Wednesday, May 13, 2009

தேர்தல்ல ஜெயிச்சா இவங்க எங்கே கிளம்புவாங்க...???

ஜெ- மண்வெட்டி எடுத்துக்கிட்டு இலங்கையிலிருந்து தமிழ் ஈழம் தனியே வெட்ட கிளம்புவாங்க..
(ஆமாம்..சேது சமுத்திர திட்டம் வருமாங்க)

கலைஞர்- சோனியா..அன்னையை..சுத்த ப்ளாட்டினமே..தியாகத்தில் எவரெஸ்டே என அறிக்கை விட்டுக்கொண்டிருப்பார்
(ஆமாம்..இலங்கை தமிழருக்காக 3 மணி நேரம் உண்ணாவிரதம் எப்போது)

ராமதாஸ்- அடுத்து தி.மு.க., கூட்டணிக்கு ..அம்மாமீது..என்னென்ன புகார் சொல்லலாம் என எண்ணிப்பார்த்துக் கொண்டிருப்பார்.
(அப்படின்னா..அன்புமணிக்கு அம்ம கிட்ட கேட்ட ராஜ்யசபா இடம் என்னவாச்சு?)

வைகோ-இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் பேசியதாக கைதாகி இருப்பார்.
(நாஞ்சில் சம்பத் கைதானா யார் வாதாடுவாங்க )

விஜய்காந்த்-அவருக்கே ஜெயிச்சதை நம்பமுடியாது.ஆனால் அதைச் சொன்னால் கலைஞர் காப்பியடித்து விடுவார் என்பார்.
(அண்ணியும்..மச்சானும் தில்லி பயணம்..விஜய்காந்தை பிரதமராக்கவா? பண்ருட்டி நிலமை?)

கம்யூனிஸ்ட்-மத்தியில் ஆட்சியை வெளியில் இருந்து ஆதரிப்பார்கள்
(123 மறந்து..எண்கள் 4 லிருந்து ஆரம்பிக்கிறது என்பார்களா)

அத்வானி-ராமர் கோவில் திட்டத்தை அடுத்த தேர்தல் வரை ஒத்திவைப்பார்.
(ரத யாத்திரை? போட்டியாக வரும் மோடி?)

மன்மோகன் சிங்-ஜிம் மிற்கு போய் உடற்பயிற்சி செய்வார்..அத்வானி வீக்கான பிரதமர் என்று சொல்லக்கூடாதே என்பதற்காக
(பாகிஸ்தான் சீக்கியர் பிரச்னை தீர்ப்பாரா)

(அடைப்புக்குறிக்குள் இருப்பவை நமது கேள்வி)