Monday, May 25, 2009

பரிசலின் பதிவின் தொடர்ச்சி...

விஜய் கட்சி ஆரம்பிப்பது பற்றி பரிசல்..ஒரு பதிவு இட்டிருந்தார்.அப்பதிவின் தொடர்ச்சியாக இப்பதிவு..

இளையதளபதி விஜய்க்கு..

பரிசல் கடிதம் படித்தீர்களா..

அதில், பாக்யராஜ்,டி.ராஜேந்தர்,சரத்குமார்,சிவாஜி ஆகியோர் கட்சி ஆரம்பித்து தோல்வியடைந்ததைக் குறிப்பிட்டார்.அவர்கள் மட்டுமல்ல..அரசியலில்..ஒரு கட்சியில் இருந்துவிட்டு வெளியே வந்த தலைவர்களான..சம்பத், நெடுஞ்செழியன் பொன்றோரே தாக்கு பிடிக்கமுடியவில்லை.வைகோ ஏதோ..தள்ளிக்கொண்டிருக்கிறார்.கண்ணப்பன்..கட்சி ஆரம்பித்து..பின்.தி.மு.க.,வில் இணைந்து மீண்டும் அ.தி.மு.க., வந்து விட்டார்.திருனாவுக்கரசர் கட்சியாரம்பித்து..தனியே போணி ஆகாமல் பி.ஜே.பி.யில் சேர்ந்து காலம் தள்ளிக்கொண்டிருக்கிறார்.

இலட்சியநடிகர் எஸ்.எஸ்.ஆரை..ஞாபகம் இருக்கிறதா..அவரும் கட்சி ஆரம்பித்து ஏமாந்தவர்.

இதையெல்லாம்..ஏன் சொல்கிறேன் என்றால்..கட்சி ஆரம்பித்து..செயல் படுவது என்பது சாதாரண விஷயமல்ல.

மேலும்..மேலே நான் குறிப்பிட்ட நடிகர்கள் அனைவரும்..பாக்யராஜை தவிர்த்து..பதவியை அனுபவித்து விட்டு..ஆசையில் (பதவி ஆசை?) கட்சி ஆரம்பித்தவர்கள்.

ராஜேந்தர், தி.மு.க., எம்.எல்.ஏ., ஆக இருந்தவர்.,சரத்குமார் ராஜ்ய சபா உறுப்பினராக இருந்தார்,சிவாஜியும்..காங்கிரஸ் சார்பில் ராஜ்யசபாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.அதற்கு பின்னரே ..கட்சி ஆரம்பித்து..தலைவராக ஆசைப்பட்டவர்கள்.

பாக்யராஜோ..எம்.ஜி.ஆர்., தன்வாரிசு என்றதும்..கலையுலக வாரிசு என்கிறார்..என்பதை உணராது..அவரின் அரசியல் வாரிசாக எண்ணிவிட்டார்.

ரஜினி இன்றும்..தன் ரசிகர்களை இழந்துவிடக்கூடாது என்பதற்காக..அவ்வப்போது..எப்ப வருவேன்..எப்படி வருவேன்னு தெரியாது என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்.

விஜய்காந்த் ஓரளவு தாக்கு பிடித்திருக்கிறார்..இன்னும்..இவர் பயணம் நீண்டது.

இந்நிலையில் தாங்கள் கட்சி ஆரம்பிக்கப்போவதாக தகவல்கள் வருகின்றன.மக்கள் உங்கள் படத்தை பார்க்கிறார்கள் என்பது வேறு..அதுவே..உங்களுக்கு அரசியல் ஆதரவு என எண்ணுவது வேறு.இவ்விஷயத்தில் நடிகர்திலகத்தை தவிர வேறு சிறந்த உதாரணம் சொல்லமுடியாது.

மேலும்..நீங்கள் எளிதில் உணர்ச்சிவசப்படுபவர் என்பதை..உங்கள் நிருபர்கள் சந்திப்பு ஒன்றில்..நீரூபித்துவிட்டீர்கள்.அப்படிப்பட்டவர்கள் அரசியலுக்கு தகுதியில்லாதவர்கள்.

இதையும் மீறி உங்களுக்கு அரசியல் ஆசை இருந்தால்...ஏதேனும் கட்சியில் சேருங்கள்.,சட்டசபையிலோ,பாராளுமன்றத்திலோ நுழையுங்கள்..பிறகு..பார்க்கலாம்.

அதைவிடுத்து நீங்கள் சம்பாதித்த சொத்தை இழக்க ஆசைப்பட்டால்..கட்சி ஆரம்பியுங்கள்.

விதி வலியது...அவ்வளவுதான்.

இவண்
தங்கள் வெள்ளித்திரை ரசிகன்.

4 comments:

Unknown said...

அவரவர் அவரவருக்கு என்ன தெரியுமோ/முடியுமோ அதுதான் செய்ய வேண்டும். அதை விடுத்து இப்படி செய்தால் புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதையாகிவிடும்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ananth

நசரேயன் said...

இளைய தளபதி விஜய் வாழ்க

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி நசரேயன்