Thursday, May 21, 2009

தி.மு.க., - காங்கிரஸ் பேச்சு வார்த்தை தோல்வி..

நாளை மன்மோகன்சிங் பிரதமராக பதவி ஏற்கிறார்.தி.மு.க.,விற்கான அமைச்சர்கள் பற்றிய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால்..தி.மு.க., வெளியே இருந்து ஆதரவு தரும் என தெரிகிறது.மேலும் நாளை நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

டி.ஆர்.பாலு, ராஜா தவிர அழகிரி,தயாநிதி மாறன் ஆகியவர்களுக்கு கேபினட் அந்தஸ்தும்..கனிமொழி மற்றும் இருவருக்கு ஸ்டேட் அமைச்சர்களும் தி.மு.க., கேட்கிறது.

18 எம்.பி.க்கள் கொண்ட கட்சிக்கு இது அதிகம் என காங்கிரஸ் கருதுகிறது.மேலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு அமைச்சர் பதவி தர இயலாது என காரணம் காட்டிவிட்டது.

காங்கிரஸ் சென்ற தேர்தலில்..கலைஞர் தங்குமிடம் வந்து..பேசியது..ஆனால்..இம்முறை..உடல்நிலை சரியில்லாத போதும்..அவர் சோனியாவைத் தேடி அவர் இல்லம் சென்றார்.

எதிர்ப்பார்த்ததைவிட..அதிக எம்.பி.க்கள் ஆதரவு இருப்பதால்..காங்கிரஸ் தன் வேலையை காட்ட ஆரம்பித்து விட்டது.

ஏற்கனவே தேர்தலுக்குப் பின் தி.மு.க., கழட்டி விடப்படும்..என்ற வதந்தி..இப்போது உண்மையாகி விடும் போலிருக்கிறது.

கலைஞர் அரசியல் வாழ்வில்..சென்றமுறை காங்கிரஸ் முழுகாலமும் ஆட்சியில் நீடிக்க ..செய்த வேலைகள்..அவர் பெயருக்கு..சில களங்களை வரவழைத்தன என்பது..எவ்வளவு உண்மையோ..அவ்வளவு உண்மை நன்றி கெட்ட கட்சி காங்கிரஸ் என்பதும்.

2 comments:

Paddy said...

Tamilians,

We are unfortunate to have such a grandfather (M.K). See at the age of 80+ he is working for his sons,daughter and grand son. When it comes to his family, he has all the stamina the in the world, he can fly to Delhi and can stand up present(beg) his cause to PM. He claims he is the guardian for tamils, when it came to Tamil issue, he found only the mode of fax for communication, probably he has forgotten registered post or inland letter to send letter to PM. He can think he is still smart in his 80's but should not think every one his fool. If he has principle or moral he should announce to the whole that none should call him as Guardian for Tamils. See the other side of the world, one person in late 50's has to scarify his 30yr old son for th cause of freedom. If you ask MK about this he will say he doesn't want say comments on individual. MK and his heirs should get out of the politics, if they have self respect or any morale.

bala said...

ராதாகிருஷ்ணன் அய்யா,

பேராசை பிடித்த தி மு க வை கழட்டி விட காங்கிரசுக்கு ஒரு அரிய சந்தர்ப்பம்.ஆனால் தொடை நடுங்கியான் காங்கிரசுக்கு தில் இருக்குமென்று தோணவில்லை.

சொல்லப் போனால் போன மந்திரி சபையில் மிகவும் கீழ்த்தரமான மந்திரிகள் என்ற பெயரை தட்டிச் சென்று சாதனை படைத்தது நம்ம டி ஆர் பாலுவும்,ராஜாவும் தான்.பலே கில்லாடியான ஷிபு சோரேன் கூட இந்த கழக மூஞ்சிகளின் முன்னால் நிறக முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டு ஜார்கண்டுக்கு ஓடிப் போனார்.

ஆனால் தமிழர்களுக்குத் தான் தெரியுமே.நிர்வாகத் திறமையின்மையிலும்,ஊழலிலும் கழகக் கண்மணிகளை மிஞ்சுவதற்கு இனிமேல் இன்னொரு மஞ்ச துண்டு தான் பிறந்து வரணும்.வாழ்க தமிழனுக்கு பெருமை சேர்க்கும் கழகம்.

பாலா