Thursday, May 28, 2009

ஆரிய..திராவிடர் போராட்டமும்..அண்ணாசாமியும்..

ஒரு திருமணவிழாவில்..தமிழக முதல்வர் கலைஞர் கலந்துக் கொண்டு..பேசுகையில்..திராவிட..ஆரிய போராட்டம் மீண்டும் ஆரம்பம் என்றார்.

அரசியலில் சமீபத்தில் இணைந்த அதி புத்திசாலி அண்ணாசாமிக்கு அதிரடியாக ஏதேனும் செய்து..தன்னை நிலைப்படுத்திக் கொள்ள சந்தர்ப்பத்தை எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தார்.

முதல்வரின் இந்த பேச்சு அவர் கவனத்தைக் கவர..உடனே அறிக்கை விடுத்தார்..அதன் விவரம் வருமாறு..

பிரதமர் உடனடியாக தலையிட்டு...இப்போராட்டத்தை நிறுத்த வேண்டும்.

கட்சியில் அனைவரும்..பிரதமருக்கு..போராட்டத்தை நிறுத்தச் சொல்லி தந்தி அனுப்ப வேண்டும்.

வருகின்ற திங்களன்று..மனிதச்சங்கிலி நடத்தப்படும்.இதில் கட்சி வேறுபாடு கருதாதுஅனைவரும் கலந்துக் கொண்டு..போராட்டத்தை நிறுத்த ஒத்துழைக்க வேண்டும்.

இதற்கும்..மத்திய அரசு மசியாவிட்டால்...ஒரு நாள்..அல்லது குறைந்தது 6 மணி நேரம்..உண்ணாவிரதம் இருப்போம்.

அமெரிக்கா போன்ற வல்லரசுகள்..இதில் தலையிட்டு...போராட்டத்தை நிறுத்த ஆவன செய்ய வேண்டும்.

போராட்டத்தால்...பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு..உணவு, மருந்து ஆகியவைகளை உடனே மைய அரசு கிடைத்திட வழி செய்ய வேண்டும்.

2 comments:

ILA (a) இளா said...

ore comedythaan ponga. vera velai illattaa ippadi onnu vanthurum

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி இளா