Saturday, October 3, 2009

கலைஞர் என்னும் கலைஞன் - 2

முதல் பதிவு

1952ல் தமிழ்த் திரை உலகையே திரும்பிப் பார்க்க வைத்த படம் பராசக்தி.தயாரிப்பு பி.ஏ.பெருமாள், மற்றும் ஏ.வி.எம்., நிறுவனம்.சுதர்சனம் இசை.வி.சி. கணேசனுடன்..எஸ்.எஸ்.ஆருக்கும் முதல் படம்.கலைஞரின் இப்படத்திற்கான வசனம் எங்கும் பேசப்பட்டது.வசனத்திற்கான இசைத்தட்டு வெளியாகி சக்கைப் போடு போட்டது.நீதிமன்ற வசனங்கள் அப்போது அனைவருக்கும் மனப்பாடம்.கலைஞரின் அன்றைய ஒரு வசனம்..சமீபத்தில் காஞ்சிபுரம் கோவில் அர்ச்சகர் விஷயத்தில் இன்றும் பொருந்துகிறது.

'பூசாரியைத் தாக்கினேன்..பக்திக்காக இல்லை..அந்த பக்தி பகல் வேஷம் ஆகிவிடக் கூடாதே என்று'

அப்படத்தில்..'கா..கா..' என்ற பாடலும்..'பூமாலை நீ ஏன் மண்மீது வந்தேன் பிறந்தாய்' என்ற பாடல்கள் கலைஞர் எழுதியது.

மாபெரும் வெற்றி பெற்ற அப்படம் 42 வாரங்கள் ஓடியது.

52ல் வந்த மற்றொரு வெற்றி படம் 'பணம்'

என்.எஸ்.கிருஷ்ணன் இயக்கத்தில் வந்த இப்படத்திற்கான திரைக்கதை,வசனம் கலைஞர்.சிவாஜி கணேசன் கதாநாயகன்.இசை விஸ்வனாதன் - ராமமூர்த்தி

53ல் வந்த மற்றொரு மறக்கமுடியா படம் 'திரும்பிப்பார்'

மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பு.டி.ஆர்.சுந்தரம் இயக்கம்.சிவாஜிக்கு நெகடிவ் பாத்திரம்.இப்படத்தில் அரசியல் நையாண்டி வசனங்கள் அதிகம்.இச்சமயம்..நேரு..தி.மு.க., கட்சியைப் பற்றி அடித்த கமெண்ட்
'நான்சென்ஸ்'என்று.இப்படத்தில்..நேருவைப்போல கறுப்பு கண்ணாடி அணிந்து சிவாஜி அவ்வார்த்தையை அடிக்கடி கூறுவார்.பண்டரிபாய்,தங்கவேலு ஆகியோர் உடன் நடித்திருந்தனர்.

படம் வெளிவந்து 57 ஆண்டுகள் ஆகியும்..இன்னும் பாத்திரத்தின் பெயர் மனதில் நிற்கிறது என்றால்..அதற்கு கலைஞரே காரணம்.

பராசக்தியில்..சிவாஜியின் பெயர் குணசேகரன்,ஸ்ரீரஞ்சனி பெயர் கல்யாணி

திரும்பிப்பாரில் சிவாஜி பெயர் பரந்தாமன்

1953 ல் வந்த படம் 'நாம்'

ஏ.காசிலிங்கமும்..கலைஞரின் மேகலா பிக்சர்ஸும் சேர்ந்து எடுத்த படம்.எம்.ஜி.ஆர்., பி.கே.சரஸ்வதி நடித்தபடம்.

இப்படத்தில் ஒரு காட்சியில் எம்.ஜி.ஆரை பி.எஸ்.வீரப்பா காலால் உதைப்பது போன்ற காட்சி வரும்..பாத்திரத்தின் தன்மையை அறிந்த மக்கள் அதை அன்று ஏற்றுக் கொண்டனர்.

1954ல் வந்த படங்கள் அடுத்த பதிவில்..

4 comments:

Starjan (ஸ்டார்ஜன்) said...

I am first

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஒண்ணில இருந்து 20வரைக்கும் கொண்டாட்டம் கொண்டாட்டம்,

திருப்பதி உண்டியலில் சேர்ந்து போணாயோ

திருவண்ணாமலை குகை புகுந்தாயா..,,,

பாட்டெல்லாம்

பணத்தில் தானே தல

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஸ்டார்ஜன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

///SUREஷ் (பழனியிலிருந்து) said...
ஒண்ணில இருந்து 20வரைக்கும் கொண்டாட்டம் கொண்டாட்டம்,

திருப்பதி உண்டியலில் சேர்ந்து போணாயோ

திருவண்ணாமலை குகை புகுந்தாயா..,,,

பாட்டெல்லாம்

பணத்தில் தானே தல//

அந்தப் பாட்டு முதல்தேதி என்ற படத்தில் வரும்.
வருகைக்கு நன்றி சுரேஷ்