Monday, May 4, 2009

குட் டச் எது...பேட் டச் எது...10ஆம் தேதி தெரியும்

ஒரு குழந்தை அம்மாவிடம்...'அம்மா நான் எப்படி பிறந்தேன்'னு கேட்டுதாம்..அதற்கு அம்மா..சாமி கொண்டுவந்து கொடுத்தார்னு சொன்னாளாம்.அம்மாவின் பதிலில் திருப்தி அடையா குழந்தை அப்பாவிடம் போய் கேட்டதாம்..அப்பா சொன்னாராம்..'குரங்கிலிருந்து மனுஷன் பிறக்கிறான்'.

திரும்ப குழந்தை அம்மா கிட்ட வந்து..அப்பா சொன்னதை சொன்னதும்..அம்மா சொன்னாளாம்..'எங்க சைட்ல எப்படி வந்தாங்களோ..அதை நான் சொன்னேன்..அப்பா அவர் சைட்ல வந்ததை சொல்றார்'என்று.

கொஞ்சம் சீரியஸ் ஆவோம்..தினசரி பத்திரிகைகளில்..சின்னஞ்சிறுசு குழந்தைகள்..கயவர்களால்..காமுகர்களால்..சீரழிக்கப் படுவதை படிக்கிறோம்..இவர்கள் மனிதர்களா? என்று..இவர்கள் மீது காரி துப்பினாலும்...நமக்கென ஒரு கடமை இருக்கிறது.

நம் குழந்தைகளுக்கு..குட் டச் என்பது எப்படி இருக்கும்...கெட்ட எண்ண தொடுதல் எப்படி என சொல்லிக் கொடுக்க வேண்டும்.

இது சம்பந்தமாக ஒரு கலந்துரையாடல்..10ஆம் தேதி..கிழக்கு பதிப்பக மாடியில் (எல்டாம்ஸ் சாலை..மியூசிக் வேர்ல்ட் எதிரில்) 4.30 மணி அளவில் நடைபெற இருக்கிறது.டாகடர்.ருத்ரன், டாக்டர் ஷாலினி ஆகியோரிடம்..உங்கள் சந்தேகங்களை இவ் விஷயமாக கேட்டு தெளிவு பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு கிழ் கண்ட பதிவர்களை தொடர்பு கொள்ளவும்

லக்கிலுக்...9841354308
நர்சிம்...9940666868
அதிஷா..9884881824

பதிவர்களின்...இந்த உருப்படியான செயலில் பங்கு கொண்டு பயனடைவீராக.

7 comments:

Unknown said...

நல்ல பதிவு.. :) பகிர்வுக்கு நன்றி.. :))

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஸ்ரீமதி

லக்கிலுக் said...

மே 10 அன்று சந்திப்போம் :-)

SK said...

பகிர்வுக்கு நன்றி அய்யா

முரளிகண்ணன் said...

ஆஜர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
லக்கி
SK
முரளி

மணிகண்டன் said...

yenga poiteenga ?