட்டம் தெரிந்த ஒருவரிடம் கேட்கலாம் என சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கச் செயலாளரும் வழக்கறிஞருமான மோகனகிருஷ்ணனிடம் கேட்டோம்...
``பொதுவாகவே எந்தவொரு வழக்கிலும் குற்றவாளிகளிடம் பெறப் பட்டதாக விசாரணை அதிகாரிகளால் நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்படும் வாக்கு மூலங்கள் குற்றம்சாட்டப் பட்டவர்களால் விசாரணையின் போது மறுக்கப்படும். விசாரணை அதிகாரி தாக்கல் செய்யும் அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டவரின் கையொப்பம் அவசியமில்லை.... ஆனால் ஜெயலலிதா, சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் அவர்களே தங்கள் நகையெல்லாம் கவரிங் நகை என வாக்குமூலம் அளிக்கின்றனர்.
இது, `காணாமல் போன ஒட்டியானங்களைப் பற்றியும் நாங்கள் கவலைப்படத் தயாரில்லை. கைப்பற்றப்பட்ட மீதி நகையும் கவரிங் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் எங்களுக்கு நல்லது' என நினைப்பதாகத்தான் தோன்றுகிறது.
எதுவாக இருந்தாலும் அரசுத் தரப்பின் அடுத்த நடவடிக்கையைப் பொறுத்துத்தான் வழக்கின் போக்கு தெரியும்... அரசுத் தரப்பும் இரண்டு விதமாக யோசிக்கலாம்...
`ஜெயலலிதாவும் சசிகலாவும் சொல்கிற மாதிரி, இல்லை. தங்கம்தான்!'னு அவர்களின் வாக்குமூலத்தை மறுத் தால் காணாமல் போன ஒட்டியானப் பிரச்னை மீண்டும் வரலாம்.
ஒருவேளை அவர்கள் `கவரிங்'னு சொல்வதை அப்படியே கண்டுக்கொள்ளாமல் விட்டு விட்டால் ஒட்டியானமும் கவரிங்கோடு கவரிங்காகச் சேர்ந்து பிரச்னையே இல்லாமலும் போகலாம்...
இந்த இரண்டில் எதுவேணும்னாலும் நடக்கலாம்.''
இப்படி பிரச்னையின் நோக்கம் மட்டுமல்ல போக்கும் எப்படி இருக்கும் என்று தெளிவாகச் சொல்லி முடித்தார் மோகன கிருஷ்ணன்....
வடிவேலு பாணியில் நமக்குத் தோன்றியதெல்லாம்... ஆளாளுக்கு இப்படி திருப்பித் திருப்பி விட்டர்றாங்களே... என்னதான்யா நடக்குது?.
`பார்த்தாயா உடன்பிறப்பே... இந்தப் பகட்டையும் படாடோ பத்தையும்... ஊரெல்லாம் மின் விளக்குத் தோரணம்... உடம்பெல்லாம் தங்கம் வைரம்... ஒரு திருமணத்திற்கு செலவு நூறு கோடி!' என எதிர்க்கட்சிகள் எல்லாம் எரிமலையாய்க் குமுறின...
விளைவு! ஆட்சிகள் மாறின, காட்சிகள் மாறியது! ஆர்ப்பாட்டமாக திருமணம் செய்தவர்களின் வீடுகளில் சி.பி.ஐ.யின் அதிரடி சோதனை... பறிமுதல் செய்யப்பட்டவை என்று, 27 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகளை பத்திரிகைகள் பட்டியல் போட்டதோடு, தொலைக்காட்சிகளும் போயஸ் தோட்டத்து சுவர்களை ஊடுருவி சுனாமியாய் சுழன்றடித்தது.
சோதனையின்போது 381 வளையல்கள், 172 கம்மல்கள், 104 மோதிரங்கள் என வியப்பு விரிந்து கொண்டே போனது...
அரசியலே சுத்தப்படுத்தப்பட்டுவிட்டதாக மக்களும் அதிசயப்பட்டனர். காலம் மாற மாற திடீரென காட்சிகளும் மாறிவிட்டன. ஆண்டுக் கணக்கில் நீண்ட அந்த வழக்கில் `பறிமுதல் செய்யப்பட்டதாகச் சொல்லப்பட்ட நகைகளில் விலையுயர்ந்த இரண்டு ஒட்டியானங்கள் பறிமுதல் செய்யப்பட்ட பொழுதே மிஸ்ஸிங்' என்றும்; `நீதிமன்ற ஆவணங்களில் அவை ‘not available’என்றும் குறிப்பிடப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டது. சி.பி.ஐ. அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட அந்த ஒட்டியானங்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவில்லையென்றும், அந்த ஒட்டியானங்களை கடைசியாக இரு வி.ஐ.பி.க்கள் பார்வையிட்டபின் வேறு யார் கண்ணிலும் அவை படவில்லை என்றும்' பலவிதமான பரபரப்புக் காட்சிகள் அரங்கேறின.
ஒரு வழியாக இந்த பரபரப்புகள் ஓய்ந்து, அமைதியான சூழ் நிலையில் பெங்களூரு தனி நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு சுமுகமாக நடந்து கொண்டிருக்கும் பொழுது மீண்டும் ஓர் ஆழிப் பேரலை... அதை ஏற்படுத்தியது நீதிமன்றத்தில் ஜெயலலிதா, சசிகலாவின் வாக்குமூலங்களாக தாக்கல் செய்யப்பட்ட ஓர் ஆவணம்!
சுதாகரன் திருமணத்தின் போது ஜெயலலிதாவும், சசிகலாவும் அணிந்திருந்த நகைகள் எல்லாம் கவரிங் எனவும், அந்த கவரிங் நகைகள் மைசூரில் இருந்து திருமணத்திற்காக வரவழைக்கப்பட்டன எனவும், அதை மைசூரில் இருந்து ஒரு மேக்கப்மேனே எடுத்து வந்ததாகவும், திருமணம் முடிந்தபின் கையோடு அவற்றை யெல்லாம் அவர் திரும்ப எடுத்துச் சென்று விட்டதாக ஜெயலலிதாவும், சசிகலாவும் சொன்னதாகவும் தாக்கல் செய்யப்பட்டிருப்பதுதான் அந்த வாக்குமூலமாம்!
வீடு நிறைய பித்தளையே வைத்திருந்தாலும் ஒரு குண்டுமணித் தங்கம் திருடு போய்விட்டதென்றால் இருந்ததெல்லாம் தங்கம் என்று சொல்லும் இந்தக் காலத்தில் காணாமல் போனது மட்டுமல்ல நான் வைத்திருந்ததெல்லாம் பித்தளை என்பதுபோல் ஒருவர் சொல்கிறார் என்றால் அதன் சூட்சுமம் தெரியாமல் தலைசுற்றியது.
இதை நமக்குப் புரிய வைக்க முடியும் என்றால் அது ஒருவரால்தான் சாத்தியம்... அதனால் அவரிடம் கேட்கலாமென்று, ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணை அதிகாரி நல்லம நாயுடுவைத் தொடர்பு கொண்டோம்...
வழக்கு விசாரணை நடந்து கொண்டிருப்பதால் கருத்து எதுவும் கூற மறுத்துவிட்டார்.
சம்பந்தப்பட்டவர் பேசமாட்டார்... சட்டம் தெரிந்த ஒருவரிடம் கேட்கலாம் என சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கச் செயலாளரும் வழக்கறிஞருமான மோகனகிருஷ்ணனிடம் கேட்டோம்...
``பொதுவாகவே எந்தவொரு வழக்கிலும் குற்றவாளிகளிடம் பெறப் பட்டதாக விசாரணை அதிகாரிகளால் நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்படும் வாக்கு மூலங்கள் குற்றம்சாட்டப் பட்டவர்களால் விசாரணையின் போது மறுக்கப்படும். விசாரணை அதிகாரி தாக்கல் செய்யும் அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டவரின் கையொப்பம் அவசியமில்லை.... ஆனால் ஜெயலலிதா, சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் அவர்களே தங்கள் நகையெல்லாம் கவரிங் நகை என வாக்குமூலம் அளிக்கின்றனர்.
இது, `காணாமல் போன ஒட்டியானங்களைப் பற்றியும் நாங்கள் கவலைப்படத் தயாரில்லை. கைப்பற்றப்பட்ட மீதி நகையும் கவரிங் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் எங்களுக்கு நல்லது' என நினைப்பதாகத்தான் தோன்றுகிறது.
எதுவாக இருந்தாலும் அரசுத் தரப்பின் அடுத்த நடவடிக்கையைப் பொறுத்துத்தான் வழக்கின் போக்கு தெரியும்... அரசுத் தரப்பும் இரண்டு விதமாக யோசிக்கலாம்...
`ஜெயலலிதாவும் சசிகலாவும் சொல்கிற மாதிரி, இல்லை. தங்கம்தான்!'னு அவர்களின் வாக்குமூலத்தை மறுத் தால் காணாமல் போன ஒட்டியானப் பிரச்னை மீண்டும் வரலாம்.
ஒருவேளை அவர்கள் `கவரிங்'னு சொல்வதை அப்படியே கண்டுக்கொள்ளாமல் விட்டு விட்டால் ஒட்டியானமும் கவரிங்கோடு கவரிங்காகச் சேர்ந்து பிரச்னையே இல்லாமலும் போகலாம்...
இந்த இரண்டில் எதுவேணும்னாலும் நடக்கலாம்.''
இப்படி பிரச்னையின் நோக்கம் மட்டுமல்ல போக்கும் எப்படி இருக்கும் என்று தெளிவாகச் சொல்லி முடித்தார் மோகன கிருஷ்ணன்....
வடிவேலு பாணியில் நமக்குத் தோன்றியதெல்லாம்... ஆளாளுக்கு இப்படி திருப்பித் திருப்பி விட்டர்றாங்களே... என்னதான்யா நடக்குது?.
மதன் காமடிகளில் உச்சம் பதிவில் இல்லை
எடுக்கப்பட்டு விட்டதா?ஏன்? என பரிசல்காரனிடமிருந்து
ஒரு கேள்வி.,
இந்த கேள்வி வராவிட்டால் இந்த பதிவு போட வேண்டிய அவசியம் இருக்காது.
சில அனானிகளின் அநாகரிக பின்னூட்டம்..உண்மையான சில நண்பர்களிடமிருந்து
இது வேண்டாமே...ஓவர்..என அறிவுறுத்தல்கள் அந்த பதிவை எடுத்துவிட வேண்டிய
நிர்பந்தத்தை ஏற்படுத்தி விட்டது.பின்னூட்டம் இட்ட ச்சின்னப்பையன்,செந்தழல் ரவி
பரிசல்காரன் அனைவருக்கும் நன்றி.
பெரிய தலைவர்களையெல்லாம் கண்டபடி கேலி செய்து கார்ட்டூன் போட்ட மதனை
ரசித்தவர்கள்..அவரை நையாண்டி செய்வதை ஏன் ரசிக்க மறுக்கிறார்கள்?
ஒரு கேள்வி.,
இந்த கேள்வி வராவிட்டால் இந்த பதிவு போட வேண்டிய அவசியம் இருக்காது.
சில அனானிகளின் அநாகரிக பின்னூட்டம்..உண்மையான சில நண்பர்களிடமிருந்து
இது வேண்டாமே...ஓவர்..என அறிவுறுத்தல்கள் அந்த பதிவை எடுத்துவிட வேண்டிய
நிர்பந்தத்தை ஏற்படுத்தி விட்டது.பின்னூட்டம் இட்ட ச்சின்னப்பையன்,செந்தழல் ரவி
பரிசல்காரன் அனைவருக்கும் நன்றி.
பெரிய தலைவர்களையெல்லாம் கண்டபடி கேலி செய்து கார்ட்டூன் போட்ட மதனை
ரசித்தவர்கள்..அவரை நையாண்டி செய்வதை ஏன் ரசிக்க மறுக்கிறார்கள்?
தமிழச்சியிடம் பெரியாரின் ஆணாதிக்கம்
பெண்ணுரிமைப்பற்றி பெரியாரை தவிர எந்த தலைவரும் அதிகமாக பேசியதில்லை.ஆனால் பெரியார் படம் பார்த்தபோது ஒரு காட்சி மனதை உறுத்தியது.ஓரு ஏழை,தாழ்ந்த ஜாதி வீட்டில் அவரும் மணியம்மையும் சாப்பிடப்போகிறார்கள்.
அங்கே இருந்த நாற்றம் மணியம்மையால் சாப்பிட முடியவில்லை.தன் இலையின் அடியில் சாப்பாட்டை மறைத்து,சாப்பிட்டது போல பெயர் பண்ணுகிறார்.இது கண்டு பெரியார், அனைவர் எதிரிலும் எச்சிக்கையால் 'பளார்'என அறைகிறார்..
அவர் இப்படி செய்யலாமா?இதுவும் ஆணாதிக்கம் தானே?!
அங்கே இருந்த நாற்றம் மணியம்மையால் சாப்பிட முடியவில்லை.தன் இலையின் அடியில் சாப்பாட்டை மறைத்து,சாப்பிட்டது போல பெயர் பண்ணுகிறார்.இது கண்டு பெரியார், அனைவர் எதிரிலும் எச்சிக்கையால் 'பளார்'என அறைகிறார்..
அவர் இப்படி செய்யலாமா?இதுவும் ஆணாதிக்கம் தானே?!
Tuesday, August 19, 2008
என்றும் நீ என்னோடுதான்
மனிதா..உன்மேல் எனக்குள்ள பாசம்
சற்றேனும் அறிவாயோ?
பாலும், பழமும், தேனுமென
குழந்தை பருவத்தில்
கொற்றாவனாய் வளர்த்திட்டாய் எனை
மகிழ்ச்சிக் கொண்டேன்!
வாலிப வயதிலோ..விரைவு உணவென
கோக்,பீட்சா,பர்கர் என தள்ளி
குப்பைக்கூடையாகினாய்..
உயிர் குடிக்கும் மதுவை
உள்ளே செலுத்தியவாறு
கல்லைத் தின்னாலும்
செரிக்கும் வயதென
செப்பிக் கொண்டாய் ஆறுதலாய்..
எனக்கும் மூப்புண்டு அறிவாயா?
அத்தனையும் தாங்கும்
அடித்தளம் முற்றும் அழிந்தது
மரண அழைப்பு வந்தது
புற்றென பெயரில்..
சென்றிடுவோம் ..வந்திடு
என்றும் நீ என்னோடுதான்.
சற்றேனும் அறிவாயோ?
பாலும், பழமும், தேனுமென
குழந்தை பருவத்தில்
கொற்றாவனாய் வளர்த்திட்டாய் எனை
மகிழ்ச்சிக் கொண்டேன்!
வாலிப வயதிலோ..விரைவு உணவென
கோக்,பீட்சா,பர்கர் என தள்ளி
குப்பைக்கூடையாகினாய்..
உயிர் குடிக்கும் மதுவை
உள்ளே செலுத்தியவாறு
கல்லைத் தின்னாலும்
செரிக்கும் வயதென
செப்பிக் கொண்டாய் ஆறுதலாய்..
எனக்கும் மூப்புண்டு அறிவாயா?
அத்தனையும் தாங்கும்
அடித்தளம் முற்றும் அழிந்தது
மரண அழைப்பு வந்தது
புற்றென பெயரில்..
சென்றிடுவோம் ..வந்திடு
என்றும் நீ என்னோடுதான்.
Subscribe to:
Posts (Atom)